
இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.
Continue reading
இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.
Continue reading
(இக்கட்டுரை மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் புரிதலுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டது)
நவீனத்துவம் (Modernism)
1890 முதல் 1930 வரையிலான கால கட்டத்தை நவீனத்துவ காலகட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ் மக்ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். நவீனத்துவம் என்றால் புதுமை ஒன்று உருவாவது அல்ல. அதை ‘நவீனத்தன்மை’ என்று சொல்லலாம். அது எப்போதுமே நடப்பதுதான். மனிதனுக்கு சக்கரம் அறிமுகமான காலத்தில் இருந்து இன்றைக்குத் திறன்பேசி பயன்பாடு வரை இவ்வாறு புதுமைகள் (நவீனத்தன்மை) அறிமுகமாகி வருகின்றன. ‘நவீனத்துவம்’ என்பது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கிறது. இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை. அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.
Continue readingமுன்னுரை

மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.
Continue reading
இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வசிக்கும் நண்பர், எழுத்தாளர் செந்தில்குமாரிடம் இதுகுறித்துப் பேசியபோது சில ஆவணங்கள் ஜப்பானிய தேசிய நூலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பதாகவும் நூலக அனுமதி பெற்றே அவற்றைப் பெற முடியும் என்றும் சொன்னார். ஆனால் ஒருபோதும் ஒரு ஜப்பானியன் இந்த வரலாற்றை தனது இளம் தலைமுறைக்குக் கடத்துவதில்லை; வரலாற்றில் தங்களுக்கு இருக்கும் கோர முகத்தை அவர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை என அவர் வழியே அறிந்தேன்.
Continue reading
கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில் நுழைய முடியாமல் கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில் மகத்தான படைப்புகளில் உழல்வதில் இருந்து மனம் விடுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.
Continue reading
19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன்.
Continue reading
எனது இலக்கிய வாசிப்பை 2006க்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். என் பதினேழாவது வயதில் நான் பணியாற்றிய வீரா புத்தகக் கடை வழியாக சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என ஒரு ஜனரஞ்சக வாசிப்புப் பின்புலம் உருவாகியது. பௌத்தத்தில் ஆர்வம் ஏற்பட்ட காலகட்டத்தில் வாசிப்பு ஓஷோவை நோக்கி நகர்ந்தது. ஓஷோ என்னை ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து மீட்டார். அவர் உருவாக்கும் வினாக்கள் ஆழ்மனதைச் சீண்டுபவை. முன் முடிவுகளைக் களைத்துப் போடுபவை.
Continue reading
உப்சி கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் மனோன்மணி அவர்கள் குறித்த புகார் கடிதம் ஒன்றை அருண் துரைசாமி என்பவர் வாசிக்கும் காணொளியை நண்பர் ஒருவர் காலையிலேயே அனுப்பி வைத்திருந்தார். அருண் துரைசாமி வீடியோ இப்படி எங்காவது சுற்றியடித்து அவ்வப்போது வருவதுண்டு. முதல் வேளையாக அதனை அழித்து விடுவேன். இனம், மொழி, மதம் என்பனவற்றுக்கிடையில் பேதம் தெரியாத அரைவேக்காட்டு நபர்களின் உளறல்கள் இப்படி சமூக ஊடகங்களில் ஏராளமாகவே சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மூடர் கூட்டமும் எப்போதும் இருப்பதுண்டு. முன்பு இந்தக் கூட்டம் தோட்டத்து சாராயக்கடைகளில் இருந்ததாக ஞாபகம். இப்போது சமூக ஊடகங்களில் புகுந்து கலந்துள்ளனர்.
Continue reading
2019 மே மாத வல்லினத்தில் அ.பாண்டியன் ‘தையும் பொய்யும்‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியை ஒட்டி எழுப்பப்பட்ட கேள்விகளை உள்ளடக்கியது.
Continue reading
இன்று வல்லினம் செயலி (App) அறிமுகம் கண்டது. பொதுவாக வல்லினம் இதழ் பிரசுரமாவதும் அதற்கான படைப்புகளைச் சேகரிக்கும் பணியும் மட்டுமே பலரும் அறிந்தது. வல்லினம் பலரையும் சென்று சேர அதற்குப்பின்னால் நின்று உழைப்பவர்களும் முக்கியக்காரணம். அப்படித் தொடர்ந்து சில ஆண்டுகளாக 2000க்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு வல்லினம் மின்னஞ்சல் வழி தகவல்களை அனுப்பி வைப்பவர் எழுத்தாளர் கங்காதுரை.
Continue reading