11.10.2015ல் வல்லினமும் மை ஸ்கில் அறவாரியமும் இணைந்து ‘மாற்றுக்கல்வி’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து கவிஞர் கலாப்ரியா மற்றும் பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கிராண்ட் பசிப்பிக்…
Author: வல்லினம்
கல்விக்கூடங்களில் வல்லினத்தின் தொடர் இலக்கியப் பயணம்

வல்லினம் இவ்வாண்டு தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் இலக்கியக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இதில் நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்குகளை வல்லினம் சார்பாக பேராசிரியர்கள் வீ.அரசு மற்றும் எம்.ஏ.நுஃமான் ஆகியோர் வழிநடத்தினர். 12.10.2015 (நண்பகல் 2.00)- உப்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் முதல் அங்கமாக இயக்குனர் சஞ்சை அவர்களின் ‘ஜகாட்’…
இலக்கியத்தில் அரசியல்

மலேசிய சோசியலிஸ கட்சியுடன் இணைந்து வல்லினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஈப்போவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா ஆகியோர் ‘இலக்கியத்தில் அரசியல்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் நாகேந்திரன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் மு.சரஸ்வதி…
மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்

மைஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு ஏற்பாட்டில் மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும் இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர் திகதி: 11.10.2015 (ஞாயிறு) நேரம்: மாலை 3.30 – 5.30 வரை சிறப்புரை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை பேராசிரியர் வீ.அரசு, தமிழ்நாடு ம.நவீன் நூல் வெளியீடு தற்காலக் கல்வி முறை குறித்த…
வல்லினம் கலை இலக்கிய விழா 7

வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது. திகதி: 1.11.2015 (ஞாயிறு) நேரம்: 1.00pm இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு: மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன் அவர்களின் பேனாவிலிருந்து…
குறையொன்றுமில்லை: நூல் வெளியீடு

கடந்த 15/03/2015 அன்று, சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலான ‘குறையொன்றுமில்லை’ என்ற நூலை வல்லினம் வெளியீடு செய்தது. பிரம்மானந்தாவின் நூலை வல்லினம் வெளியிடுகிறது என்றவுடன் ஏற்பட்ட பல்வேறு தரப்பட்ட குழப்பங்களுக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்த எழுத்தாளர் தயாஜி பதில் கூறினார். வல்லினம் எந்த இசங்களையும் சார்ந்து இயங்கவில்லை என்றும் அது முற்றிலும்…
நோவாவின் புதிய தொடர்…
‘உடைந்த கண்ணாடியை பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை வாங்க கூடாது’ கர்ப்ப காலத்தில் கூந்தல் வெட்டக்கூடாது’ இப்படி ‘கூடாது, கூடாது. கூடாது’ என நிறைய கூடாதுகளை நாம் யாவரும் கேட்டிருக்கலாம். ஏன் கூடாது என்று…
முக்கிய அறிவிப்புகள்
வல்லினம் வாசகர்களே… பறை 2015க்கான பறை இதழ் இப்போது குறிப்பிட்ட சில கடைகளில் கிடைக்கும். இம்முறை பறை ஈழ இலக்கியச் சிறப்பிதழாக மலந்துள்ளது. இதழ் வேண்டுபவர்கள் 0163194522 என்ற எண்ணில் ம.நவீனை தொடர்ப்பு கொள்ளலாம். யாழ் யாழ் இம்முறை 32 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 16 பக்கங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் 16 பக்கங்கள் இடைநிலைப்பள்ளி என பகுக்கப்பட்டு…
கலை இலக்கிய விழா சிறப்பிதழ்
வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கிய விழா 2.11.2014ல் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை அரங்கத்தினருக்குப் புரிய வைத்தது. அடுத்ததாக ‘வல்லினம் விருது’ பெறப்போகும் எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் வாழ்வைச் சொல்லும் படக்காட்சியும் திரையில் ஒளிபரப்பானது. இவ்விரு படத்தொகுப்பையும் எழுத்தாளர் நவீன் செல்வங்கலை அவர்கள் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 – 2014: வல்லினம் நிகழ்வுகள் ஒரு பார்வை
அ. ரெங்கசாமி காணொளி
நிகழ்வை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் வல்லினம் மற்றும் பறை இதழ் ஆசிரியர் ம. நவீன் உரையாற்றினார். வல்லினம் குறித்த முன்முடிவுகளை அவர் தனது உரையில் முற்றாக மறுத்தார். வல்லினம் மொழியைக் காப்பதற்காகவோ, பெரியாரியத்தை வளர்ப்பதற்காகவோ, மார்க்ஸியத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமல்ல எனக்கூறிய அவர் சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கவே வல்லினம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். சிந்திப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது எனவும், அதை எவ்வாறு கடந்து செல்வது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
ம. நவீன் உரை
அ. ரெங்கசாமியின் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ நூலை மா. சண்முகசிவா வெளியீடு செய்தார். இயக்குனர் லீனா மணிமேகலை முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீடு
தனது உரையில் ரெங்கசாமியின் அந்நூல் குறித்து சண்முகசிவா விரிவாகப் பேசினார். ஒரு சுயவரலாறு நூல் எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் உரை இருந்தது. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் மா. சண்முகசிவா அ. ரெங்கசாமியின் சுயவரலாறு நூல் குறித்து பேசினார்.
மா. சண்முகசிவா உரை
அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து பேச கெடாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அ. ரெங்கசாமிக்கு தமது தியான மன்றம் மூலம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ எனும் விருது கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் அவரது இதர நூல்களை வாசித்தவர் என்ற முறையிலும் அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து விளக்கினார். இதற்கு முந்தைய மூத்த தலைமுறையின் தியாகத்தில் இருந்தே இன்றைய தலைமுறை மேலோங்கி செல்கிறது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.
சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி உரை
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அ. ரெங்கசாமிக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வழக்கறிஞர் சி. பசுபதி அவர்கள் அ. ரெங்கசாமிக்கு விருது கோப்பை, விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காலோசை, வெளியிடப்பட்ட நூலுக்கான ராயல்டி தொகை இரண்டாயிரம் என வழங்கி சிறப்பு செய்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் சி.பசுபதி, மாற்று சிந்தனைகள் சமூகத்துக்கு உயரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என கூறினார். அதோடு, வல்லினம் ஓர் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக மாறுவதன் வழி நாடு முழுக்கவும் அதன் தீவிரமான மாற்று சிந்தனை பரவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வழக்கறிஞர் சி. பசுபதி உரை
முதல் அங்கத்தின் நிறைவாக, விருதைப் பெற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமி பேசினார். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வல்லினம் தன்னை அடையாளம் கண்டு விருது கொடுத்ததை மகிழ்ச்சியான தருணமாகப் பகிர்ந்துகொண்டார். தமிழர் எனும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அ. ரெங்கசாமி உரை
முதல் அங்கம் ஏறக்குறைய நிறைவு பெற இரண்டாம் அங்கம் தொடங்கியது.
எழுத்தாளர் கே.பாலமுருகன் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் கவிதை, திரைப்படம் என விரிவாக தனது ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்தார்.
கே. பாலமுருகன் உரை
அதன் பின்னர் இரண்டாவது அங்கத்தை கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை வழி நடத்தினார். முதலில் அவரது ஆவணப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. தனது திரைப்பட முயற்சி குறித்து சுருக்கமாகப் பேசியவர், அவையினரிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். திரைப்படம், சமூகம், அரசியல், ஈழம் என அவர் பதில்கள் விரிவாகவும் ஆழமாகவும் இருந்தன.
லீனா மணிமேகலை உரை & கலந்துரையாடல்
மாலை 5.30க்கு அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
வல்லினம் கலை, இலக்கிய விழா 6 புகைப்பட தொகுப்பு
- முக்கிய பிரமுகர்கள்
- வல்லினம் விருது
- ம. நவீன்
- சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி
- சி பசுபதி
- அ ரெங்கசாமி
- அ ரெங்கசாமிக்கு வல்லினம் விருது
- அ ரெங்கசாமிக்கு வல்லினம் விருது
- டாக்டர் மா சண்முகசிவா & லீனா மணிமேகலை
- கே பாலமுருகன்
- லீனா மணிமேகலை
- வல்லினம் குழுவினர்
- அ ரெங்கசாமி & வல்லினம் குழுவினர்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- யோகி
- சல்மா தினேஸ்வரி
வல்லினம் கலை, இலக்கிய விழா – 6
2.11.2014ல் வல்லினம் குழு கலை இலக்கிய விழாவினை ஆறாவது ஆண்டாக நடத்த உள்ளது. இந்நிகழ்வில் முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலான ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு…
செலாஞ்சார் அம்பாட் நாவல் அறிமுக நிகழ்வும் வெளியீடும்

வரலாறு தொடர்பான செய்திகளைப் பதிவு செய்தல் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களின் வரலாறு தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி வைத்தல் என்பது பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஒரு நாட்டினுடைய வரலாறுகள் பொதுவாகவே அதிகார வர்கத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பவையாகவும் அவர்களைச் சார்ந்து ஆவனப்படுத்தப்படுபவையாகவுமே இருக்கும். அது…
கலை இலக்கிய விழா 9
வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…
லீனா மணிமேகலை மலேசிய வருகை

2.11.2014ல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கவிஞர் / இயக்குனர் லீனா மணிமேகலை கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் கலை ஊடகச் செயற்பாட்டாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. மஹாராஜபுரம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் தமிழாசிரியர் இரகுபதி அவர்களுக்குப் பிறந்தவர்தான் லீனா. அவர் மிகச் சிறந்த ஆவணப்படங்களையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழின் மிக முக்கியமான…
கலை இலக்கிய விழா 6 (2.11.2014)
வருடம்தோறும் வல்லினம் இலக்கியக்குழு முன்னெடுத்து நடத்தும் ‘கலை, இலக்கிய விழா’ ஆறாம் ஆண்டாக இவ்வருடம் 2.11.2014ல் நடைபெறுகிறது. பல புதிய அங்கங்களுடன் இவ்வருடம் கலை இலக்கிய விழாவின் வேலைகள் துவங்கியுள்ளது. வல்லினம் விருது வல்லினம் முதல் ஆண்டாக இவ்வருடம் ‘வல்லினம் விருதை’ ஏற்பாடு செய்துள்ளது. இம்முறை வல்லினம் விருது எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதளிப்பு…
வல்லினத்தின் குறும்படப் பட்டறை

26.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர். நாட்டில் குறும்படப்போட்டிகள் அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும், அதன் பயன்பாடு மட்டுமே கலையாவதில்லை என்பதை…