கட்டுரை/பத்தி

அழிவை நோக்கி கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகள்

கடந்த சில மாதங்களாகவே கோலசிலாங்கூரில் உள்ள இயற்கை பூங்கா (Kuala Selangor National Park) ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. அலையாத்தி காடுகளால் சூழப்பட்ட இந்த பூங்கா எதிர்க்கொண்டுள்ள ஆபத்து குறித்து, இதுவரை மலேசியத் தமிழ் ஊடகங்கள் எதிலும் வெளிவராத நிலையில் நான் அந்தப் பூங்காவின் நிர்வாகி மைக்கல் அவர்களைச் சென்று சந்தித்தேன்.

Continue reading

தூரன் ; பத்மபாரதி; சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

1954ஆம் ஆண்டு தொடங்கி 1963 வரை சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒன்பது கலைக்களஞ்சியத் தொகுதிகள் என்னிடம் உள்ளன. அதில், முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள தி.சு.அவினாசிலிங்கத்தின் முகவுரை முக்கியமானது. சில வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும்; ஈடுபட்டால் அவற்றைச் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. சுதந்திர தினத்துக்கு முந்திய நாள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வழி தி.சு.அவினாசிலிங்கம் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டார். இரண்டே நாட்களில் இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை திரண்டது. அவ்வாதரவு கொடுத்த நம்பிக்கையுடன் அக்டோபர் 1947இல் கலைக்களஞ்சியப் பணியை சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கினார். இந்தக் கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர் ம.ப. பெரியசாமித்தூரன்.

காண்க: பெரியசாமி தூரன்

Continue reading

தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

தமிழ் விக்கி தளம்

ஜனவரி மாதம் ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘தமிழ் விக்கி’ ஒன்றை உருவாக்கப்போகும் தனது திட்டத்தையும், அதற்காக மலேசியாவின் முக்கியத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதும் பணியில் இணையவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது ஈடுபட்டிருந்த பணிகளை முடிக்க ஒரு வார காலம் தேவைப்பட்டதால் அவகாசம் கேட்டு சற்று சாவகாசமாகத்தான் களத்தில் நுழைந்தேன். அப்போதே இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் போடப்பட்டிருந்தன. இந்த வேகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அதில் சரிபாதியாவது ஜெயமோகனால் தமிழ் விக்கிக்கு என எழுதப்பட்ட கட்டுரைகள் இருக்கும். இன்னும் சில நாட்கள் தாமதமானால் மலேசிய எழுத்தாளர்கள் குறித்து அவரே எழுதி முடித்துவிடும் தீவிரம் தெரிந்தது.

Continue reading

சிடிக் கொடுத்த 72,000 ரிங்கிட்டும் புத்தகக் காட்சியில் 100 ரிங்கிட்டும்

எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டறிக்கையை இன்று வாசிக்க நேர்ந்தது. அதில் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு செடிக் (SEDIC) மூலம் ரி.ம 72,000 கொடுக்கப்பட்டதாகவும் அப்பணத்தை எழுத்தாளர் சங்கம் அவ்வமைப்பிடமே திரும்ப கொடுத்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. சங்கம் திட்டமிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு 240,000 ரிங்கிட் தேவைப்பட்டதாகவும் ஆனால் 72,000 மட்டுமே கிடைத்ததால் அப்பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையிலேயே சங்கத்தின் பதிலும் உள்ளது.

Continue reading

ஜெயமோகன் 60: சியமந்தகம்

சியமந்தகம்

நாளை எழுத்தாளர் ஜெயமோகன் அறுபது வயதை நிறைவடைகிறார். வயது என்பது கூடுதலாக ஒரு வருடம். எல்லோருக்குமே அப்படி ஒரு வயது வரக்கூடியதுதான். ஆனால் ஆளுமைகளை நாம் தொகுத்துப் பார்க்கவும் அவர்களை இன்னொரு தலைமுறைக்கு மேலும் தீவிரமாகக் கடத்திச்செல்லவும் அது ஒரு சந்தர்ப்பம். ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையைக் கொண்டாட அப்படியான சந்தர்ப்பங்களைத் தவறவிடுதல் கூடாது. அவருக்கான ஒரு களஞ்சியத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆவலை முதலில் சொன்னது சு. வேணுகோபாலிடம். அவருக்கே அப்படி ஒரு திட்டம் இருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

Continue reading

ரயில்: கானகத்தில் கரையாத காலடிகள்

இரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை  குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.

Continue reading

சிகண்டி: ஈரத்தீயில் நனையும் மனிதர்கள் – மணிமாறன்

ம.நவீனின் ‘பேய்ச்சி’ மற்றும் ‘சிகண்டி’ நாவல்களை வாங்கி படித்துள்ளேன். வல்லினம் இணையப்பக்கத்தையும் அதன் இலக்கியச் சேவைகளையும் ஓரளவு அறிவேன். ‘திறந்தே கிடக்கும் டைரி’ படித்த காலத்திலேயே ஆசிரியர் எழுத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்றைய எனது வாழ்வியல் சூழல்களால் வல்லினத்தோடும் ம.நவீனோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அது வல்லினத்தின் ஆரம்பகாலம் என்றே நினைக்கின்றேன். எப்போதாவது எது மூலமாகவோ, யார் மூலமாகவோ வல்லினச் செய்திகள் கண்ணில் காதில் படும். அவ்வகையில் எனக்கு வல்லினத்தை அறிமுகம் செய்த தோழி கலைமணிக்கு நன்றிகள்.

Continue reading

சிகண்டி: இரு வேறு துருவங்களையும் இணைத்துச் செல்லும் வாழ்க்கை – அருணா காத்தவராயன்

வாசிப்பின்போது எனக்குள் எந்த தேடலும் இல்லை, கேள்விகளும் இல்லை. விடைத் தெரியாத பல புதிர்களுக்குள் நடுவே நம் மனித வாழ்க்கை அதன் போக்கில் நகர்வது போல, நான் அறிந்திராத ஒரு புதுமையான வாழ்க்கைக்குள் அடி எடுத்துவைத்த உணர்வோடு சிகண்டி முழுதும் பயணித்தேன். இது சரி அது தவறு என அசலிப்பார்க்கும் அவசியம் எனக்குள் ஏற்படவில்லை. ஒவ்வொரு பக்கமும் வெவ்வெறு விடியலோடு பிரகாசிக்க,மனமோ கயிறறுந்த காற்றாடியாக பறந்தது.

Continue reading

எழுத்தாளர் சங்க முன்னெடுப்புகள் மலேசியப் புதுக்கவிதைக்கு மறுமலர்ச்சியை உண்டாக்கியதா?

‘மலேசியப் புதுக்கவிதைகள்: தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூல் மலேசியப் புதுக்கவிதை குறித்த ஆய்வுகளில் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படுவதுண்டு. இராஜம் இராஜேந்திரன் அவர்கள், தன் முதுகலைப்பட்டப் படிப்புக்காகத்  தயாரித்த ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். நவம்பர் 2007இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலுக்கு சிறந்த கட்டுரை நூலுக்கான எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்கவாசகம் விருது அந்த ஆண்டே கிடைத்தது. அவர் விருது பெற்ற ஆண்டு இராஜம் அவர்களின் கணவரான இராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உலக பொதுவிதி படி இந்த விருது ஒரு முறைக்கேடானது என எதிர்வினைகள் வந்தன. இந்தக் கட்டுரை அந்த நூலின் உள்ளடக்கத் தரம் குறித்தும் முன்னெடுக்கும் அரசியல் குறித்தும் ஆராய முற்படுகிறது.

Continue reading

என் வாசிப்பில் சிகண்டி – புஷ்பவள்ளி

சிகண்டி நாவலை வாசிக்கத் தொடங்கியபோது ம. நவீன் எழுதிய பல சிறுகதைகள் என் கண்முன் வந்தன. தொடர்ந்து அந்நாவலை வாசித்தபோது அறிந்த அக்கதைகள் வழி அறியாத வேறொரு அத்தியாயத்திற்குச் செல்வது போல் ஓர் உள்உணர்வு.

Continue reading