மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…
கவிதையில் இடைவெளி நவீனக் கவிதை தனக்குப் புரிவதில்லை எனச்சொல்பவர்களை நான் பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவர்களின் குற்றச்சாட்டு சங்க இலக்கியப் பாடல்கள் தங்களுக்குப் புரிகிறதென்றும் ஆனால் நவீன கவிதைகள் புரிவதில்லை என்பதாக இருக்கும். உண்மையில் அவர்கள் தங்களுக்குச் சங்கப்பாடல்கள் புரிவதாக நம்புவது அதன் விளக்க உரையின் துணையால்தான். அல்லது தொடர்ச்சியான மேடைப்பேச்சில் உதிரியாக வந்துவிழும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் நினைவில் வைத்து பொருள் அறிந்திருக்கலாம்.