சிறுகதை

சிறுகதை: சியர்ஸ்

“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக் கலந்து குடிப்பதன் மகத்துவத்தைக் கண்டுபிடித்தவன் வேதியலை அரைகுறையாய் முடித்த மகா கலைஞனாக இருக்க வேண்டும். எப்போதும் தோன்றுவதுதான். ஒரு மிடறு குடித்துவிட்டு தொலைவியக்கியால் ஒலியைக் கூட்டினேன். ராக்கம்மாள் கையைத் தட்டினாள்.

Continue reading

சிறுகதை: ஒலிப்பேழை

“என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்றேன்.  

சுற்றும் முற்றும் பார்த்தவர் ஒலிப்பேழை ஒன்றை தனது பச்சை நிறத் துணிப்பையிலிருந்து எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் அதைப் பைக்குள் வைத்துக்கொண்டார்.

Continue reading

சிறுகதை: டிராகன்

இளங்கோவுக்குப் பசித்தது.

வயிற்றினுள் அமிலம் ஊற்றியதுபோல கொதித்துக் கொதித்து அடங்கியது. கொதிக்கும்போது கை கால்கள் நடுங்கின. அடங்கும்போது தலை வலித்தது. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட டிராகன் படத்தை சுருட்டி வைத்தான்.

அம்மா இன்னும் வரவில்லை.

Continue reading

சிறுகதை: பூனியான்

“இங்குதான் அவனை முதன்முறையாகப் பார்த்தேன்.”

ரீத்தா காட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியை ஆர்வமில்லாமல் பதிவு செய்துகொண்டே  மெல்ல கைப்பேசியை அவள் பக்கம் திருப்பினேன். பசுமை பின்னணியில் கருஞ்சிவப்பு உடை காமிராவில் தூக்கலாகத் தெரிந்தது. காற்றில் அவளது பஹால்புரி குர்தி, உடலோடு ஒட்டிக்கொண்டபோது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவள் என நினைத்துக்கொண்டேன். கழுத்தோடு ஒட்டியிருந்த மெல்லிய பிளாட்டின சங்கிலி ஒன்றிரண்டு முறை மின்னியது. 

Continue reading

சிறுகதை: கன்னி

“இழுக்குற நேக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அத தனியா செஞ்சி பாக்க தோணும்,” சரண் கையில் இருந்த பையைப் பிடுங்கினார் மாரி. பசையின் காட்டம் மூக்கில் ஏறியவுடன் அவனுக்கு கிர்ர் என்றது. மோட்டார் சைக்கிளை தோட்ட வாயில் காவலர் குடிலுக்கு எதிர்புறம் இருந்த விளக்குக் கம்பத்தை ஒட்டி நிறுத்தி, ஹேண்டல் பூட்டப்பட்டதை ஓரிருமுறை ஆட்டிப்பார்த்து சோதித்துக்கொண்டான்.

Continue reading

குலதெய்வத்தின் மொழி: பேய்ச்சி- கே.ஜே.அசோக்குமார்

ஒரு குடும்பம் உருக்கொள்வதற்கும் ஒரு சமூகம் உருவெடுக்கவும் பெண்ணின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு இனக்குழு தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு பெண்களின் பங்கு தேவையாக இருக்கிறது. கூடவே அதற்கு ஒரு கட்டமைப்பு தேவையாகவும் இருக்கிறது. அதன்மூலம் எழுதாத சட்டங்களாக சில நடைமுறைகளை மேற்கொள்கிறார்கள். அவை மீறமுடியாத அறமாக பாவிக்கிறார்கள். அதற்கு ஒரு தலைவன்/தலைவி உருவாகி அவர்கள் கடவுளர்களாக உருக்கொள்கிறார்கள்.

Continue reading

சிறுகதை : ராசன்

“உண்மையாகவே ரத்தினக்கல்லை எடுக்கதான் அமிர்கான் ராஜநாகத்தை வளர்த்தார் துவான்” தீபன் சொல்வதைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அமிருல்லா அலி சிரித்தார்.

“பேசாமல் இந்த வேலையை விட்டுட்டு பாம்புப்பண்ணை வைக்கலாம்போல,” அவருக்குச் சிரிப்பு அடங்கவில்லை.

“எல்லா பாம்பிலும் ரத்தினக்கல் கிடைக்காது துவான். அது வேறு மாதிரி நாகம்” என்றான். அதைக்கேட்டு அருகில் நின்ற காப்ரலும் சார்ஜனும் சிரிப்பது எரிச்சலை மூட்டியது.

Continue reading

சிறுகதை: உச்சை

கொட்டகைக்கு அருகில் நிழலசைவு தெரிந்தவுடன் முத்தண்ணன் திடுக்கிட்டு எழுந்தான். உச்சையின் நெடுநேர கனைப்பு கனவின் தொலைதூரத்தில் கேட்பதுபோல இருந்ததால் அயர்ந்துவிட்டிருந்தான். சமீப காலமாக அவன் கனவுகளில் மனிதர்களே வருவதில்லை. சிறு தீப்பொறி கனன்று கம்முவது தெரிந்தது. கண்களை கசக்கிப்பார்த்தான். நின்றிருக்கும் மனிதரின் தலைக்கு மேல் தொப்பியின் நிழல்வடிவம். துரைதான் என்று தெரிந்தவுடன் பயம் அதிகரித்தது.

Continue reading

கழுகு (சிறுகதை)

navin 01

“மொதல்ல அத நுப்பாட்டு!”

நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன்.

Continue reading

வெள்ளைப் பாப்பாத்தி

Preview Imageமினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவதுபோல இருக்கும்.

அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத் தாட்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லி கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும் வரை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அன்றைய தினத்தைத் தவறவிட்டால் வருட இறுதி விடுமுறை நீண்டுவிடும். பொதுவாக இறுதி ஆண்டுத் தேர்வு முடிந்தபின் பாடங்கள் நடக்காது. என்றாலும் ஆர்.எம்.டி உணவு  கிடைக்கும் என்பதால் அம்மாதான் தினமும் அவளைப் பள்ளிக்குச் செல்லும்படி விரட்டிக்கொண்டிருந்தாள்.

Continue reading