கட்டுரை/பத்தி

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல் (கி.இளம்பூரணன்)

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். தோற்றங்களைப் போலவே அந்த நிலத்தில் தெய்வம் உருவானதற்கான கதைகளும் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுண்டு. இந்தக் கதைகள் அனைத்துமே மக்களின் கண்ணோட்டங்கள், பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள் என்றும் அந்தக் கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை, உணர்வுகளை, மதிப்பீடுகளை, வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்கிறார் லக்‌ஷ்மி மணிவண்ணன். (தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்).

Continue reading

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும் (அழகுநிலா)

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட ஆரம்பித்தது. நான் ஓடிச்சென்று அம்மாச்சியிடம் விஷயத்தைச் சொல்ல “பெத்தவளுக்கு இல்லாத உரிமையா? தின்னுட்டுப் போகட்டும் விடு” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்ததை அந்த வயதில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாய்மையின் வேறொரு பரிமாணத்தைப் பற்றிய குழப்பம் முதன் முதலில் அன்றுதான் என் மனதில் நுழைந்தது.

Continue reading

வாழைமர நோட்டு: சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கம்

தோக்கியோவிலிருந்து வேலை நிமித்தமாக சில நாட்கள் மலேசியா வந்திருந்த நண்பர், எழுத்தாளர் ரா. செந்தில்குமாரிடம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசிய நாடுகள் மீது போர் தொடுத்தது, அவற்றைக் கைப்பற்றியது பற்றி அந்நாட்டு கல்வியாளர்களால் ஆய்வுகளோ அல்லது பதிவுகளோ செய்யப்பட்டுள்ளனவா, அவர்களிடம் அது குறித்த பார்வைகள் என்னவாக உள்ளன என்று கேட்டேன். அவர் பதில் ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் ஒன்றும் இல்லாதது மட்டுமல்ல எந்த ஜப்பானியரும் அது குறித்து உரையாடவும் மாட்டார்கள் என்றார்.

Continue reading

நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது நான்கு கால்களையும் மொத்தமாய் திருப்பி மறுபுறம் சீறும் கணம் குபுக்கென பார்வையாளர்களுக்குத் தூக்கிப்போடும். மேலிருந்து கீழாக அதன் சாகசத்தைப் பார்க்கும் கண்களுக்கு அதன் துள்ளல்கள் பழகப் பழக அத்தனையும் ஓர் ஒழுங்கில் நிகழ்வதாகத் தோன்றும். நுண்வெளி கிரகணங்களை வாசித்து முடித்தபோதும் அந்நாவல் சு.வேணுகோபாலின் கட்டற்ற துள்ளல்கள் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு என்றே மனதில் முதலில் தோன்றியது.

Continue reading

குருபூர்ணிமா

சீ.முத்துசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரையைப் பதிவேற்றம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபிரேசர் மலையை நோக்கி நண்பர்களுடன் புறப்பட்டேன். மார்ச் மாதம் அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தபோதும் நான் இதே நண்பர்களுடன்தான்  தைப்பிங் நகரில் சுற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதி தொலைக்காட்சியில் விடுமுறையை அறிவித்தபோதே உருப்படியாக ஏதாவது எழுதவேண்டும் எனத் திட்டம் இருந்தது. அவ்வகையில் ஏப்ரல் மாதம் மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் எழுதலாம் எனத்  தொடங்கினேன். பத்து மலேசிய எழுத்தாளர்கள்; அவர்களது மொத்த  நாவல்கள் எனும் அடிப்படையில் வாசிப்பையும் எழுத்தையும் திட்டமிட்டுக்கொண்டேன். ஜூலை 3 எழுதிய இறுதிக் கட்டுரையுடன் பத்து எழுத்தாளர்களின்  27 மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தேன்.

Continue reading

சீ.முத்துசாமி நாவல்கள்

முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக இருந்த 1970களின் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில், சீ.முத்துசாமியின் நுழைவு தனித்துவமானது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் (இரைகள்) நுண்மையான அகவய சித்திரங்களால்  வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் (கருகல்) அதற்குரிய மொழியில் புனைவாக்கினார்.  1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ.முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின.

Continue reading

சை.பீர்முகம்மது நாவல்கள்

மலேசியாவில் மு.வரதராசனின் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம்போலவே ஜெயகாந்தனின் நாவல்களும் பரந்த வாசகர் பரப்பை அடைந்த காலம் ஒன்றுண்டு. இவ்விரு எழுத்தாளர்களுடைய படைப்பின் தளமும் தரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் சூழலில் வாசகர்களை இவர்கள் ஒருங்கே பாதித்தது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்.

Continue reading

அ.ரெங்கசாமி நாவல்கள்

‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்’ வரை என்ற தனது சுயவரலாற்று நூலில், நாவல் எழுதுவதற்கான உந்துதலை மலேசியத் தமிழர்களின் இக்கட்டான வாழ்வை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பெற்றதாகச் சொல்கிறார் எழுத்தாளர் அ.ரெங்கசாமி. இயல்பிலேயே இருந்த கலையார்வம் அவரை புனைவை நோக்கி தள்ளியது. தனது இளமைக் காலத்தில் தொடர்கதைகள், சிறுகதைகள் எழுதியதோடு வில்லுப்பாட்டு, மேடை நாடகம் என ஆர்வமாக இயங்கினார். கலை என்பது மனிதனுக்குப் படிப்பினையைக் கொடுக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரெங்கசாமி. ‘பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்’ என இமயத் தியாகம் நாவல் முன்னுரையில் ரெங்கசாமி எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

Continue reading

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

தன் வீட்டில் கூடு கட்டி மூன்று குஞ்சுகள் பொரித்த குருவிகளுடனான அனுபவம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் நான்கு பதிவுகள் எழுதியிருந்தார். அதுவே என் வீட்டில் குருவிகள் கூடு கட்டியிருந்தால் நான் சிறந்த சமையல் குறிப்புகளை வழங்கியிருப்பேன் என முகநூலில் சொல்லப்போக நண்பர்கள் சிலர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். கிராதகா, பாதகா என வாட்சாப்புகள் வந்தன. இப்படியெல்லாம் விளையாடலாமா என அறிவுரைகள் வேறு. நான் விளையாடவில்லை உண்மையைத்தானே சொன்னேன் என அப்பாவியாய் சொல்லப்போக ‘அடப்பாவி’ என மீண்டும் வசைகள். 

Continue reading

ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் மரண ரயில்

ஆர்.சண்முகம்

அண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் என்னைச் சந்தித்தார். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வரலாற்றை ஒட்டியே தனது ஆய்வு இருக்கப்போவதாகக் கூறிய அவர், மலேசிய வரலாற்று நாவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். என்னுடைய ‘பேய்ச்சி’ நாவல் வேண்டுமெனக் கேட்டார். நான் ‘பேய்ச்சி’ வரலாற்று நாவல் இல்லை எனச்சொன்னேன். தான் அந்நாவல் குறித்த விமர்சனங்களை வாசித்ததாகவும் அதில் லுனாஸில் நடந்த சாராய மரணங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறினார். இருக்கலாம், ஆனால் அந்த நாவல் அதன் பொருட்டு எழுதப்பட்டதல்ல. அதற்குள் வரலாற்றின் சில தருணங்கள் உள்ளன; ஆனால் அது வரலாற்று நாவலல்ல என விளக்கினேன். இருந்தாலும் வாங்கிக்கொண்டு சென்றார். என்ன ஆகுமோ என பயமாகத்தான் இருக்கிறது.

Continue reading