Author: ம.நவீன்

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி

கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன? தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள்…

சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை

ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும்…

கவிதையும் பொருளும்

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர்…

இருள் எனும் நிழல்

தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பது என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படலாம். பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழியைச் செவ்வியல் என்கிறோம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி…

காக்கா முட்டை: கலையும் அரசியலும்

மிக அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது ‘காக்கா முட்டை’ திரைப்படம் எடுத்தப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அழைத்துச்சென்றனர். ஒருவகையில் இந்தப்பயணம் எனக்கு முக்கியமானது. ஒரு கலைப்படைப்பு எதை மக்களுக்குக் காட்ட விளைகிறது என்பதும் அதன் தேர்வு எதுவாக இருக்கிறது என்பதும் இந்தப்பயணம் சன்னஞ்சன்னமாக உணர்த்தியது. கலை என்ற பெயரில் அதன் உன்னதங்களை…

‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்

பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால்…

பங்கோரில் வல்லினம் குழு: ஓர் அனுபவப் பகிர்வு

1.5.2015 (வெள்ளி) பங்கோர் தீவில் வல்லின இலக்கியச் சந்திப்புக்குக் கங்காதுரைதான் முழு பொறுப்பு ஏற்றிருந்தார். உணவு மற்றும் தங்குமிடம் என நேர்த்தியான ஏற்பாடுகள். தொழிலாளர் தினத்துடன்  விசாக தின விடுமுறையும் இணைந்திருந்ததாலும் தலைநகரில் அன்று ஜி.எஸ்.தி வரிக்கு எதிராக ஆங்காங்கு எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்ததாலும் மூன்று மணி நேர பயணம் சாலை நெரிசலால் எட்டு மணியாக…

அந்நியன்: வாழ்வெனும் அபத்தமும் விடுதலையும்

உலக இலக்கியங்களை வாசிக்க ஆர்வம் துளிர்த்தபோது நான் முதலில் தேர்வு செய்தது ‘அந்நியன்’ நாவல்தான். சிறிய நாவல். எளிமையான அட்டைப்படம். பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் The Outsider என மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல். வெ. ஶ்ரீராம் பிரஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருந்தார். அப்போது எனக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும். மிக உற்சாகமாக அந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தொடங்கியபோதே ஆல்பர்…

சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது. முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் ஆய்வு நூலான மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலின் வழி, மலேசியாவில்…

மாப்பஸானின் குதிரை

சிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம்…

டோட்டோ சானும் நமது கல்வி முறையும்

கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார். எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக…

அ.ரெங்கசாமி: வரலாற்றைப் புனைவாக்கும் கலைஞன்

ஆஸ்ட்ரோ நாவல் பரிசளிப்புப் போட்டியில்தான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்திருந்தது. அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சீ.முத்துசாமியின் சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்ததாலும் , நவீன இலக்கியத்தில் அவர்…

பேய் வீடு

அண்மையில் வல்லினம் குழுவினர் ஏற்பாட்டில் ‘பேய் வீடு’ ஒன்று மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 பேய்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அந்த வீட்டில் நுழைந்த பலரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான பேய் வீடுகளுக்குள் நுழைந்துள்ள அனுபவத்தில் அதன் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பேய் வீட்டை நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின்…

ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்

‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது. கொஞ்சம் கூட இலக்கிய அறிவு இல்லாத எழுத்தாளர் சங்க…

பெண் எழுத்து

இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின்…