கட்டுரை/பத்தி

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

இந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.

Continue reading

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல் (லதா)

ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளால் பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் சார்ந்த அவதூறுகள் ஒரு எழுத்தாளரின் மேல் விழும்போது மௌனம் சாதிக்கும் சூழலில், பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக வெளிவந்த குரல்கள் பெரும்பாலும் பெண்களுடையவை என்பது ஆச்சரியமளிக்கிறது. மேலும், எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்படும் விமர்சனப் பார்வை வல்லினத்தின் பத்தாண்டுகால முயற்சியின் பலனென உணர முடிகிறது. விரிவாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட ஒரு நாவல் குறித்து  எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு.

Continue reading

காலம் தாண்டி நிலைக்கும் பேய்ச்சி (ப.தெய்வீகன்)

நாவல் என்பது காலமாற்றத்தின் இலக்கிய வடிவம்.

காலமாற்றத்திற்குள் தன்னை தொடர்ச்சியாக புதுப்புத்திக்கொள்கின்ற பண்பாட்டு கூறுகள் மீதான ஆழமான அவதானிப்புக்கள், அந்த மாற்றங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுகின்ற மானுட உணர்ச்சிகள், அவற்றின் மீதான மதிப்பீடுகள் ஆகியவற்றை நுட்பமாக பேசுகின்ற நாவல்கள் காலம்தாண்டிய பிரதிகளாக இலக்கியத்தில் நிலைபெறுகின்றன.

Continue reading

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி (பவித்திரா)

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக் கண்டடைகிறேன்.

Continue reading

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு (கி.இ.உதயகுமாரி)

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்துத் தின்றுவிடும் சாமி என்ற அச்சம் என்னை அதன் அருகில் போகவிடாமல் தடுத்தது. கொஞ்சகாலத்திற்குப் பிறகு வேறொரு கோயிலில் கைநிறைய கண்ணாடி வளையல்களுடன் சாந்தமான கோலத்தில் பெண்மையின் அம்சமாய் நின்றிருந்ததும் பேச்சிதான்.

Continue reading

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல் (கி.இளம்பூரணன்)

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். தோற்றங்களைப் போலவே அந்த நிலத்தில் தெய்வம் உருவானதற்கான கதைகளும் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுண்டு. இந்தக் கதைகள் அனைத்துமே மக்களின் கண்ணோட்டங்கள், பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள் என்றும் அந்தக் கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை, உணர்வுகளை, மதிப்பீடுகளை, வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்கிறார் லக்‌ஷ்மி மணிவண்ணன். (தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்).

Continue reading

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும் (அழகுநிலா)

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட ஆரம்பித்தது. நான் ஓடிச்சென்று அம்மாச்சியிடம் விஷயத்தைச் சொல்ல “பெத்தவளுக்கு இல்லாத உரிமையா? தின்னுட்டுப் போகட்டும் விடு” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்ததை அந்த வயதில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாய்மையின் வேறொரு பரிமாணத்தைப் பற்றிய குழப்பம் முதன் முதலில் அன்றுதான் என் மனதில் நுழைந்தது.

Continue reading

வாழைமர நோட்டு: சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கம்

தோக்கியோவிலிருந்து வேலை நிமித்தமாக சில நாட்கள் மலேசியா வந்திருந்த நண்பர், எழுத்தாளர் ரா. செந்தில்குமாரிடம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசிய நாடுகள் மீது போர் தொடுத்தது, அவற்றைக் கைப்பற்றியது பற்றி அந்நாட்டு கல்வியாளர்களால் ஆய்வுகளோ அல்லது பதிவுகளோ செய்யப்பட்டுள்ளனவா, அவர்களிடம் அது குறித்த பார்வைகள் என்னவாக உள்ளன என்று கேட்டேன். அவர் பதில் ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் ஒன்றும் இல்லாதது மட்டுமல்ல எந்த ஜப்பானியரும் அது குறித்து உரையாடவும் மாட்டார்கள் என்றார்.

Continue reading

நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது நான்கு கால்களையும் மொத்தமாய் திருப்பி மறுபுறம் சீறும் கணம் குபுக்கென பார்வையாளர்களுக்குத் தூக்கிப்போடும். மேலிருந்து கீழாக அதன் சாகசத்தைப் பார்க்கும் கண்களுக்கு அதன் துள்ளல்கள் பழகப் பழக அத்தனையும் ஓர் ஒழுங்கில் நிகழ்வதாகத் தோன்றும். நுண்வெளி கிரகணங்களை வாசித்து முடித்தபோதும் அந்நாவல் சு.வேணுகோபாலின் கட்டற்ற துள்ளல்கள் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு என்றே மனதில் முதலில் தோன்றியது.

Continue reading

குருபூர்ணிமா

சீ.முத்துசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரையைப் பதிவேற்றம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபிரேசர் மலையை நோக்கி நண்பர்களுடன் புறப்பட்டேன். மார்ச் மாதம் அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தபோதும் நான் இதே நண்பர்களுடன்தான்  தைப்பிங் நகரில் சுற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதி தொலைக்காட்சியில் விடுமுறையை அறிவித்தபோதே உருப்படியாக ஏதாவது எழுதவேண்டும் எனத் திட்டம் இருந்தது. அவ்வகையில் ஏப்ரல் மாதம் மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் எழுதலாம் எனத்  தொடங்கினேன். பத்து மலேசிய எழுத்தாளர்கள்; அவர்களது மொத்த  நாவல்கள் எனும் அடிப்படையில் வாசிப்பையும் எழுத்தையும் திட்டமிட்டுக்கொண்டேன். ஜூலை 3 எழுதிய இறுதிக் கட்டுரையுடன் பத்து எழுத்தாளர்களின்  27 மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தேன்.

Continue reading