Author: அ.பாண்டியன்

தூமகேது

சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான்.  நான் பின்னால்,  ஒரே பக்கமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலது  கையால் சுந்தரத்தின் தோளை இறுகப்பிடித்துக் கொண்டேன்.  மருத்துவமனை மேடு தெரிந்ததுமே தலையைச் சாய்த்து ஜப்பான் கல்லில்  சுருட்டுத்தாத்தா உட்கார்ந்திருக்கிறாரா என்று பார்த்தேன்.  அவர் எப்போதும் போல அங்கேதான் உட்கார்ந்திருந்தார். வாயில் துண்டு சுருட்டு நெருப்பு  இல்லாமல் துருத்திக்கொண்டிருந்தது.…

கூத்து

“சரி…. இறங்கு” என்றான் சேகர். நான் அவசரமாக இறங்கி நின்றேன். தலைக்கவசத்தைக் கலற்றியபோது ‘டும் டும்டும் டும் டும்டும்’  என கதி மாறாமல் முரசு அதிரும் சத்தம் கேட்டது. ஒலிபெருக்கியில் சீனத்தில் ஆண் குரல் எதிரொலிகளோடு கேட்டது. அவன் மோட்டர் சைக்கிளை பர்கர் வண்டிக்குப் பின்னால் சாய்வாக நிறுத்தி விட்டு சாவியை உருவிக் கொண்டு வந்தான்.…

சிலந்தி

தாவங்கட்டையில் ஊறிய மொசுடை அழுத்தித் தேய்த்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன். நசுங்கிய மொசுடு பரப்பிய நெடி மூக்கில் ராவியது. இரவு முழுவதும் விழித்திருந்ததால் எரிந்த கண்களை இடுக்கிக் கொண்டு தோளுக்கு மிக அருகில் மினுங்கும் வெள்ளிக் கோடுகளைப் பார்த்தேன். இழுத்துக் கட்டிய வாழைநார் போன்ற அந்தக் கோடுகள் சூரிய ஒளிபட்டு வானவில்லின் நிறங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கூர்ந்து…

வெள்ளிக் காசு

மூன்று பேர் மட்டுமே வந்திருப்பது எரிச்சலாக்கியது. இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என் வழக்கமான மாலை நேர குட்டித் தூக்கம் கெட்டிருப்பதால் லேசாகத் தலைவலியும் இருந்தது. கூடவே ராபியாவின் தொல்லை வேறு. அவள் வீட்டுக்கே செல்லவில்லை என காலையில் அணிந்த விளையாட்டு உடையும் அவள் சுமந்து வந்த புத்தக மூட்டையும்…

கங்காணிமார் பாடல்கள்

(Awak Cantik Macam Bunga Raya) தமிழ்த் திரைப்படங்களில் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று, வெளி நாடுகளுக்குச் சென்று படபிடிப்பை நடத்துவதாகும். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் வெளிநாட்டுக் காட்சி என்று சொல்லப்படுவது அந்நாட்டின் புறக்காட்சிகளை மட்டும்தான். அந்த நாடு ஓர் அரங்கு போன்றே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆகவே அந்த நாட்டின் இடங்களும் மனிதர்களும்…

‘அழகான மெளனம்’ : பதுக்கப்பட்ட உண்மைகள்

மலேசிய இலக்கியத்தில் நீங்கா இடம்பிடித்தக் களம் என்றால் அது தோட்ட புறம்தான். தோட்ட புற வாழ்க்கையை எத்தனை பக்கங்களுக்கு எழுதினாலும், எத்தனை பேர் வந்து எழுதினாலும் அது நிறைவடையாமல் நீண்டு கொண்டே செல்லக் கூடியதாக மலேசிய எழுத்தாளர்கள் மனதில் பதிந்து போய் கிடக்கின்றது. தோட்ட புறவாழ்வென்பது இரு வேறு காலகட்டங்களைக் கொண்டதாக வகுத்துக் கொள்ளலாம். முதலாவது…

பெயர் புரட்சி

மலேசியாவில் 80-ம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஒரு ‘புரட்சி’ சத்தமில்லாமல் நடந்தது.  ஆனால் அது சற்று விநோதமான மாற்றம் என்பதால் யாரும் புரட்சி பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இப்போது மீட்டுணர்ந்து பார்க்கையில், அந்த விநோத புரட்சிக்கு மூலமாக ஒரு புத்தகம் இருந்திருப்பதையும் அந்தப் புரட்சியில் என் அப்பாவும் ‘களமிறங்கிப் போராடியிருப்பதையும்’ என் அண்ணனும் நானும் அதற்கு…

பெண் குதிரை: வாசிப்பு அனுபவம்

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் பல்வேறு நவீன தாக்கங்களால் கவரப்பட்டு மாற்றங்களையும் தீவிரத்தையும் பெற்றபோதும் மலேசிய படைப்புகள் அதிகமும் மதியுரை கதைகளாகவே படைக்கப்பட்டன. எளிய குடும்பக் கதைகளாக அவை இருந்தன. வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே எதார்த்தவியல் தாக்கங்களையும் முற்போக்கு இலக்கியப் பாதிப்புகளையும் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தினர். தீவிர இலக்கிய உந்துசக்தியாக அவர்கள் இருந்தனர்.  அவர்களில் சை.பீர்முகமது…

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

கடந்த சில வாரங்களாக மலேசியர்களின் கவனம் முழுக்க கல்வி அமைச்சு அறிவித்த ஜாவி-காட் எழுத்தின் மீது குவிந்துள்ளது. தாய்மொழி பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் நான்காம் வகுப்பில் மலாய் மொழி பாடத்தில் ஜாவி காட் எழுத்து ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானது முதல் சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பது…

SAKA: பழிவாங்கும் குலதெய்வங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் நான் பணியாற்றிய பள்ளிக்கு புதிதாக ஓர் ஆசிரியர் மாற்றலாகி வந்தார். கம்பீரமான தோற்றத்துடன் இனிமையாகப் பழகக்கூடியவர். அவர் மாநில சுல்தானின் தூரத்து உறவினர் என்று நண்பர்கள் கூறினர். அவரின் தோற்றம் அரசகுலத்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இருந்தது. சில ஆண்டுகள் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டார். தொடர்ந்து…

மலைக்காடு: இன்னொரு முகம்

‘மலைக்காடு’ சீ. முத்துசாமியின் புதிய நாவல். தனது வழக்கமான களமான தோட்டப்புறத்தை மையப்படுத்தி இந்நாவலை அவர் எழுதியிருந்தாலும் அதன் பின்னணியில் தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். மலைக்காடு நாவல் மலேசியாவின் 1940ஆம் ஆண்டு காலகட்டத்தைத் தளமாகக் கொண்டது. புக்கிட் செம்பிலான் என்னும் தோட்டத்தை மையமாகக் கொண்டு சொல்லப்படும் இக்கதை, 1940களின் தோட்டப்புற வாழ்வுடன், மலேசிய வரலாற்றில் இன்றும்…

தையும் பொய்யும்

முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்று தமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது.  சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும்  முயற்சியில்,  முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக…

ஆறுமுகம் : ஒழுக்கவிதிகளுக்கு வெளியில்

சமூகம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, பழகும், சந்திக்கும் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. அல்லது வரலாறு பதிவு செய்துள்ள உன்னத மனிதர்களையும் லட்சியப் புருஷர்களையும் மட்டும் கொண்டதல்ல. நாம் கண்டுகொள்ளாத அல்லது திட்டமிட்டே அறிய விரும்பாத மனிதர்களும் சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருவருப்போடு நாம் ஒதுக்கிவைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கை…

ICERD: ஒரு பின்னடைவு

மொழி, இனம், மதம் என்ற ஏதோ ஓர் அடையாளத்தின் காரணமாகத் தன்னை தனித்து வெளிப்படுத்துவது மனித இயல்பாக இருந்தாலும் அதே அடையாளத்தைக் காரணமாக்கி மற்ற அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவதோ உரிமைகளைப் பறிப்பதோ மனித நாகரீக வளர்ச்சிக்கு எதிரானது. நாகரீக சமூகம் என்பதன் முதன்மை அடையாளமாக  ‘மண்ணில் வாழும் எல்லா மனிதனும் சமம்’ என்னும் பரந்த நோக்கை நோக்கி…

கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு

மலேசிய பின்னணி நாவல் என்றும் மலேசிய மக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது என்றும் பின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘கடவுச்சீட்டு’ நாவலை விடுமுறையில் நேரம் ஒதுக்கி வாசித்தேன். ‘கடவுச்சீட்டு’ மிக எளிய கதையமைப்பைக் கொண்ட நாவல். தமிழக கிராமம் ஒன்றில் வளர்ந்த பெண்ணை மலேசிய இளைஞன்  ஒருவன்,  (சில சமாதானங்களைச்…