கோமு என்று பிரியத்துடன் நான் அழைக்கும் கோ முனியாண்டியை 1980 -இல் இருந்தும், நவீனை 2009 -இல் இருந்தும் எனக்கு நேரடியாகத் தெரியும். இருவேறு தலைமுறையினரான இவர்களுடனான என் நட்பு அறிவார்ந்த தளத்தையும் கடந்த நெஞ்சார்ந்த அன்பு சார்ந்தது.
Continue reading
கட்டுரை/பத்தி
இலக்கியம் : சட்டாம்பிள்ளைத்தனமும் விமர்சனமும் – கே.பாலமுருகன்
1. இலக்கிய விமர்சனம்
சமீபத்தில் ம.நவீன் வலைத்தலத்தில் கோ.முனியாண்டி நவீனுக்கு எதிராக எழுதியிருந்த எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. கலைக்கு எதிரான விமர்சனம், படைத்தவனை நோக்கிய தனிமனித விமர்சனம், இலக்கிய செயல்பாடுகளின் மீதான விமர்சனம் என விமர்சனங்களை மூன்று வகையாக முன்வைக்கலாம். ம.நவீன் முன்வைக்கும் பல விமர்சனங்கள் இலக்கியவாதிகளின் இலக்கிய செயல்பாடுகளின் மீதும் அவர்களின் நேர்மையற்ற நடவடிக்கைகளின் மீதுமாக இருக்கும். பலரின் மீது வல்லினம் முன்னெடுத்த எதிர்வினைகள் எந்தத் தனிமனிதரின் சுயநலத்துக்காகவும் அல்லாமல் இலக்கிய பொதுமையைப் பாதிக்கும் செயல்களை நோக்கியே இருந்தன.
Continue reading
கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.
கோ.முனியாண்டியினின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். http://vallinam.com.my/navin/?p=900#more-900. கோ.முனியாண்டி சொல்லிக்கொள்வது போல 50 ஆண்டுகளாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் எதிர்வினை இது. 50 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவரால் எப்படி இத்தனை பலவீனமான எதிர்வினையை எழுத முடிகின்றது என்ற ஆச்சரியத்தோடுதான் இதை பிரசுரித்தேன். வசைகள். முறுக்கிய மொழி. உளரல்கள். பொய்கள்.
Continue reading
கோ.முனியாண்டியிடமிருந்து ஓர் எதிர்வினை.
மலேசிய தமிழிலக்கியத்தின் புதிய சட்டாம்பிள்ளை(நவீன்)க்கு ‘இராமனின் நிறங்கள்’ கோ.முனியாண்டியின் பதில்.
சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

இந்த எதிர்வினையை எழுதும் பொழுது மேலும் மேலும் கீழ் நோக்கிச் செல்வது போன்றதொரு மனநிலையைத் தவிர்க்க இயலவில்லை. மரத்துப்போய்விட்ட மலேசியத் தமிழ் சமூகத்தை எழுத்தின் மூலமாகவும் உரையாடல்கள் மூலமாக மட்டுமே மீண்டும் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முடியும் என்கிற படியால் சமகால இலக்கிய சூழல் மற்றும் அதை கீழ் நோக்கி இழுக்க முயலும் அரசியல் செயல்பாடுகள் இவற்றிற்கு மத்தியில் மிக நுணுக்கமாக நடக்கும் சுரண்டல்கள் குறித்து பேச விழைகிறேன். நேரடியான அறிவுப்பூர்வமான இலக்கியச் விவாதங்களுக்கு பதில் சொல்ல திரணியற்றவர்கள் இவ்வெதிர்வினையின் குரலை மாற்றி அமைக்கக் கூடும் எனும் கவனம் கூடியுள்ளது.
Continue reading
0107700210 என்ற எண்ணிலிருந்து கோழையில் குரலும்;கோ.முனியாண்டியும்!
வணக்கம் வல்லினம் வாசகர்களே! கொஞ்ச காலம் முன்பு சை.பீருக்கு நமது வல்லினம் வெளியிட்ட சிறப்பிதழில் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டு மழையை மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது அதே மாதிரியான ஒரு பாராட்டு மழையை சித்தியவான் முனியாண்டி சிறப்பிதழில் அவருக்கு வழங்க வல்லினம் முனைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது! சை.பீர் சாமிவேலுவை வைத்து நடத்திய புத்தக வியாபாரத்தை அத்தனை சிறப்பாகப் பாராட்டியிருந்த வல்லினம் – இப்போது சாமிவேலு + ரத்தினவள்ளி அம்மையார் கூட்டணியில் முனியாண்டி நடத்தியுள்ள ராமனின் நிறங்கள் புத்தக வெளியீட்டை சும்மா விடுவார்களா என்ன? குறைந்தது ‘are u so cheap mr muni?’ என்றாவது பாராட்ட தவற மாட்டார்கள் அல்லவா? தங்களை நேர்மையான பாராபட்சம் அற்ற விமர்சகர்களாக நிரூபிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போமே. நன்றி. ஆகஸ்டு மீண்டும் சந்திப்போமா?
அன்புடன் வல்லினம் வாசகர் வட்டம்
மா.சண்முகசிவா : அடையாளம் சுமக்காத ஆளுமை!
நான் சண்முகசிவாவைச் சந்தித்தபோது காதலித்துக்கொண்டிருந்தேன். என் காதல் பற்றிச் சொல்லதான் நான் சண்முக சிவாவைச் சந்தித்ததாகச் சொல்லலாம். எதையும் சிந்திக்கவிடாமல் செயல்படவிடாமல் சதா நச்சரித்துக்கொண்டிருந்த காதல் அது. நான் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரவியிருப்பதாகப் பெரும் கற்பனையில் இருந்தபோது என் கால்கள் தரையில் இருந்ததைத் திரும்பத் திரும்பக் காட்டிய காதலை நான் உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந்தேன். என் காதலை நான் உள்ளூர வெறுப்பதை வேறு யாராவது சொல்லி நான் கேட்க வேண்டும் போல இருந்தது. காரணம் ஒவ்வொரு கனமும் நான் காதலை நேசிப்பது போன்றதான ஒரு பாத்திரத்தில் மிகத் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தேன்.
ரஜினியின் தற்கொலை
‘Ovi yar Raja commit suicides.’
நண்பர் சந்துருவிடமிருந்து இந்தக் குறுந்தகவலை ஒருதரம் உரக்க வாசித்தபோது வீடு நிசப்தமானது. அந்நிசப்தத்தினூடே நான் சந்துருவை அழைத்துக் கேட்டபோது, விவரம் அவர் சொல்லும் வரை எனக்குத் தெரியாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
Continue reading
இலை மறைவில் புது உயிர்கள்!
21-5-1964-ல் தமிழ் முரசு பத்திரிகையில் முதல் புதுக்கவிதை தோன்றியதாக வரலாறு சொல்கிறது. `கள்ளபார்டுகள்’ என்ற கவிதையை எழுதிய சி. கமலநாதன் பெயர் தொடர்ந்து எல்லா புதுக்கவிதைத் திறனாய்வு கட்டுரைகளிலும் இடம்பெற்று விடுகின்றது. இன்னும் சிலர் அது `கள்ளபார்டுகள்’ இல்லை `காலப்படகுகள்’ எனவும் கூறிவருகின்றனர். அவர் காலகட்டத்தில் புதுக்கவிதைகள் எழுதியபைரோஜி நாராயணன், எம். துரைராஜ், போன்றோர்களின் படைப்புகளும் முறையான பதிவில் இல்லாமல் எங்கோ ஓர் அலிபாபா குகைக்குள் அடைந்து கிடக்கிறது. இப்படி ஆரம்பமே ஆதாரங்கள் குறைந்திருக்கும் புதுக்கவிதை வரலாறு நமக்கு.
Continue reading
சை.பீரும் அவதூறும் …
இந்த எதிர்வினையை எழுதுவதற்கு முன் மிகக் குறைந்த சொற்களை மட்டுமே பயன்படுத்தும் திறன் வாய்க்க வேண்டுமென எனக்குள் ஒருமுறை கூறிக்கொள்கிறேன். சிலருக்கு அதிகச் சொற்களைப் பயன்படுத்துவது விரயம்.
Continue reading