சில திரைப்படங்களை உடனே சென்று பார்த்துவிட சில விடயங்கள் காரணங்களாக இருந்துவிடுகின்றன. நடிகர்கள், திரைக்கதை, அப்போதைய மனோநிலை, நண்பர்களின் தூண்டுதல் என்பன அதில் சில. இவையெல்லாம் இல்லாமல் ஓர் இயக்குனரின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே ‘அங்காடித் தெரு’வுக்குச் சென்றேன்.
2006 ஆம் ஆண்டில் தமிழகம் சென்றிருந்த போது மனுஷ்ய புத்திரனோடு வசந்தபாலனின் ‘வெயில்’ திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். பிரமுகர்களின் சிறப்புக் காட்சி அது. எங்களுக்குப் பின்னால் எழுத்தாளர் திலகவதி அமர்ந்திருந்தார். உடனே அவரின் ‘கல்மரம்’ நாவல் நினைவிற்கு வந்தது. அந்த நாவலுக்கு எப்படி ‘சாகித்திய அகாதமி’ விருது கிடைத்தது எனக் கேட்க நினைத்து திரும்பினேன். பின்னர், அவர் ‘ஐ.பி.எஸ்’ என்பது நினைவுக்கு வந்து வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். நடிகர் பசுபதியிடம் ஒரு ‘ஹலோ’ சொன்னேன். படம் என்னை மிகவும் நெகிழ வைத்திருந்தது.படம் முடிந்தபின் வசந்தபாலனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். திரும்பிச் செல்லும் போது மனுஷ்ய புத்திரனிடம் படம் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். “உயிர்மையில் எழுதுங்களேன்”, என்றார். “எழுதவேண்டும்”, என்றதோடு சரி.
Continue reading →