கட்டுரை/பத்தி

வகுப்பறையின் கடைசி நாற்காலி : பிரளயன் அவர்களின் விமர்சனம்

pralayan‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற கட்டுரைகளே இவை.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 6

IMG_3397மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர் போன்ற அடிக்குறிப்புகள் எல்லாமே பிற்கால சேர்மானம் என்று சொல்கிறார். ஆக, இன்று ஒரு நவீன வாசகன் பொருளுரையின் உதவி இல்லாமல் அவற்றை வாசித்து தனது அனுபவத்தின் திரட்சியில் அவ்விலக்கியங்களுப் பொருள் கூற முழு சுதந்திரம் உண்டு. அது முற்றிலும் வேறு பொருளாகவும் இருக்கலாம். இலக்கியத்திற்கே உள்ள சுதந்திரம் அது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 5

pramil_1865025hமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

விவாதங்களால் அல்லது அறிவைச் சுரக்கும் நூல்களால் மட்டுமே அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ள முடியும் என ஒரு கருத்து உள்ளது. நிரூபிக்கப்பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுவே அறிவு என பல தோழர்கள் பேசுவதை நான் கேட்டுள்ளேன். என்னளவில் அவை அனைத்தும் சாத்தியமற்றவை. உண்மையில் தர்க்க அறிவைவிட கற்பனை மேலும் ஆழமானது. தர்க்கம் நாம் அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டது. கற்பனை படிமங்களால் ஆனது. அதனால் நாம் காணதவற்றையும் கற்பனை செய்ய முடியும்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 4

sivaமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

தொ.பரமசிவம் அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் ஒரு வரி சொல்கிறார். அக்காலத்தில் தமிழர்களுக்கு முக்கிய ஊதியமாக உப்பும் அரிசியும் இருந்துள்ளது. பின்னர் ஊதியமாகப் பணம் வழங்கும் நிலை வந்தபோது அரிசியின் சம்பா என்ற பெயரும் உப்பு விளையும் களமான ஆளம் என்ற சொல்லும் இணைந்து சம்பளம் என்ற சொல் உருவானது என்கிறார். இதை நான் என் இலக்கிய நண்பருடன் பகிர்ந்தபோது அவர் அதை முற்றிலுமாக மறுத்தார். உப்புக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்திருக்க முடியாது. அது மலிவானது எளிதில் கிடைக்கக் கூடியது என வாதாடினார். என்னாலும் உறுதியாகச் சொல்ல முடியாததால் மௌனம் காத்தேன். ஆனால் எனக்கு விடை ஒரு சங்கப்பாடலில் இருந்து கிடைத்தது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 3

manushyaputhiranமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

மிகை உணர்ச்சி, உணர்வெழுச்சி இவை இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் தெரியாமல் நம்மால் ஒரு கவிதையை அறிவது சாத்தியமில்லை. மிகை உணர்ச்சி என்பது ஓர் உணர்ச்சி மனநிலையை ஒரு படைப்பு மிகைப்படுத்திக் காட்டுவதிலிருந்து அறியலாம். அதாவது ஒரு துக்கமான காட்சியைச் சொல்லும்போது அக்காட்சியை விளக்குபவன் வாசகனை அழவைக்க மிகவும் மெனக்கெடுவான். வாசகனை அழச்சொல்லி உழுக்குவான். ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால் சீரியல்களை ஓர் எடுத்துக்காட்டாக்கலாம். அவை ரசிகனின் உணர்ச்சியை சீண்ட திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் அழுது அழுது நம்மையும் அழவைக்கும்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 2

sivamமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிதையில் இடைவெளி நவீனக் கவிதை தனக்குப் புரிவதில்லை எனச்சொல்பவர்களை நான் பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவர்களின் குற்றச்சாட்டு சங்க இலக்கியப் பாடல்கள் தங்களுக்குப் புரிகிறதென்றும் ஆனால் நவீன கவிதைகள் புரிவதில்லை என்பதாக இருக்கும். உண்மையில் அவர்கள் தங்களுக்குச் சங்கப்பாடல்கள் புரிவதாக நம்புவது அதன் விளக்க உரையின் துணையால்தான். அல்லது தொடர்ச்சியான மேடைப்பேச்சில் உதிரியாக வந்துவிழும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் நினைவில் வைத்து பொருள் அறிந்திருக்கலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 1

மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

kulalyதமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பதை  பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழி என புரிந்துகொள்ளலாம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். தமிழ்மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி மரபிலிருந்து இன்று உருவாகும் நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்கள் கொடுக்கும் அதே வகையான உணர்வெழுச்சியை வழங்குவதாய் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாய் நவீன கவிதை குறித்த தீராத வாசிப்பில் இருக்கும் எனக்கு நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்களோடு பொருந்தி போவதைப் பார்க்க முடிகிறது.

Continue reading

மின்னல்; கவிதை; பிறந்தநாள்

padamகாலையிலிருந்து பல்வலி. மனிதனுக்குக் கடுமையாக வலி கொடுக்கக் கூடியது காது வலியும் பல்வலியும் என கேள்விப்பட்டதுண்டு. இரண்டுமே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நோகாமல் தலை முழுமைக்குமாக வலியைப் பரப்பும்.

இன்றுதான் மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் ஒலிபரப்பாகும் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியிக்காகக் குரல் பதிவு செய்ய திகதி கொடுத்திருந்தேன். அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்  புனிதா சுப்ரமணியம் மீண்டும் இலக்கியம் குறித்து பேச வாய்ப்பளித்துள்ளார். அவருக்கு நன்றி. தீவிர இலக்கியத்தில் இயங்கத்தொடங்கிய காலம் முதலே இவற்றையெல்லாம் எப்படி பொதுமக்களிடம் கொண்டுச் சேர்ப்பது என்றும் ஆரோக்கியமான வாசிக்கும் தலைமுறையை எப்படி உருவாக்குவது என்றும் ஏங்கியது உண்டு. புனிதா சுப்ரமணியம் போன்றவர்களால் அந்த எண்ணம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே 13 வாரங்கள் உலக இலக்கியம் குறித்துப்பேசியது பரவலான பார்வைக்குச் சென்றிருந்தது. சிலர் மொழிப்பெயர்ப்பு எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியிருந்தனர். வானொலி போன்ற ஊடகங்கள் மிக விரைவாக ஒன்றை எளிய மனிதர்களிடமும் எடுத்துச்செல்லும் சக்தி கொண்டவை.  எளிமை படுத்தி கூறுவதென்பதே அதில் உள்ள சாகசம்.

Continue reading

சிறுகதை: அடிப்படையான கேள்விகளும் புரிதல்களும்

00314.3.2015 – ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதுகலை மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் பதிவு இது. இந்நிகழ்வை நூலகர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து பேசியப்பின் சிறுகதை குறித்த அடிப்படையான கேள்விகளுடன் நான் வழிநடத்தினேன். நூலகத்தின் அழைப்பின் பெயரிலேயே இந்தக் கலந்துரையாடலை நான் வழி நடத்தினேன். என்னுடன் பூங்குழலி,  மணிமொழி , யோகி ஆகியோர் உடன் வந்தனர்.


நிகழ்வில் பேசியதில் ஒரு பகுதி :

0004நண்பர்களே, சிறுகதைகள் குறித்து பார்ப்பதற்கு முன் இலக்கியம் ஏன் அவசியமாகிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் தேடுவோம். இலக்கியம் குறித்து நம்மிடம் சில முன் முடிவுகள் உண்டு. உண்மையில் அவை போலியானவை. யாரோ நம் மனதில் ஏற்றிவிட்டவை. நாம் அந்த முடிவுகள் குறித்து ஆராய்ந்ததே இல்லை. எந்தக் கேள்வியும் இல்லாமல் கல்விக்கூடங்களிலோ நூல்களிலோ சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். இன்று அதன் சில அம்சங்களை ஆராய்வோம்.

Continue reading

சோரம் போனவனின் : கடிதம்

மகாநாடு ஒரே சொதப்பலாக இருக்குமென்பது எதிர்பார்த்ததுதான், நேரில் பார்க்கவோ கேட்கவோ இயலாத குறையை உங்கள் கட்டுரை தீர்த்துவைத்தது. மற்றும் திருக்குறளில் இன்னாசெய்தாரை ஒறுத்தல் எனப்து சரியானதே. ஒறுத்தல்= தண்டித்தல் என்று பொருள்படும்.

இன்னும் இலங்கை வழக்கில் மீனைப்பொரித்தல் என்போம், பெருநிலத்தில் பொறித்தல் என்பார்கள். சில இடத்தில் மெள்ள மெள்ள என்போம் சிலர் மெல்ல மெல்ல என்பார்கள். எல்லாந்தான் இருந்துவிட்டுப்போகட்டுமே. நஷ்டம் ஒன்றுமில்லை.

காப்பியைத்தான் குழம்பி என்றாலோ, கொட்டைவடிநீர் என்றாலோ அது காப்பியைச் சுட்டும் தனித்துவமான சொல்லாகத்தெரியவில்லையே. கோயம்புத்தூர் சென்ற சமயம்   ” இரண்டு கொட்டைவடிநீர் கொடுங்கள்” என்று கேட்டேன். அங்கே காப்பிக்கடை வைத்திருந்த யாழ்ப்பாணத்து ஆள் கேட்டார்: “ அய்யா யாம் எதன் கொட்டையை வடித்துத்தரவேண்டும்”.

கருணாகரமூர்த்தி.பொ
http://karunah.blogspot.com