கட்டுரை/பத்தி

த‌மிழ் எழுத்தாளர் ச‌ங்க‌ம் – விருது – எலும்புத்துண்டு

விஸ்கி ம‌ணிய‌த்தின் ச‌காக்க‌ளும் சாமிவேலுவின் அடிவ‌ருடிக‌ளும் கார‌ணம் இல்லாம‌ல் ஒருவ‌ருக்கொருவ‌ர் ஏற்ப‌டுத்திக்கொள்ளும் ச‌ட‌ங்கு பூர்வ‌மான‌ ச‌ர்ச்சைக‌ள் போல, ம‌லேசிய‌த் த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தை விம‌ர்சிப்ப‌தும் ஒரு குழு சார்ந்த‌ அர‌சிய‌லாக‌ சில‌ ச‌ம‌யங்க‌ளில் அத‌ன் த‌லைவ‌ராலேயே வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் ஆப‌த்து இந்த‌க் க‌ட்டுரைக்கும் நிக‌ழ‌லாம். ப‌ல்வேறு சூழ‌ல்க‌ளில் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தின் போக்கு குறித்து விம‌ர்சித்த‌தின் ப‌ல‌னாக‌ வ‌ரும் தொலைபேசி அழைப்புக‌ளின் மூல‌ம் காதில் இர‌த்த‌ம் வ‌ழிந்த‌துதான் மிச்ச‌ம். சுய‌ புராண‌ங்க‌ளும்… வெட்டிப் பேச்சுக‌ளும்… அங்க‌லாய்ப்புக‌ளும்… மிர‌ட்ட‌ல்க‌ளும் வெளிப‌டுமே த‌விர‌ நிபுண‌த்துவ‌த்தோடு அவ‌ர்க‌ள் த‌ர‌ப்பு சார்ந்த‌ தெளிவான‌ விள‌க்க‌ம் இதுவ‌ரையில் வெளிவ‌ந்த‌பாடில்லை. ஆச்ச‌ரிய‌மாக‌ நான் ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தின் போக்கு குறித்து ஒரு நேர்காண‌லில் ப‌திவு செய்த‌ என‌து க‌ருத்துக‌ளுக்கு அத‌ன் த‌லைவ‌ர் பெ.இராஜேந்திர‌ன் ப‌திலுரைக்கும் வித‌மாக அதே ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் சில‌ க‌ருத்துக‌ளை முன் வைத்திருந்தார். அதில் ஒரு ஆய்வாள‌னுக்கே உரிய‌ சில‌ புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ளின் வ‌ழி த‌ன் அற்புத‌மான‌ க‌ருத்தைப் ப‌திவு செய்திருந்தார். அதில் அவ‌ர் எப்போதும் போல‌ ‘எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தைக் குறை சொல்ப‌வ‌ர்க‌ள் சிறு கூட்ட‌த்தின‌ர்தான். அவ‌ர்க‌ள் 6 அல்ல‌து 7 பேர் ம‌ட்டுமே’ என‌ க‌ண‌க்கெடுப்பெல்லாம் செய்திருந்தார். த‌ந்தை பெரியாருக்குப் பிற‌கு அதிக‌ம் சிந்திக்க‌த்தூண்டும் க‌ருத்துக‌ளைக் கூறுப‌வ‌ர் இராஜேந்திர‌னாக‌த்தான் இருக்க‌ வேண்டும். அந்த‌ நேர்காண‌லில் அவ‌ர் முன் வைத்த‌ க‌ருத்திலிருந்து இந்த‌க் க‌ட்டுரை:
Continue reading

மரணத்தை வெல்லும் மந்திரவாதிகள்!

 

ஆழி சூழ் உலகு

மலேசிய இலக்கியம் பரந்துபட்ட தளத்தில் வாசிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வெகுசன எழுத்துகள் அல்லது எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்தின் அடையாளமாகக் காட்டப்படுவது அதில் முக்கியமானது. தொடர் உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக முந்தைய படைப்பிலக்கியங்கள் மற்றுமொரு காலக்கட்டத்தில் விவாதங்கள் மூலம் மீட்கப்படாமல் இருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். அதேபோல மலேசிய எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களின் பினாமிகள் போல மலேசிய இலக்கியத்தை ஒட்டிய விரிவான வாசிப்பு இல்லாமல் அதன் மீது ஆழமான விமர்சனங்களை வைக்காமல் ‘ஒன்றும் இல்லை’ என மொண்ணையாக கருத்துக்கூறுவதும் மோசமான அரசியல்தான். இதைவிட முக்கியமாக தமிழகத்தில் கா.நா.சு, சு.ரா, ஜெயமோகன், அ.மார்க்ஸ்,  போன்ற ஆளுமைகள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் இலக்கியத்தின் மீது தங்களின் ஆழமான பதிவுகளைச் செய்வது போல இலங்கை இலக்கியத்தை ஒட்டிய மதிப்பீடுகள் கைலாசபதி, கா.சிவதம்பி, எம்.ஏ.நுஃமான், மு.தலையசிங்கம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. மலேசியாவின் இலக்கியத்தை அவ்வாறான ஒரு பரந்த வாசிப்பு மற்றும் தீவிரமான விமர்சன போக்கில் முன்னெடுக்கும் ஆளுமைகள் இல்லை எனலாம். துரதஷ்டவசமாகப் பேராசிரியர்கள் சிலர் அப்பாத்திரத்தை மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் போதிக்கும் ஒரே தகுதியினால் ஏற்கின்றனர்.
Continue reading

வல்லினம் வளர்ந்த கதை

 

 

 

த‌மிழ‌க‌த்தில் க‌விஞ‌ர் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் இல்ல‌த்தில் இருந்த‌ ஒரு ப‌க‌ல் வேளையில் ‘காத‌ல் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌து’ என்ற‌ குறுந்த‌க‌வ‌ல் ம‌ணிமொழியிட‌மிருந்து வ‌ந்த‌து. ம‌லேசியாவிலிருந்து புற‌ப்ப‌டும்போதே ஒரு வ‌ச‌திக்காக‌ மொட்டை அடித்திருந்த‌ ம‌ண்டையில் ‘ந‌ங்’ என யாரோ அடித்த‌து போல‌ உண‌ர்ந்தேன். உட‌னே தொலைப்பேசியில் அழைத்த‌போது மௌன‌ங்க‌ளாலான‌ பெரும் இறுக்க‌த்தை, அழுகையை முடிந்துவிட்ட‌த‌ற்கான‌ அடையாள‌த்தோடு ம‌ணிமொழி வெளிப‌டுத்தினார். ‘காத‌ல்’ இத‌ழ் உருவான‌ கால‌ங்க‌ள் இன்ப‌மான‌வை. மாத‌த்தில் இரண்டு ச‌னிக்கிழ‌மைக‌ள் நான், ம‌ணிமொழி, யுவ‌ராஜ‌ன், ச‌ந்துரு, தோழி, பூங்குழ‌லி என‌ விடிய‌ விடிய‌ இத‌ழை உருவாக்கிய‌ க‌ண‌ங்க‌ள் இன்றும் நினைவில் உள்ள‌ன‌.இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு ஒரு த‌ர‌ம் க‌டையில் இற‌ங்கி தேநீர் ப‌ருகிவிட்டு காலை ஆறு ம‌ணிக்கு வீடு திரும்புவோம். ப‌டைப்புக‌ளைச் சேக‌ரிப்ப‌து திருத்துவ‌து போன்ற‌ ப‌ணிக‌ளை நானும், அவ‌ற்றை டைப் செய்து திருத்த‌ம் பார்த்து வைப்ப‌தை ம‌ணிமொழியும் செய்ய‌ பொருளாதார‌ம் குறித்தான‌ எந்த‌க் க‌வ‌லையும் இல்லாம‌ல் ‘காத‌ல்’ இத‌ழ் ந‌க‌ர்ந்து கொண்டிருந்தது. ச‌ந்துருவின் ப‌ங்க‌ளிப்பு இதில் முழுமையான‌து. காத‌ல் இத‌ழுக்கு அவ‌ர் அமைத்துக்கொடுத்த‌ ப‌க்க‌ங்க‌ள் த‌னித்துவ‌மான‌வை.

Continue reading

நான்கு வாழ்வும் வரலாறும்

‘நாடு விட்டு நா டு’ எனும் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய தன் வரலாற்று புத்தகம் குறித்து எழுதத்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். ஆயினும் அப்புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் ஒரு சுய வரலாறு எதற்காக எழுதப்பட வேண்டும் என்ற கேள்வி முன் வந்து நின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நாவலாகவும் சுயவரலாறாகவும் எழுதப்பட்ட சில பிரதிகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.

இதில் பாமாவின் ‘கருக்கு’ சுயவரலாற்று தொணியில் இயற்றப்பட்ட நாவலாக இருக்கிறது. முதல் வாசிப்பில் ‘கருக்கு’ ஒரு நாவலாக என் மனதில் பதிய சிரமமாக இருந்தது. தன் வரலாறு பாணியில் பின்னப்பட்ட அக்கதை புனைவின் சாத்தியங்களை நிராகரித்துவிட்டு ஒளிவு மறைவற்ற நிஜத்தின் உக்கிரத்துடன் என் முன் பேசுவதாக உணர்ந்தேன். கடந்த ஆண்டு அதை மறுவாசிப்பு செய்யும் போது அது பாமா என்ற ஒரு தனிமனிதரின் கதையாக மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்வில் எல்லா சூழல்களிலும் ஏற்படும் நிராகரிப்புகளை, ஏக்கங்களை, சுகதுக்கங்களை, தீண்டாமைகளை, பாசாங்கில்லாமல் பேசும் ஒரு முக்கியப் பிரதியாகத் தோன்றியது.
Continue reading

சா. ஆ. அன்பானந்தன், அ. ரங்கசாமி மற்றும் மரவள்ளிக்கிழங்கு!

சின்ன வயதிலிருந்தே நான் மலேசியாவில் ஜப்பானியர் ஆட்சி குறித்த சுவாரசியமான சம்பவங்களை என் ஆத்தாவின் பேச்சின் வழிக் கேட்டதுண்டு. ஆத்தா என் அம்மாவின் அம்மா. அவர் நினைவில் ஜப்பானியர்கள் குறித்த சில சம்பவங்கள் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. அவர்கள் ‘குரா குரா’ எனும் ஓசையெழப் பேசுவார்கள் என்பது அதில் சுவாரசியமானது. ஆத்தா எப்போதும் ஜப்பானியர்களைக் கொஞ்சம் உயர்த்திதான் பேசுவார். அவரின் அப்பாவுக்கு ஓரளவு ஜப்பான் மொழி தெரிந்ததால் ஜப்பானியர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதன் பலனாக ஜப்பானியர்கள் காலத்தில் எல்லோருக்கும் கிடைத்த சுண்ணாம்பு அரிசி ஆத்தா குடும்பத்துக்கு வழங்கப்படாமல் நல்ல அரிசி கிடைத்திருகிறது. நல்ல அரிசி கிடைத்த நன்றி அவருக்கு இன்றுவரை உண்டு. மற்றபடி சயாம் மரண ரயில் குறித்தெல்லாம் அவர் கேள்விப்பட்டதோடு சரி.
Continue reading

குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே மற்றும் ஜி. நாகராஜனின் ஆணாதிக்கம்!

எனது பதினேழாவது வயதில் புத்தகக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது சம்பந்தமே இல்லாமல் ஒரு தடித்த புத்தகத்தினுள்ளிருந்து வந்து விழுந்தது ‘குறத்தி முடுக்கு’. அப்போது அப்புத்தகத்தின் பெயர் குறத்தி முடுக்கு என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அட்டை இரண்டாகக் கிழிந்து ‘குறத்தி மு’ என இருந்தது. முகப்பின் ஒரு பக்கம் பின் திரும்பியிருக்கும் ஓர் ஆணின் வரையப்பட்ட படம் மட்டும் தெரிந்தது. எழுத்தாளர் பெயர் இல்லை. கிழிபட்ட பகுதியில் தொலைந்திருக்கலாம். அப்புத்தகத்தை பொறுமையாக அமர்ந்து திறந்து பார்க்க இந்த அம்சங்கள் போதுமானதாக இருந்தன.
Continue reading

தியாக‌ங்க‌ளின் மேல் ஏறி நிற்கும் வெற்றிக‌ள்!

 

வாசிப்பு என‌க்கு உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன், த‌மிழ்வாண‌ன், சுஜாதா, பால‌குமார‌ன், ஜெய‌காந்த‌ன், சிவ‌ச‌ங்க‌ரி, வாஸ‌ந்தி, வைர‌முத்து போன்றோரின் நாவ‌ல்க‌ளைத் தொட‌ர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து. நான் ப‌ணியாற்றிய‌ நான்கு மாத‌க் கால‌த்தில் நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாவ‌ல்க‌ளை எந்த‌ப் ப‌ட‌ப‌ட‌ப்பும் இல்லாம‌ல் ப‌டித்து முடித்திருந்தேன். புத்த‌க‌க் க‌டை ந‌ஷ்ட‌த்தில் மூட‌ப்ப‌ட்ட‌தும் நூல்க‌ள் வாங்கும் வாய்ப்பு அச்சிற்றூரில் கிடைக்காம‌ல் போன‌து.

பின்னாளில் ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரியில் ப‌டித்த‌ மூன்று ஆண்டுக‌ளும் பெரும் வ‌ர‌ட்சி. க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌லுக்கான‌ நூல்க‌ள் ம‌ட்டும் அங்கு இருந்த‌ன‌வே த‌விர‌ நாவ‌ல்க‌ள் என்று பெரிதாக‌ எதுவும் இல்லை. நான் ப‌டித்து முடித்திருந்த‌ மு.வ‌ர‌த‌ராச‌ன், க‌ல்கி அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த‌ன‌ர். ர‌ம‌ணி ச‌ந்திர‌னை 3 புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்த‌தோடு அலுத்துவிட்ட‌து. என‌து அறைத்தோழ‌ர் ச‌ங்க‌ இல‌க்கிய‌த்திலும் த‌னித்த‌மிழிலும் ஈடுபாடு காட்டிய‌தால் வேறு வ‌ழியில்லாம‌ல் அ.கி.ப‌ர‌ந்தாம‌னின் ந‌ல்ல‌ த‌மிழ் எழுத‌ வேண்டுமா, திருக்குற‌ள், திரும‌ந்திர‌ம் என‌ வாசித்து அவ்வ‌ப்போது பேசிக்கொண்டிருப்பேன். என்னைக் காட்டிலும் என் அறைத்தோழ‌ர் திருவ‌ருட்பாவையும் திருக்குற‌ளையும் ம‌ன‌ன‌மாக‌ச் சொல்வ‌தில் தேறியிருந்தார்.
Continue reading

வெளிறு இன்மை அரிது

எனக்கும் கவிதைக்குமான உறவைப்பற்றி பேசுவது… ஏன் நினைப்பதுகூட சங்கடமானது. மற்றவர்களின் சங்கடத்தைப் பற்றி படிப்பது சிலருக்குச் சுவாரசியமாக இருக்கும் என்பதால் மட்டுமே மெனக்கெட்டு கவிதையுடனான எனது மூன்று அனுபவங்களை எழுத விழைகிறேன். Continue reading

தமிழகப் பயணம்

நாளை 31.3.2011 தமிழகத்திற்குச் செல்கிறேன்.  உடன் நண்பர் சிவா. செல்லும் முக்கிய நோக்கம் இயக்குநர்களைச் சந்திப்பது என இப்போதைக்கு முடிவு செய்துள்ளோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் எழுத்தாளர்களையும் சந்திப்பதாகத் திட்டம். சுவாரசியத்தில் திட்டம் அப்படியே தலைகீழ் ஆகிவிடுமோ என அச்சமாக உள்ளது. 4.4.2011 திரும்பிவிடுவோம். அநேகமா நான் தனியனாய் திரும்பலாம். சிவா அங்கேயே தங்கிவிட இரண்டு விடயங்கள் காரணங்க இருக்கலாம் .

Continue reading

‘தீபாவளிக்கு என் கவிதையை ரேடியோவுல கேட்டீங்களா?’

 

கடந்த தீபாவளி தொடங்கி பொங்கல் இன்னும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை நெருங்கும் போதெல்லாம் வானொலி அறிவிப்பாளர்களிடமிருந்து ஒரே வகையான தொலைப்பேசி அழைப்புகளே வந்தன.

பண்டிகையை ஒட்டி கவிதை எழுதி வாசிக்க வேண்டுமாம். Continue reading