கட்டுரை/பத்தி

பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம்

19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்  இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன்.

Continue reading

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

எனது இலக்கிய வாசிப்பை 2006க்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். என் பதினேழாவது வயதில் நான் பணியாற்றிய வீரா புத்தகக் கடை வழியாக சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என ஒரு ஜனரஞ்சக வாசிப்புப் பின்புலம் உருவாகியது. பௌத்தத்தில் ஆர்வம் ஏற்பட்ட காலகட்டத்தில் வாசிப்பு ஓஷோவை நோக்கி நகர்ந்தது. ஓஷோ என்னை ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து மீட்டார். அவர் உருவாக்கும் வினாக்கள் ஆழ்மனதைச் சீண்டுபவை. முன் முடிவுகளைக் களைத்துப் போடுபவை.

Continue reading

முனைவர் மனோன்மணியும் பெயர் மாற்றமும்

உப்சி கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் மனோன்மணி அவர்கள் குறித்த புகார் கடிதம் ஒன்றை அருண் துரைசாமி என்பவர் வாசிக்கும் காணொளியை நண்பர் ஒருவர் காலையிலேயே அனுப்பி வைத்திருந்தார். அருண் துரைசாமி வீடியோ இப்படி எங்காவது சுற்றியடித்து அவ்வப்போது வருவதுண்டு. முதல் வேளையாக அதனை அழித்து விடுவேன். இனம், மொழி, மதம் என்பனவற்றுக்கிடையில் பேதம் தெரியாத அரைவேக்காட்டு நபர்களின் உளறல்கள் இப்படி சமூக ஊடகங்களில் ஏராளமாகவே சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மூடர் கூட்டமும் எப்போதும் இருப்பதுண்டு. முன்பு இந்தக் கூட்டம் தோட்டத்து சாராயக்கடைகளில் இருந்ததாக ஞாபகம். இப்போது சமூக ஊடகங்களில் புகுந்து கலந்துள்ளனர்.

Continue reading

தைப்புத்தாண்டு: அந்த இன்னொரு வாழைப்பழம்தான் அது!

2019 மே மாத வல்லினத்தில் அ.பாண்டியன்  ‘தையும் பொய்யும்‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியை ஒட்டி எழுப்பப்பட்ட கேள்விகளை உள்ளடக்கியது.

Continue reading

வல்லினம் செயலி

இன்று வல்லினம் செயலி (App) அறிமுகம் கண்டது. பொதுவாக வல்லினம் இதழ் பிரசுரமாவதும் அதற்கான படைப்புகளைச் சேகரிக்கும் பணியும் மட்டுமே பலரும் அறிந்தது. வல்லினம் பலரையும் சென்று சேர அதற்குப்பின்னால் நின்று உழைப்பவர்களும் முக்கியக்காரணம். அப்படித் தொடர்ந்து சில ஆண்டுகளாக 2000க்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு வல்லினம் மின்னஞ்சல் வழி தகவல்களை அனுப்பி வைப்பவர் எழுத்தாளர் கங்காதுரை.

Continue reading

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

இந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.

Continue reading

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல் (லதா)

ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளால் பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் சார்ந்த அவதூறுகள் ஒரு எழுத்தாளரின் மேல் விழும்போது மௌனம் சாதிக்கும் சூழலில், பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக வெளிவந்த குரல்கள் பெரும்பாலும் பெண்களுடையவை என்பது ஆச்சரியமளிக்கிறது. மேலும், எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்படும் விமர்சனப் பார்வை வல்லினத்தின் பத்தாண்டுகால முயற்சியின் பலனென உணர முடிகிறது. விரிவாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட ஒரு நாவல் குறித்து  எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு.

Continue reading

காலம் தாண்டி நிலைக்கும் பேய்ச்சி (ப.தெய்வீகன்)

நாவல் என்பது காலமாற்றத்தின் இலக்கிய வடிவம்.

காலமாற்றத்திற்குள் தன்னை தொடர்ச்சியாக புதுப்புத்திக்கொள்கின்ற பண்பாட்டு கூறுகள் மீதான ஆழமான அவதானிப்புக்கள், அந்த மாற்றங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுகின்ற மானுட உணர்ச்சிகள், அவற்றின் மீதான மதிப்பீடுகள் ஆகியவற்றை நுட்பமாக பேசுகின்ற நாவல்கள் காலம்தாண்டிய பிரதிகளாக இலக்கியத்தில் நிலைபெறுகின்றன.

Continue reading

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி (பவித்திரா)

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக் கண்டடைகிறேன்.

Continue reading

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு (கி.இ.உதயகுமாரி)

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்துத் தின்றுவிடும் சாமி என்ற அச்சம் என்னை அதன் அருகில் போகவிடாமல் தடுத்தது. கொஞ்சகாலத்திற்குப் பிறகு வேறொரு கோயிலில் கைநிறைய கண்ணாடி வளையல்களுடன் சாந்தமான கோலத்தில் பெண்மையின் அம்சமாய் நின்றிருந்ததும் பேச்சிதான்.

Continue reading