தயாஜியின் கதை சர்ச்சையானப்பின்னர் பலரும் பலவித கருத்துகளைச் சொன்னாலும் அதில் எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் சொன்னது மட்டும் மிக அர்த்தம் வாய்ந்தது. “வல்லினம் மஞ்சள் பத்திரிகைபோல” நடத்துப்படுவதாகச் சொல்லியிருந்தார். நல்லக் கருத்துதான். அந்த நிமிடத்திலிருந்து ராஜேந்திரனிடம்தான் இனி ஓர் இதழை எப்படி நடத்துவது என பயிற்சி பெறலாம் என முடிவெடுத்திருந்தேன்.
கட்டுரை/பத்தி
காதல், வல்லினம், பறை மற்றும் நாங்கள்…
நான் நண்பர்களுடன் இருக்கும் போது அதிக உற்சாகம் அடைபவன். இதழியல் தொடர்பான எவ்வித தொடக்கமும் இல்லாத போதே எனக்கு நண்பர்கள் ஆனவர்கள் ஓவியர் சந்துருவும் பூங்குழலியும். மாற்றுக்கருத்துகளால் சிவம் எதிரியாக இருந்து நண்பரானவர். எங்களிடம் அப்போதெல்லாம் பெரிய கனவுகள் இல்லாத போதும் இலக்கியம் தொடர்பான நிறைந்த ஆர்வம் இருந்தது. பின்னாளில் இந்த ஆர்வம்தான் ‘காதல்’ இதழ் தொடங்க உதவியாக தூண்டுகோளாக இருந்தது.
பப்பிகள்
நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான். இன்று ஒரு நாட்டில் இருந்தபடியே மற்றொரு நாட்டை ஏவுகணைகள் மூலம் தாக்க முடியும் என்கிறார்கள். அந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்ததே எங்கள் கம்பம்தான். வீட்டில் இருந்தபடியே திட்டித்தீர்க்கலாம். பாதுகாப்பும் கூட.
ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!
12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது என இளம் தலைமுறை எழுத்தாளர்கள் முடிவெடுத்தது வரவேற்புக்குறியது. அதிலும் கடந்த வருடத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 19 பேரில் கே.பாலமுருகன், தயாஜி, அ.பாண்டியன், சுதந்திரன் போன்றவர்கள் இச்சூழலை எதிர்க்கும் முகமாக தங்களுக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கீகாரம் தேவை இல்லை எனக்கூறியுள்ளது நடப்பு இலக்கியச் சூழலின் மேல் நம்பிக்கையைப் பாய்க்கிறது.
முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!
அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு ‘தமிழன்டா’ என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும் தமிழர்களிடம் இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது.
மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!
ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள். அவர்கள் தொணி இவ்வாறு இருந்தது.
நகுலனின் நகரம்
பா.அ.சிவம் : தொலைந்து போன கவிதை பறவை!
கைமாறு செய்கிற
எண்ணமெல்லாம்
சாம்பலாகிப் போனது
விபத்திலிறந்த என்னை
எரியூட்டுகிற பொழுது! – பா.அ.சிவம்
Park Jae-sang
பணக்கா ரனாகப் பிறந்தால் வாழ்க்கை எவ்வளவு எளிது தெரியுமா? என்பது போன்ற புலம்பல்களைப் பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். என்னைக் கேட்டால் அது ஒருவகையில் கொடுமைதான்.
Continue reading