நண்பர்களுக்கு…
19 மற்றும் 20 ஆம் திகதி வல்லினம் வகுப்பு 3 நடைபெரும். இந்நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் உரையும் / உரையாடலும் நடைபெறும். முற்றிலும் இலவசமாக நடைபெரும் இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம்.
நண்பர்களுக்கு…
19 மற்றும் 20 ஆம் திகதி வல்லினம் வகுப்பு 3 நடைபெரும். இந்நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் உரையும் / உரையாடலும் நடைபெறும். முற்றிலும் இலவசமாக நடைபெரும் இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம்.
இதை நான் படபடத்த மனதுடன்தான் எழுதுகிறேன். காரணம் இந்த உணர்வு ஒரு வருடமாகத் தேக்கிவைக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இந்த அசிங்கம் நிகழும்போது குரல் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்
உண்மை அறியும் குழு அறிக்கை
தருமபுரி
நவம்பர், 15, 2012
ம. நவீன் ! மலேசிய மண்ணிலிருந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. ‘வல்லினம்’ எனும் சிறுசஞ்சிகையின் ஆசிரியர். இன்று அவ்விதழ் இணையச் சஞ்சிகையாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
Continue reading
‘ஐஞ்சுகட்டை வௌக்கமாற ஒன்னா கட்டி
அதில ஒரு வௌக்கமாற அனல்ல காட்டி
மணல்ல சொருவி
ஒக்கால மண்ண வைச்சு
பெத்தவள பின்ன வைச்சு
நிக்க ஒன்றடி, நிமிர ரெண்றடி,
குனிய வைச்சு, மூன்றடி அடிப்பேன்’
டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”
‘புயலிலே ஒரு தோணி’யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள். அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். “கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை – அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு – அது அறிவுக்கு வரம்பு.”
Continue reading
இன்று (14.04.2012) வல்லினம் குழுவினரின் சந்திப்பு கோலாலம்பூரில் நடைப்பெற்றது. நான் (நவீன்), சிவா பெரியண்ணன், பாலமுருகன், மணிமொழி, தயாஜி,யோகி, பூங்குழலி, சந்துரு, ராஜம் ரஞ்சனி, , நித்தியா, தினேஸ்வரி இவர்களோடு வல்லினம் இதழில் ஆலோசகர் மா.சண்முகசிவாவும் கலந்து கொண்டார். மலேசிய இளம் தலைமுறையினர் அடுத்தக்கட்டத்தை நோக்கி இலக்கியத்தையும், சிந்தனையையும் நகர்ந்த தேவையான பயிற்சிகள் வழங்க வேண்டியது பற்றி இன்றைய கலந்துரையாடல் அமைந்தது.
ஒருவன் புயலடிக்கும் பெருங்கடலில் தோணி ஓட்டுகிறான். புயல் தோணியைக் கவிழ்க்கப் பார்க்கிறது. தோணி ஓட்டுபவன் அதிலிருந்து மீள பெரும் சாகசத்தில் ஈடுபடுகிறான். அவனுக்கு அந்தச் சாகசம் பிடித்துள்ளது. புயல் எழுப்பும் அலையின் ஆக்ரோசத்தை துடுப்புகளின் லாவகம் கொண்டு சமாளிக்கிறான். புயலின் எதிர்ப்பாராதத் தீவிரத்தாக்குதல்களை, அறிவின் – உடலின் வேகத்தால் எதிர்க்கொள்கிறான். இறுதியில் அந்தப் பெரும் கடலில் , பயங்கரப் புயலில் தோணி கவிழ்கிறது. அதுவரை போராடிய தோணி அங்கு அர்த்தமற்று மூழ்குகிறது. அதற்குப் பின் பெரும் கடல் புயலில் தோணி கவிழ்ந்தது ஒரு ஒற்றை வரி செய்தி. அவனது சாகசத்தை யாரும் வர்ணிக்கப் போவதில்லை. அவன் திறமை கடல் உள்ளவரை கொண்டாடப்பட போவதில்லை. கடலுக்கு முன் அவன் சாகசம் அர்த்தமற்றவை. எளிதில் மறக்கப்பட கூடியவை. அதுதான் அதன் இயல்பு. அதுதான் வாழ்வின் இயல்பும்.
Continue reading
கடந்த சில வாரங்களாகப் பத்திரிகைகளின் முதன்மைச் செய்திகளில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் நிலைபாடு குறித்த விமர்சனங்கள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. எப்போதோ எழுந்திருக்க வேண்டிய போராட்டம். ஆங்காங்கு மிக மெல்லிய குமுறலாய் இருந்த குரல்கள் இக்காலக் கட்டத்தில் ஒன்றிணைந்துள்ளது வரவேற்கத்தக்கதே. தொடர்ச்சியாக அச்செய்திகளை கவனிப்பதில் பல மலேசியக் கலைஞர்களிடமிருந்து எழும் உள்ளார்ந்த கேள்வியில் முதன்மையாக ஒலிப்பது ஒன்றுதான். ‘ஏன் இன்னமும் மலேசியக் கலை வெளியை தமிழகக் கலைஞர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள்?’
Continue reading
பொதுவாகவே எழுத்தாளர் சங்க செயல்பாடுகள் குறித்து என்னிடம் மாற்று கருத்துகள் உண்டு. தமிழ்ப்பள்ளிகள் தள்ளாடிக்கொண்டிருக்க சாமிவேலு ‘ஏய்ம்ஸ்’ பல்கலைகழகம் கட்டியது போல இலக்கிய செயல்பாடுகளில் நமது அடிப்படையான பலவீனங்களை களைய முயலாமலேயே அது தனது கால்களை அந்தரத்தில் வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுவதுண்டு.