கட்டுரை/பத்தி

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை

ஆதவன் தீட்சண்யா மூலமாகவே தேவா அறிமுகமானார். ‘குழந்தை போராளி’ எனும் சுயசரிதையை, டச்சு மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்தவர். அதே போல ‘அனொனிமா’ எனும் நூலை ஜெர்மன் மொழியிலிருந்து மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டு முறை தொலைபேசியில் பேசினோம். அப்போது அந்தப் புத்தகம் குறித்த கருத்துரைகளை வாசித்திருப்பதாகவும் நூலை இன்னும் வாசிக்கவில்லை என உண்மையை ஒப்புக்கொண்டேன். இறுதி தமிழகப்பயணத்தில்தான் அந்நூலை நீலகண்டனிடம் வாங்கினேன். தொடர்ச்சியாகத் தமிழ் நாவல்கள் குறித்த கவனத்தில் இருப்பதால் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஓர் எழுத்தாளரின் ஒரு படைப்பைக்கூட படிக்காமல் அவருடன் உரையாடுவது குற்ற உணர்வையே எழச்செய்யும். ஆனால் வேறு வழி இல்லாமல் அதைதான் செய்ய நேர்ந்தது.
Continue reading

அஞ்சலி – எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!

 

எம்.குமாரன்

எல்லோர் போலவும் எழுத்தாளர் எம்.குமாரனின் மரணச்செய்தியும் எவ்வித விசேட ஓலங்களை எழுப்பாமல் குறுஞ்செய்தியில் வந்து சேர்ந்தது. முதலில் இயக்குநர் சஞ்சைதான் தகவல் அனுப்பினார். பின்னர் சை.பீர் முகம்மதுவிடமிருந்து சற்று விரிவான தகவலுடன் வந்தது. அதில் ‘பிரபல எழுத்தாளர் எம்.குமாரன்’ எனும் அடைமொழி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சந்துரு அவர் பணிபுரியும் நாளிதழிலிருந்து அழைத்து எம்.குமாரன் படம் கிடைக்குமா எனக் கேட்டார். இணையத்தில் சுத்தமாக இல்லை. மலேசியாவில் ‘பிரபலமான எழுத்தாளர்களின்’ நிலையை எண்ணி வருந்திக்கொண்டேன்.

எம்.குமாரன் இறுதியாகக் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வு ‘3-வது வல்லினம் கலை இலக்கிய விழா’வாகத்தான் இருக்க வேண்டும். இறுதியாக அவரைச் சந்தித்த போது மலேசிய இலக்கிய சூழல் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது முற்றிலும் மலேசிய இலக்கிய சூழல் குறித்த அதிருப்தியான மனநிலையில் இருந்தார். வல்லினத்தின் வருகை அவருக்கு உற்சாகம் தருவதாய் இருந்தது. இனி தான் எழுதினால் அது வல்லினத்துக்கு மட்டும்தான் என்றார்.
Continue reading

ஜெயமோகன்; விஷ்ணுபுரம் விருது; எழுத்தாளனை போற்றுதல்


தமிழக எழுத்தாளர்களில் நேரில் அதிக நெருக்கமாக நான் உரையாடியது ஜெயமோகன் மற்றும் மனுஷ்ய புத்திரனிடம்தான். இருவரும் மலேசியா வந்துள்ளனர். இருவருடனும் நெடும்பயணங்கள் செய்துள்ளேன். இருவருக்கும் உள்ள ஒற்றுமையாக நான் கருதுவது பிற படைப்பாளிகள் குறித்த அவர்களின் அக்கறை.
Continue reading

சோளகர் தொட்டி : வதையும் வன்முறையும்

‘சோளகர் தொட்டி’ குறித்து எழுத தடையாக வந்தமைவது எது என்ற கேள்வியை நான் இந்த வாக்கியத்தைத் தொடங்கும் போதும் கேட்டுப் பார்க்கிறேன். ஒருவேளை இந்நாவலை விவரிக்கத் தொடங்கும் போது உறுவி எடுக்க முடியாமல் விரவி கிடக்கும், அதன் அடர்த்தியான வாழ்வு ஒருவித தயக்கத்தைக் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. வெவ்வேறு சம்பவங்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரதியை விவரிக்க முனையும் போது சம்பவங்களைச் சொல்லி கதையை உணர்த்துதல் எளிது. ஆனால் ‘சோளகர் தொட்டி’ மானுட விரோதத்துக்கான எதிர்ப்புணர்வை வெவ்வேறு தொணியின் மூலம் அதன் ஆழம்வரை கொண்டு செல்ல முனைகிறது.

Continue reading

கறுப்பனாக இருப்பதின் பிரச்சனைகள்: கோ.முனியாண்டி

இலங்கையிலிருந்து திரும்பிய களைப்பு இன்னமும் தீரவில்லை. காலம் தாழ்த்தியே கோ.முனியாண்டியின் எதிர்வினைகள் கண்ணில் பட்டன. பொதுவாகவே எதிர்வினைகளையும் மாற்று கருத்துகளையும் வரவேற்பவன் நான். தொடர்ந்த உரையாடல்கள் மூலமாக மட்டுமே ஒரு சமகால அரசியல் சூழ்நிலையை பல்வேறு கோணங்களில் காண முடியும்; முடிந்திருக்கிறது. துரதஷ்டவசமாக மலேசியாவில் மாற்று கருத்துகளை பலரும் விரும்புவதில்லை. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கோ.முனியாண்டி.
Continue reading

கடிதம்:ராமனின் நிறங்களா? மாரீசனின் நிறங்களா? – சிங்கை இளங்கோவன்

கோமு என்று பிரியத்துடன் நான் அழைக்கும் கோ முனியாண்டியை 1980 -இல் இருந்தும், நவீனை  2009 -இல்  இருந்தும் எனக்கு நேரடியாகத்  தெரியும். இருவேறு தலைமுறையினரான இவர்களுடனான என் நட்பு அறிவார்ந்த தளத்தையும் கடந்த நெஞ்சார்ந்த அன்பு சார்ந்தது.
Continue reading

இலக்கியம் : சட்டாம்பிள்ளைத்தனமும் விமர்சனமும் – கே.பாலமுருகன்

1.   இலக்கிய விமர்சனம்

சமீபத்தில் ம.நவீன் வலைத்தலத்தில் கோ.முனியாண்டி நவீனுக்கு எதிராக எழுதியிருந்த எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. கலைக்கு எதிரான விமர்சனம், படைத்தவனை நோக்கிய தனிமனித விமர்சனம், இலக்கிய செயல்பாடுகளின் மீதான விமர்சனம் என விமர்சனங்களை மூன்று வகையாக முன்வைக்கலாம். ம.நவீன் முன்வைக்கும் பல விமர்சனங்கள் இலக்கியவாதிகளின் இலக்கிய செயல்பாடுகளின் மீதும் அவர்களின் நேர்மையற்ற நடவடிக்கைகளின் மீதுமாக இருக்கும். பலரின் மீது வல்லினம் முன்னெடுத்த எதிர்வினைகள் எந்தத் தனிமனிதரின் சுயநலத்துக்காகவும் அல்லாமல் இலக்கிய பொதுமையைப் பாதிக்கும் செயல்களை நோக்கியே இருந்தன.
Continue reading

கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.

கோ.முனியாண்டியினின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். http://vallinam.com.my/navin/?p=900#more-900. கோ.முனியாண்டி சொல்லிக்கொள்வது போல 50 ஆண்டுகளாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் எதிர்வினை இது. 50 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவரால் எப்படி இத்தனை பலவீனமான எதிர்வினையை எழுத முடிகின்றது என்ற ஆச்சரியத்தோடுதான் இதை பிரசுரித்தேன். வசைகள். முறுக்கிய மொழி. உளரல்கள். பொய்கள்.
Continue reading

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

இந்த எதிர்வினையை எழுதும் பொழுது மேலும் மேலும் கீழ் நோக்கிச் செல்வது போன்றதொரு மனநிலையைத் தவிர்க்க இயலவில்லை. மரத்துப்போய்விட்ட மலேசியத் தமிழ் சமூகத்தை எழுத்தின் மூலமாகவும் உரையாடல்கள் மூலமாக மட்டுமே மீண்டும் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முடியும் என்கிற படியால் சமகால இலக்கிய சூழல் மற்றும் அதை கீழ் நோக்கி இழுக்க முயலும் அரசியல் செயல்பாடுகள் இவற்றிற்கு மத்தியில் மிக நுணுக்கமாக நடக்கும் சுரண்டல்கள் குறித்து பேச விழைகிறேன். நேரடியான அறிவுப்பூர்வமான இலக்கியச் விவாதங்களுக்கு பதில் சொல்ல திரணியற்றவர்கள் இவ்வெதிர்வினையின் குரலை மாற்றி அமைக்கக் கூடும் எனும் கவனம் கூடியுள்ளது.
Continue reading