கட்டுரை/பத்தி

யோகமும் சௌந்தரும்

சௌந்தர்

சௌந்தரை எனக்கு இலக்கிய வாசகராகவே அறிமுகம். ‘அசடன்’ நாவல் குறித்து ஜெயமோகன் தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார். நானும் அப்போதுதான் அசடனை வாசித்து முடித்திருந்ததால் அக்கட்டுரையை உடனடியாக வாசித்தேன். ஆழமான வாசிப்பு. தான் அதை புரிந்துகொண்ட வகையில் எளிமையாக எழுதியிருந்தார். எளிமையின் மேல் எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. ஒன்றை ஆழமாகப் புரிந்துகொண்டவரால் மட்டுமே எவ்வளவு சிரமமானதையும் எளிமையாகச் சொல்லிவிட முடியும் என நம்புபவன் நான். அதேசமயம் அவர்களால் மட்டுமே தேவையானபோது அதன் உச்சமான சாத்தியங்களுக்கும் சென்றுதொட இயலும்.

Continue reading

வாசுகி டீச்சர் (விரிவாக்கப்பட்டது)

எனது ‘தாரா’ நாவல் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே நண்பர்கள் பலரும் என் நாவலை வெளியீடு செய்யப்போகும் அந்த வாசுகி டீச்சர் யார் எனக்கேட்டனர். இலக்கியச் சூழலில் அறிமுகமில்லாத அவர் யாராக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆர்வமும் குழப்பமும் இருந்தது. அவர் என் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் என்றேன் சுருக்கமாக. ஆனால் அவர் அது மட்டுமல்ல. என்னை ஓர் எழுத்தாளன் என முதன் முறையாகக் கண்டுப்பிடித்து என்னிடம் சொன்னவர் வாசுகி டீச்சர்தான்.

Continue reading

யுவன் சந்திரசேகர்: சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது. தாத்தா பள்ளிக்கு வந்தால் எங்கள் பள்ளியுடன் ஒட்டியுள்ள மாரியம்மன் கோயிலின் முற்றத்தில் அமர்ந்துகொள்வார். நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு மேஜிக் செய்யும்படி கெஞ்சுவோம்.

Continue reading

தாராவைச் சந்தித்த கதை

ஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

Continue reading

பவா செல்லதுரையும் கூல் சுரேஷும்

‘பிக் பாஸில்’ பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டபோது நான் என் முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தேன். சினிமாவுடன் சம்பந்தப்பட்ட கூல் சுரேஷ் ‘பிக் பாஸ்’ செல்லும்போது யாருக்கும் தவறாகப் படவில்லை; இலக்கிய உலகில் அந்த இடத்தை வகிக்கும் பவா செல்லதுரை செல்வதில் என்ன தவறு எனக் கேட்டிருந்தேன். இதை நக்கலாகவெல்லாம் கேட்கவில்லை. என் மனதில் பவா செல்லதுரை அதற்கான இடத்தில் மட்டுமே அமர்ந்துள்ளார்.

Continue reading

Wiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்

மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில்  34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும் நான் தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் என்னை அவ்வமைப்புடன் பிணைத்தே வந்துள்ளேன்.

Continue reading

2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

எல்லா புத்தாண்டுகளையும் போலவே 2022இன் புத்தாண்டும் வல்லினம் பதிவேற்றும் பணியில்தான் தொடங்கியது. இப்பணி தொழில்நுட்பம் சார்ந்ததுதான். தொடக்கத்தில் நான் வல்லினத்திற்காகப் படைப்புகளைச் சேகரிப்பது, செறிவாக்குவது, இறுதி செய்வது போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தேன். 2016 முதல் அதனைப் பதிவேற்றும் பொறுப்பையும் ஏற்க வேண்டி வந்தது. இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொருமுறை அப்பணியைச் செய்யும்போது புதிதாக ஓர் இணைய இதழை அறிமுகப்படுத்தும் முனைப்பே என்னுள் எழுகிறது. அம்முனைப்பே என்னை இயக்குகிறது.

Continue reading

அழிவை நோக்கி கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகள்

கடந்த சில மாதங்களாகவே கோலசிலாங்கூரில் உள்ள இயற்கை பூங்கா (Kuala Selangor National Park) ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. அலையாத்தி காடுகளால் சூழப்பட்ட இந்த பூங்கா எதிர்க்கொண்டுள்ள ஆபத்து குறித்து, இதுவரை மலேசியத் தமிழ் ஊடகங்கள் எதிலும் வெளிவராத நிலையில் நான் அந்தப் பூங்காவின் நிர்வாகி மைக்கல் அவர்களைச் சென்று சந்தித்தேன்.

Continue reading

தூரன் ; பத்மபாரதி; சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

1954ஆம் ஆண்டு தொடங்கி 1963 வரை சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒன்பது கலைக்களஞ்சியத் தொகுதிகள் என்னிடம் உள்ளன. அதில், முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள தி.சு.அவினாசிலிங்கத்தின் முகவுரை முக்கியமானது. சில வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும்; ஈடுபட்டால் அவற்றைச் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. சுதந்திர தினத்துக்கு முந்திய நாள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வழி தி.சு.அவினாசிலிங்கம் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டார். இரண்டே நாட்களில் இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை திரண்டது. அவ்வாதரவு கொடுத்த நம்பிக்கையுடன் அக்டோபர் 1947இல் கலைக்களஞ்சியப் பணியை சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கினார். இந்தக் கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர் ம.ப. பெரியசாமித்தூரன்.

காண்க: பெரியசாமி தூரன்

Continue reading

தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

தமிழ் விக்கி தளம்

ஜனவரி மாதம் ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘தமிழ் விக்கி’ ஒன்றை உருவாக்கப்போகும் தனது திட்டத்தையும், அதற்காக மலேசியாவின் முக்கியத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதும் பணியில் இணையவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது ஈடுபட்டிருந்த பணிகளை முடிக்க ஒரு வார காலம் தேவைப்பட்டதால் அவகாசம் கேட்டு சற்று சாவகாசமாகத்தான் களத்தில் நுழைந்தேன். அப்போதே இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் போடப்பட்டிருந்தன. இந்த வேகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அதில் சரிபாதியாவது ஜெயமோகனால் தமிழ் விக்கிக்கு என எழுதப்பட்ட கட்டுரைகள் இருக்கும். இன்னும் சில நாட்கள் தாமதமானால் மலேசிய எழுத்தாளர்கள் குறித்து அவரே எழுதி முடித்துவிடும் தீவிரம் தெரிந்தது.

Continue reading