Author: வல்லினம்

“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா

கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living…

சிறுகதை எழுதும் கலை

வல்லினம் மற்றும் தமிழாசியா இணைவில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து இலக்கிய வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வகையில் இம்மாதம் (10.7.2021) சனிக்கிழமை அ.பாண்டியன் மற்றும் ஶ்ரீகாந்தன் ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள் குறித்த விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துக்கொண்டவர்களுக்கு அவர்கள் வாசித்து…

சிங்கப்பூர் சிறப்பிதழ்

ஜூலை வல்லினம் இதழை சிங்கப்பூர் சிறப்பிதழாக தயார் செய்கிறோம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதழுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம். சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க புனைவுகள் குறித்து பிற நாட்டு படைப்பாளிகளும் கட்டுரைகள் அனுப்பலாம். படைப்புகளை 20.6.2021 க்குள் valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

இமையத்துடன் இரண்டு மணி நேரம்

அண்மையில் இமையத்துடன் இரண்டு மணி நேரம் எனும் நிகழ்ச்சி ‘வல்லினம்’ மற்றும் ‘தமிழாசியா’ இணைவில் நடைபெற்றது. முதல் அங்கமாக இமையம் அவர்களின் படைப்பு குறித்த நான்கு உரைகள் இடம் பெற்றன. அதன் இணைப்பு இமையம் படைப்புகள் தொடர்ந்து இமையம் அவர்களிடம் உரை இடம்பெற்றது. அதன் இணைப்பு இமையம் உரை

“புற வேற்றுமைகளால் மகிழ்வித்து; அக பேதங்களை அகற்றுவது பயணம்” – சுரேஷ் நாராயணன்

சுரேஷ் நாராயணன் பெரும் பயணி. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணித்திருக்கும் இவர் அகன்று விரிந்த உலகின் பெரு நிலப்பரப்புகளில் தன்னைத் தொலைத்து மீண்டும் தேடிக்கண்டு பிடிப்பதை பல ஆண்டுகளாகச் செய்து வரும் பயணி. உலகின் பார்வையாளனாக மாறி, அவ்வனுபவம்  விதைக்கும் தெளிவின் நீட்சியோடு அடுத்தடுத்த பயணத்தைத் தொடர்கிறார். sureshexplorer.com என்ற அகப்பக்கத்திலும் Suresh Explorer…

வல்லினம் செயலி

இலக்கிய இணைய இதழ்களில் வல்லினம் முதன் முறையாகச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாசகர்கள் இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். வல்லினத்தின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும். தரவிறக்க https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

2020இன் இறுதியில்…

இவ்வாண்டின் இறுதி இதழ் இது. வல்லினத்தின் 126ஆவது இதழ். சமகால நாவல்களின் சிறப்பிதழாக வெளிவருவது அதன் கூடுதல் சிறப்பு. இணையம் வழி இலக்கிய இதழை வழி நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன. முதலாவது, படைப்பாளர்களின் மனநிலை சார்ந்தது. ‘இணைய இதழ்தானே…’ எனும் எளிமைப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு. அடுத்ததாக இதழாசிரியர்களின் மனநிலை. கிடைத்ததை கொண்டு நிரப்பி வெளியிட்டால்…

ம.நவீனின் 3 நூல்கள் முன்பதிவு

ம.நவீனுடைய மூன்று நூல்கள் வல்லினம் மற்றும் யாவரும் கூட்டு முயற்சியில் இவ்வருடம் வெளிவருகிறது. மூன்று நூல்களின் விபரம்: 1.உச்சை சிறுகதை தொகுப்பு – 2020இல் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்டை ஓடி, போயாக் ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவரும் மூன்றாவது சிறுகதை நூல். 2.மனசிலாயோ – ம. நவீன் கேரளாவில் 21…

வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது. கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து…

நாவல் முகாமும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது நிகழ்ச்சியும்

வணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வல்லினத்தின்…

வல்லினம்: இளம் எழுத்தாளர் விருது

முன்னுரை கடந்த பல ஆண்டுகளாக வல்லினம் இலக்கிய குழு, மலேசிய இளஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்க்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. கோட்பாட்டு இலக்கிய பட்டறைகள், இலக்கிய முகாம்கள், கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளின் வழி மலேசிய இளைய சமூகத்திற்கு தீவிர இலக்கிய புரிதலை உருவாக்கவும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது

                                இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது வல்லினம் இலக்கியக் குழு  மூத்தப் படைப்பாளிகளை கௌரவிக்கும் பொருட்டும் அவர்கள் படைப்புகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவும் வல்லினம் விருதை 2015இல் தொடங்கியது. இவ்வருடம்  இளம் எழுத்தாளர்களுக்கான ‘வல்லினம் விருது’ ஒன்றை அறிமுகம்  செய்ய உள்ளது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் நினைவு கோப்பையும் இந்த தேர்ந்தெடுக்கப்படும் இளம்…

‘பேய்ச்சி’ சர்ச்சை

பேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். வல்லினம் தரப்பில் இருந்து தமிழ் மலர் நாளிதழுக்கு அந்நாவல் குறித்த நேர்மறையான பார்வைகள் வழங்கப்பட்டும் அந்த நாளிதழின் தர்மத்தின்படி அவை பிரசுரிக்க மறுக்கப்பட்டன. எனவே பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு தரப்புகளின் இருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டு வல்லினத்தில் பதிவிடப்படுகிறது. காழ்ப்பின் குரல்கள்…

பேய்ச்சி சர்ச்சை குறித்து சிறு விளக்கம்

கடந்த ஒரு மாத காலமாகப் பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுவதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இது பொதுவாக இலக்கியச் சூழலில் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் இம்முறை வல்லினம் தரப்பில் இருந்து  போலிஸ் புகாரும்  கடித வழி தொடர்பாடல்களும் நடத்தப்பட்டன. முதல் புகார் பேய்ச்சி நாவலின் சில பகுதிகள் மட்டும் அதன் ஆசிரியர் ம.நவீன்…