‘வல்லினம் விருது: சில தெளிவுகள் சில விளக்கங்கள்’ கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும் என நான் எதிர்ப்பார்த்ததுதான். மின்னஞ்சலிலும் புலனத்திலும் சிலர் கேள்விகளைக் கருத்துகளாக முன்வைத்தனர். சிலர் கேள்விகளில் கருத்துகள் மட்டுமே இருந்தன. சிலர் தான் கூறுவது எதிர்வினை இல்லை என்றும் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஓர் உரையாடலில் தனிப்பட்ட கருத்தென ஒன்றில்லை. அது ஒரு கூட்டுமனதின் வெளிபாடுதான். சில வழக்கமான வசைகள். அதிக பட்சமாக தங்களுக்குத் தெரிந்த கொச்சை சொற்களைப் பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடையும்போது நான் சொல்லும் கருத்தின் பொருளை உணரக்கூடும். இல்லாதுபோனாலும் ஒன்றும் குறைவில்லை. நான் உருவாக்க விரும்புவது உரையாடல்களை, அதன் வழியாக சிந்திக்கும் மனிதர்களை.
Continue readingகட்டுரை/பத்தி
வல்லினம் விருது: சில தெளிவுகள் சில விளக்கங்கள்
டிசம்பர் 21 வல்லினம் விருது விழா. இம்முறை பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். இதுவரை அ. ரெங்கசாமி, சை. பீர்முகம்மது, மா. ஜானகிராமன் எனச் சிலர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். விருது தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஆனால் இவ்விருது, அதன் விருது தொகையால் முக்கியத்துவம் பெறவில்லை. நாளையே யாராவது ஒருவர் புதிய விருது ஒன்றை உருவாக்கி, இதைவிட பெருந்தொகையை வழங்கினால் அதனால் மட்டுமே அவ்விருது சிறப்பு அடைந்துவிடப்போவதில்லை.
Continue readingமுத்து நெடுமாறன்: எழுத்துகளை அடுக்கி விளையாடும் சிறுவன்

தமிழ் எழுத்துகளைக் கணினியில் உபயோகிக்கும் அனைவருமே அறிந்த சொல் ‘முரசு’. முரசு அஞ்சல் மென்பொருள் பல்வேறு புதிய கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டு ஜூன் 27 ஆம் திகதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிஏசி (Brickfields Asia College) மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு வெளியீடு காண்கிறது. இந்நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த அம்சம் ‘உரு’ எனும் நூலின் வெளியீடு. முத்து நெடுமாறனின் வாழ்வைச் சொல்லும் நூல். கோகிலாவின் எழுத்தில் வெளிவருகிறது.
Continue readingஅறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 4

1999இல் பாலச்சந்திரன் அவர்களால் தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் கண்ட ‘Seruling Di Persimpangan’ எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சி என்றாலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எனச் சொல்ல மாட்டேன். கோ. புண்ணியவான், பாவை, மு. அன்புச்செல்வன் போன்றவர்களின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் சிறுகதைகளின் அடிப்படை கூட அறியாதவர்களின் கதைகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகள் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பேரவைக் கதைகள்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ‘டேவான் பாஹாசா’ வெளியிட்டுள்ளது.
Continue readingஅறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 3

80களுக்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மொழியாக்க முயற்சிகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன எனக்கூறலாம். இதுவரை மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல்களிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த விரிவான கட்டுரைகள் இல்லை. இராம. சுப்பையா, ஜி. சூசை, விக்னேசன், எஸ். ராமச்சந்திரன், எஸ். சிங்காரவேலு ஆகியோரின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள் குறித்த தரவுகளோ தகவல்களோ கிடைப்பதும் மிக அரிதாகவே உள்ளது. நானறிந்து ஜி. சூசை அவர்களின் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 1996இல் மா. இராமையா அவர்களால் எழுதி தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தில்’ இடம்பெற்றுள்ளது. அந்நூலில் ஜி. சூசை அவர்களுக்குப் பின்னர் மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர் மலாக்கா ஜோசப் செல்வம் என மா. இராமையா ஒருவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார். யார் அந்த ஜோசப் செல்வம் எனத் தேடிச் சென்றபோது அவர் ஐந்து நூல்களை மலாய் மொழியிலிருந்து தமிழுக்கும் பாரதியின் பாடல்கள் உட்பட 3 நூல்களைத் தமிழிலிருந்து மலாய் மொழிக்கும் மொழியாக்கம் செய்துள்ளது தெரியவந்தது. 70களில் மலாய் இலக்கியத்துறையில் தீவிரமாக ஈடுபட்டவர். தமிழிலக்கியச் சூழலில் அதிகம் அறியப்படாதவர்.
Continue readingஅறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 2

வல்லினம் இன்று மூன்று மொழி இலக்கியங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் வழியாக மூன்று மொழி எழுத்தாளர்களுடனான உரையாடலையும் சாத்தியப்படுத்த முனைகிறது. இது ஒரு தொடக்கம்தான். முழுமையான திட்டம் எனக் கூறிவிட முடியாது. மலேசியாவில் ஆங்கில இலக்கியச் சூழலில் மட்டுமே இயங்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் உள்ளனர். சபா, சரவாக்கில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து தமிழில் நம்மிடையே எந்த அறிமுகமும் இல்லை. இந்த இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைக்க வேண்டியுள்ளது. ஆர்வமான இளம் எழுத்தாளர்களின் இணைவின் மூலமாகவே அந்த இலக்கை அடையும் கால அவகாசத்தைக் குறைக்க முடியும். ஆனால், இது இன்று தொடங்கப்பட்ட முயற்சியல்ல. இப்படி மூன்று மொழி இலக்கியங்களின் ஒன்றிணைவுக்கு உழைத்த நல்ல முன்னோடிகள் மலேசிய இலக்கியச் சூழலில் இருக்கவே செய்கின்றனர். 1964 இல் வெளிவந்த ‘புங்கா எமாஸ்’ (தங்க மலர்) எனும் நூல் அதற்கு மிகச்சிறந்த சான்று.
Continue readingஅறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1

இன்னும் ஏழு நாட்களில் ‘முக்கோணக் கதைகள்’ நிகழ்ச்சி. வல்லினத்தின் மற்றுமொரு பெருமுயற்சி. ‘மலேசிய இலக்கியச் சூழலில் புதிய, வரலாற்றில் நிலைகொள்ளும் முயற்சிகளை வல்லினம் முன்னெடுக்கிறது’ எனும் வாசகம் கிட்டத்தட்ட தேய்வழக்காகிவிட்டது. மூத்தப் படைப்பாளிகளின் ஆவணப்பட இயக்கம், எழுத்தாளர்களின் நிழல்படத் தொகுப்பு, எழுத்தாளர்களுக்கு உரிய உரிமத்தொகை வழங்குதல், மூத்தப்படைப்பாளிகளின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தல், நவீன இலக்கியம் சார்ந்த முகாம்கள், விருதுகள் – நூல் பதிப்புகள் வழி மலேசியாவின் சமகால இலக்கியத்தை உலகத் தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லும் முயற்சி என வல்லினத்தின் முன்னெடுப்புகள் அனைத்தும் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் வலுவான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.
Continue readingபசுபதியும் கபாலியும்

இன்று (18.11.2024) வழக்கறிஞர் பசுபதி அவர்களின் பிறந்தநாள். பொதுவாக அவர் பிறந்தநாளின் போது அவர் குறித்த சில எண்ணங்களை எழுதுவது வழக்கம். வரலாற்று நாயகர்களை சமூகத்திற்கு நினைவூட்டுவது எழுத்தாளனின் கடமைதானே.
அப்படி ஒரு சம்பவத்தை நினைவுகூறலாம் என நினைக்கிறேன்.
Continue readingவீட்டு நாய்களாகும் வீதி நாய்கள்

சில மாதங்களுக்கு முன் நண்பர்கள் வழியாகக் கைவிடப்பட்ட விலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்புக் கழகம் (Persatuan Penyelamat dan Kebajikan Haiwan Terbiar) குறித்துக் கேள்விப்பட்டிருந்தேன். முதலில் அது என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
முதலாவது, இதுபோன்ற கழகங்கள் திடீரென முளைப்பது மனிதர்களின் கருணையைக் காசாக்குவதற்கு என்ற எண்ணம் எனக்குண்டு. தோற்றுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே விலங்குகளின் பரிதாப நிலையை காணொளியாகக் காட்டி, சமூக ஊடகங்களில் வசூல் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.
Continue readingமலேசிய யோக முகாம் 2024 – கணேஷ் பாபு

லங்கேஷ் & ம.நவீன்
யோக ஆசிரியர் சௌந்தர்ஜி அவர்களுடன் இதற்கு முன் ஓரிரு முறை பேசியிருந்தாலும் அவரிடமிருந்து யோகம் கற்கும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்தது. மலேசியாவில் யோக முகாம் என்று நவீன் அறிவித்ததும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொண்டேன். மே மாதம் 25,26, 27 ஆகிய தேதிகளில் இந்த யோக முகாம் கூலிம் பிரஹ்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து நான், லதா மற்றும் லங்கேஷ் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டோம்.
Continue reading

