விமர்சனம்

பேய்ச்சி: கதையல்ல வாழ்க்கை

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நாவலைக் கைகளில் ஏந்தி அதை வைக்க மணமில்லாமல் வாசித்து முடித்தேன்.

பிரபஞ்சன் சொல்வார் – கதை என்பது கதையே அல்ல, கதைவிடுவதும் அல்ல, நிகழ்ச்சிகளின் தொகுப்பும் அல்ல.. நிகழ்விற்குக் கீழே நிகழ்விற்கு வெளிப்படையாகத் தெரியாமல், நிகழ்வோடு அந்தரங்கமாக ஒரு நிகழ்வு நிகழ்கிறதல்லவா, அதுதான் கதை.

Continue reading

செலாஞ்சார் அம்பாட் : புனைவின் துர்க்கனவு

நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும்  நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.

Continue reading

பேய்ச்சி எனும் பேரொளி (ம.சுந்தரி)

பேய்ச்சி நாவல் தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின்வாழ்க்கை முறையை அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டும் நாவல். என் தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா அனைவரும் தோட்டப் புறங்களின்பின்னணியைக் கொண்டிருந்ததால் கதையினுள் என்னைச் சுலபமாகப் புகுத்திக் கொள்ள முடிந்தது. நானும் சிறு பிள்ளை பருவத்தில் தோட்டப்புறத்தை மகாராணி போல்சுற்றி வலம்வந்துள்ளேன். எனினும் நாவல் என்னை மீண்டும் ஒரு முறை தோட்டப்புறத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்து சென்றுவந்துள்ளது.

Continue reading

பேய்ச்சி: ஒரு வாசிப்பு அனுபவம் (காளிபிரஸாத்)

காளிப்ரஸாத்

தமிழகத்திலிருந்துக் கிளம்பி மலாயா சென்ற புலம் பெயர் மக்களின் வாழ்க்கையைத் தலைமுறை வாரியாக வருடக்கணக்குளோடு அளித்த நாவல்கள் ஏற்கனவே மலேசியாவில் எழுதப்பட்டிருக்கின்றன. அதை எழுதியவர்களில் சீ.முத்துச்சாமி முக்கியமானவர்.

Continue reading

பேய்ச்சி ஒரு பார்வை : மதியழகன் முனியாண்டி

இது ஒரு மிக நீண்ட பதிவு. பொறுமையும் நேரமும் இருப்பவர்கள் தாராளமாக வாசிக்கலாம். நேரமில்லாதவர்கள், அவசரத்தில் இருப்பவர்கள் Just Ignore.

விளக்கம்

1. எனக்கும் நவீனுக்கும் மலேசியத் தமிழ் எழுத்து படைப்புகள் குறித்த சர்ச்சை இருப்பதை எல்லோரும் அறிவார்கள். கடந்த காலங்களில் நானும் நவீனும் எழுத்து படைப்புகள் குறித்து கடும் சண்டை போட்டுக் கொண்டதை முகநூல் வழியாக எல்லோரும் படித்திருப்பார்கள்.

Continue reading

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி!

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2017/10/dsc_9914.jpgமலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் ‘பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் அவரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான சிறுகதைகள் தவிர்க்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயந்தி சங்கர் தனது முகநூலில் தெரிவித்திருந்தார். அந்த விமர்சனத்திற்குப் பிறகு வாசகர்களுக்காக அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த அவரது 10 முக்கியமான சிறுகதைகளை வாசித்தேன். அதற்கு முன்பும் பொதுவான அவரது சில சிறுகதைகளை வாசித்து அடைந்த மனச்சோர்வே இம்முறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Continue reading

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம்

1மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்ட நகர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது. ஆனால், ரெ.கார்த்திகேசு முன்னின்று உருவாக்கிய இவ்விதழ்கள் குறித்து ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் எளிய வாக்கியங்களோடு கடந்துபோவதுதான் ஆச்சரியம். ‘மணிமன்றம்’ அல்லது ‘முத்தமிழ் படிப்பகம்’ போன்ற பிரமாண்டமான தொடர் முயற்சிகளில் மொழி சார்ந்த அக்கறைகளுக்கும் ‘கதை வகுப்பு’, ‘ரசனை வகுப்பு’ போன்ற சிறுகதை புனைவுக்கான அடிப்படை முன்னெடுப்புகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு என்றாலும் இவற்றிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு பரிச்சார்த்தமான முயற்சிகளுக்கு என்றே தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ சிறு குழுவில் உள்ளவர்களின் எளிய முயற்சிதான் எனினும் அதுவே நவீன இலக்கியத்தின் பாணி என யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை.

Continue reading

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

jeevaரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை மட்டுமே சொல்ல முடிவதைப் பார்க்கிறேன். தொடக்கத்தில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர்களால் மொழிவழியாகக் கற்பனைசெய்ய முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவர்களால் சொற்களில் இருந்து ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. சொற்கள் வழியாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே செய்தனர். தெரிந்துகொண்டதைத் தகவல்களாகச் சேமித்து ஓரிரு வாக்கியங்களில் கூறினர். அதையே விமர்சனமாகவும் நம்பினர். கடைசிவரை அவர்களால் ஒரு சிறுகதையினுள் நுழைந்து அதன் நுட்பத்தை தரிசிக்கவே முடியாது.

Continue reading

கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

12239399_1213787101969081_2433590992940347593_oபத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை.

Continue reading

வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்

சிறுகதைகள் RM 15.00

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு என்று கூறுவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. தொகுப்பில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. கொள்கைகளை, கோட்பாடுகளை, தத்துவங்களை, முழக்கங்களை முன்னிருத்தி எழுதப்பட்ட கதை என்று ஒன்றையும் சொல்ல முடியாது. எளிய மனிதர்களுடைய வாழ்வில் அன்றாடம் நிகழும் சில கணங்களை இக்கதைகள் காட்சிப்படுத்தியுள்ளன. மனிதர்களுடைய வலியை, காயத்தை, கண்ணீரை, இயலாமையை, மேன்மைகளை, கீழ்மைத்தனங்களை, முழக்கமாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக எழுதப்பட்ட கதைகள்.

Continue reading