சிறுகதை

சிறுகதை: கொயோட்டி

சான் ஓசே நகருக்குள் அம்மா வலது காலை எடுத்து வைத்தது முதலே மாலதியின் முணுமுணுப்புத் தொடங்கிவிட்டது. மூன்றாவது நாள், அது முழு வாக்கியமாக உருகொண்டது.

“அவ்ளோ பாசம் இருந்தா ஒரு மாசம் லீவு போட்டுட்டு ஒங்க அம்மாவுக்கு பாதுகாப்பா  சென்னைக்கே போக வேண்டியதுதான,” என்றாள். அவள் தொலைவாகச் சென்றபிறகு ‘லீவு கெடைச்சா போவ மாட்டனா’ என எனக்குள் கூறி ஆறுதல் தேடிக்கொண்டேன்.

Continue reading

சிறுகதை: அற்புதம்

மூன்றாவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி கெய்லா குறித்து விசாரித்தபோது கால்களில் தளர்விருந்தது. அவள் ஐந்தாவது மாடியில்தான் வசிக்கிறாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். காற்றில் குளிர் அதிகரித்திருந்ததால் கைகளை குளிராடை பாக்கெட்டில் விட்டுக்கொண்டேன். நெடுநேரமாக நான் அவளைத் தேடி வந்த காரணத்தை ஒரு வயதான மூதாட்டியிடம் விளக்க முயன்றுக்கொண்டிருந்தேன். அவளுக்குக் காது மந்தம் என அறிந்தபோது கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. என் குரல் கேட்டு உள்ளே இருந்து என்னை வினோதமாகப் பார்த்த கண்களுக்குரியவன் வாட்டச்சாட்டமான இளைஞன் எனத் தெரிந்தபோது அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றேன். சொல்லப்போனால் முயற்சியிலிருந்து விடுபட்டு ஆஸ்டினை விட்டே புறப்பட்டுவிட தீர்மானித்தேன்.

Continue reading

கீலாக்காரன் (சிறுகதை)

“இங்கேருந்து ஓடிப் போயிடு!”என்றேன் ரகசியமாக. அதைச் சொல்லும் தைரியம் எனக்கு எப்படி வந்ததெனத் தெரியவில்லை. யாரும் வருகிறார்களா எனச் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டேன்.

சீத்தாராமன் நான் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல கனிவுடன் பார்த்தார்.

Continue reading

சிறுகதை: ஞமலி

மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில்  சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான். அசைவு வராததை உறுதி செய்துகொண்டவன் மறுபடியும் காலைத் தூக்கி அதன்மீது அடையாளத் துளிகள் வைத்தபோதுதான் நான் பதறிக்கொண்டு ஓடினேன். 

Continue reading

அப்சரா

“இது அப்சராக்களின் உலகம். மற்ற வழிகாட்டிகள் இந்து, பௌத்த ஆலயம் எனச் சொல்வதெல்லாம் ஏடுகளில் தவறாக எழுதப்பட்ட தகவல்கள் மட்டுமே. நீ விரும்பினால் உன்னிடம் அதை நிரூபிப்பேன்” என்று  காதருகில் கிசுகிசுத்தவளின் முகத்தைப் பார்த்தேன்.

Continue reading

சிறுகதை: வைரம்

“வைரத்த தோண்டி எடுத்துடலாமா?” எனக் குமாரசாமி கேட்டபோது ஒரு ஜோடி மஞ்சள் பறவைகள், விருட்டென கொன்றை மரத்திலிருந்து பறப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் அவை அங்கு இருந்ததை நான் கவனிக்கவில்லை. அது சித்திரை மாதம். மரத்தை மூடியிருந்த கொன்றை மலர்களுக்குள் அவை மறைந்து இருந்திருக்க வேண்டும்.

Continue reading

நகம் (சிறுகதை)

“காச கொண்டுப்போய் தூர போடுடா” என வளர்மதி கத்தவும் அப்போய் கொஞ்சம் பயந்துதான் போனான். திடுக்கிட்டு உறங்கி எழுந்தவளின் கண்கள் சிவப்பேறியிருந்தது. கரகரத்த குரலில் உறுமல்.

உறங்குவதற்கு முன் நெஞ்சை அழுத்திய அழுகை அப்படியே அங்கேயே அடைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். இன்னும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சூழ்ந்திருந்த சீன ஊதுவத்திகளின் புகை கதவைத்திறந்ததும் உள்ளே நுழைந்து மூக்கை எரித்தது. தொலைவில் கேட்ட நன்யின் இசை இருண்டு கிடந்த சாயுங்கால வீட்டை மேலும் துக்கமாக்கியது.

Continue reading

டிராகன் : கடிதம்

டிராகன் சிறுகதை

எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு, உங்கள் கதைகளை படித்த ஒரு வாசகனின் கடிதம். திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் வழியாகவே, வல்லினத்தில் நீங்கள் எழுதிய கதைகளை முன்னரே படித்திருக்கிறேன்.

Continue reading

பட்சி: கடிதம்

சிறுகதை: பட்சி

தருமசங்கட நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துவை பச்சையம்மன் மன்னிக்க வேண்டும் என வேண்டிடத் தோன்றுகிறது. கதையின் பின்னனி என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அது தவறாகவும் இருக்கலாம். எந்திரன் 2.0 திரைப்படதின் வில்லன் கதாப்பாத்திரம் பட்சிராஜன் உண்மையின் ORNITHOLOGY எனப்படும் பறவைகள் ஆராய்ச்சித் துறை அறிஞர் சலீம் அலி என்பாரின் நீட்சி ஆகும்.

Continue reading

சிறுகதை: பட்சி

“சிறுவனை நீங்கள் உடன் அழைத்து வருவது, எனக்கு அவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றவில்லை,” என்றார் மாலிக். மேடு ஏறி வந்ததில் அவருக்கு மூச்சிரைத்தது. வாய்வழியாக நீராவிப் புகை குபுக் குபுக்கென வெளியேறிக்கொண்டிருந்தது. அவரது உதவியாளன் எங்களைப்போல் குளிருடை அணியாமல் பழுப்பு நிற டீசட்டையுடன் கனத்துத் தொங்கும் பையைத் தோள்களில் சுமந்தபடி இயல்பாக நின்றுகொண்டிருந்தான். 

Continue reading