கட்டுரை/பத்தி

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 2

sivamமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிதையில் இடைவெளி நவீனக் கவிதை தனக்குப் புரிவதில்லை எனச்சொல்பவர்களை நான் பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவர்களின் குற்றச்சாட்டு சங்க இலக்கியப் பாடல்கள் தங்களுக்குப் புரிகிறதென்றும் ஆனால் நவீன கவிதைகள் புரிவதில்லை என்பதாக இருக்கும். உண்மையில் அவர்கள் தங்களுக்குச் சங்கப்பாடல்கள் புரிவதாக நம்புவது அதன் விளக்க உரையின் துணையால்தான். அல்லது தொடர்ச்சியான மேடைப்பேச்சில் உதிரியாக வந்துவிழும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் நினைவில் வைத்து பொருள் அறிந்திருக்கலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 1

மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

kulalyதமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பதை  பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழி என புரிந்துகொள்ளலாம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். தமிழ்மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி மரபிலிருந்து இன்று உருவாகும் நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்கள் கொடுக்கும் அதே வகையான உணர்வெழுச்சியை வழங்குவதாய் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாய் நவீன கவிதை குறித்த தீராத வாசிப்பில் இருக்கும் எனக்கு நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்களோடு பொருந்தி போவதைப் பார்க்க முடிகிறது.

Continue reading

மின்னல்; கவிதை; பிறந்தநாள்

padamகாலையிலிருந்து பல்வலி. மனிதனுக்குக் கடுமையாக வலி கொடுக்கக் கூடியது காது வலியும் பல்வலியும் என கேள்விப்பட்டதுண்டு. இரண்டுமே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நோகாமல் தலை முழுமைக்குமாக வலியைப் பரப்பும்.

இன்றுதான் மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் ஒலிபரப்பாகும் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியிக்காகக் குரல் பதிவு செய்ய திகதி கொடுத்திருந்தேன். அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்  புனிதா சுப்ரமணியம் மீண்டும் இலக்கியம் குறித்து பேச வாய்ப்பளித்துள்ளார். அவருக்கு நன்றி. தீவிர இலக்கியத்தில் இயங்கத்தொடங்கிய காலம் முதலே இவற்றையெல்லாம் எப்படி பொதுமக்களிடம் கொண்டுச் சேர்ப்பது என்றும் ஆரோக்கியமான வாசிக்கும் தலைமுறையை எப்படி உருவாக்குவது என்றும் ஏங்கியது உண்டு. புனிதா சுப்ரமணியம் போன்றவர்களால் அந்த எண்ணம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே 13 வாரங்கள் உலக இலக்கியம் குறித்துப்பேசியது பரவலான பார்வைக்குச் சென்றிருந்தது. சிலர் மொழிப்பெயர்ப்பு எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியிருந்தனர். வானொலி போன்ற ஊடகங்கள் மிக விரைவாக ஒன்றை எளிய மனிதர்களிடமும் எடுத்துச்செல்லும் சக்தி கொண்டவை.  எளிமை படுத்தி கூறுவதென்பதே அதில் உள்ள சாகசம்.

Continue reading

சிறுகதை: அடிப்படையான கேள்விகளும் புரிதல்களும்

00314.3.2015 – ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதுகலை மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் பதிவு இது. இந்நிகழ்வை நூலகர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து பேசியப்பின் சிறுகதை குறித்த அடிப்படையான கேள்விகளுடன் நான் வழிநடத்தினேன். நூலகத்தின் அழைப்பின் பெயரிலேயே இந்தக் கலந்துரையாடலை நான் வழி நடத்தினேன். என்னுடன் பூங்குழலி,  மணிமொழி , யோகி ஆகியோர் உடன் வந்தனர்.


நிகழ்வில் பேசியதில் ஒரு பகுதி :

0004நண்பர்களே, சிறுகதைகள் குறித்து பார்ப்பதற்கு முன் இலக்கியம் ஏன் அவசியமாகிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் தேடுவோம். இலக்கியம் குறித்து நம்மிடம் சில முன் முடிவுகள் உண்டு. உண்மையில் அவை போலியானவை. யாரோ நம் மனதில் ஏற்றிவிட்டவை. நாம் அந்த முடிவுகள் குறித்து ஆராய்ந்ததே இல்லை. எந்தக் கேள்வியும் இல்லாமல் கல்விக்கூடங்களிலோ நூல்களிலோ சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். இன்று அதன் சில அம்சங்களை ஆராய்வோம்.

Continue reading

சோரம் போனவனின் : கடிதம்

மகாநாடு ஒரே சொதப்பலாக இருக்குமென்பது எதிர்பார்த்ததுதான், நேரில் பார்க்கவோ கேட்கவோ இயலாத குறையை உங்கள் கட்டுரை தீர்த்துவைத்தது. மற்றும் திருக்குறளில் இன்னாசெய்தாரை ஒறுத்தல் எனப்து சரியானதே. ஒறுத்தல்= தண்டித்தல் என்று பொருள்படும்.

இன்னும் இலங்கை வழக்கில் மீனைப்பொரித்தல் என்போம், பெருநிலத்தில் பொறித்தல் என்பார்கள். சில இடத்தில் மெள்ள மெள்ள என்போம் சிலர் மெல்ல மெல்ல என்பார்கள். எல்லாந்தான் இருந்துவிட்டுப்போகட்டுமே. நஷ்டம் ஒன்றுமில்லை.

காப்பியைத்தான் குழம்பி என்றாலோ, கொட்டைவடிநீர் என்றாலோ அது காப்பியைச் சுட்டும் தனித்துவமான சொல்லாகத்தெரியவில்லையே. கோயம்புத்தூர் சென்ற சமயம்   ” இரண்டு கொட்டைவடிநீர் கொடுங்கள்” என்று கேட்டேன். அங்கே காப்பிக்கடை வைத்திருந்த யாழ்ப்பாணத்து ஆள் கேட்டார்: “ அய்யா யாம் எதன் கொட்டையை வடித்துத்தரவேண்டும்”.

கருணாகரமூர்த்தி.பொ
http://karunah.blogspot.com

சோரம் போனவனின் சொற்கள் : 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து…

மாநாட்டில் கலந்துகொண்ட முதல் நாளிலிருந்து ‘எதையும் வெளிப்படையாக பேசாதே… உனக்குத்தானே தலைவலி. எல்லாருக்கும் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துண்டு. ஆனால் இப்படிப் பேசிப்பேசி கிடைக்கப்போகும் நன்மைகளை கெடுத்துக்கொள்வதில்லை. நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய்…’ என்பது போன்ற அறிவுரைகள் தொடர்ந்து பல நலவிரும்பிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தன. ‘வல்லினம்’ நிகழ்வை தவிர்த்து கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்விலும் அதிகம் கலந்துகொள்ளாததால் பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்தது உற்சாகமாக இருந்தது. பலருக்கும் என்னைப் பார்த்தவுடன் நலன் விசாரிப்பதைவிட அறிவுரை சொல்லவே தோன்றியது. கெட்டு சீரழிந்து போயிருக்கும் நான், அவர்கள் அறிவுரை மூலம் உணர்ந்துகொண்டது முதலில் சோரம் போக பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே இந்தப் பதிவை சோரம் போன மனநிலையில்தான் எழுத வேண்டியுள்ளது.

Continue reading

டோட்டோ சானும் நமது கல்வி முறையும்

டோட்டோ-சான்கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார்.

எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்குள்ள கல்வி சூழல் குறித்து அறியும் ஆவலில் பேசத்தொடங்கினேன்.  சுதந்திரமான கல்வி முறை. கற்பனை ஆற்றலை வளர்க்கும் பாடத்திட்டம். திறனை மையப்படுத்தியப் பள்ளிகள் என கவர்ச்சிகரமான கல்விச்சூழலை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருந்தது. அவர் பேச பேச எனக்கு Tetsuko Kuroyanagi எழுதிய ‘Totto-chan, The Little Girl at the Window’ எனும் நூல் ஞாபகத்துக்கு வரத் தொடங்கியது.

Continue reading

போலி அறிவுவாதமும் மலேசிய கலை உலகமும்!

மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே  (Pseudo Intellectuals) உள்ளன.  இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது மிகக் கடினம். காரணம், அவர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஏதோ மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் போல ஊடகங்களால் முன்னிறுத்தப்படுவார்கள். இவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரே வழி இவர்களின் படைப்புகளைக் கட்டுடைத்துப்பார்ப்பதுதான்.

Continue reading

ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்

‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது.

Continue reading

ஞானக்கூத்தன் : மழைக்குளம்

12‘விஷ்ணுபுரம் விருது’ ஞானக்கூத்தனுக்குக் கிடைக்கின்றது என அறிந்த அன்று அவர் கவிதைகள் அறிமுகமான தினம் ஒரு மந்தமான நினைவாய் முறையற்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. ஒரு கவிதை வாசகனுக்கு அவனது ஆரம்பகால கவிதை ரசனையைக் கூர்மை செய்தவர்கள் இலக்கிய வாழ்வில் ஒரு பகுதியாகி விடுகின்றனர். எங்கு எப்போது கவிதை குறித்து பேசினாலும் அந்த ஆளுமையை வலிந்து இழுத்து,துணைக்கு வைத்துக்கொள்கிறது நினைவு .

Continue reading