நியூசிலாந்து

க்யோரா 5: தமிழ் மணி

சரியாக காலை 10 மணிக்கு நியூசிலாந்து அருங்காட்சியகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ள கட்டடம் செல்ல வேண்டியிருந்தது. அங்குப் பழங்கால கப்பல் மணி ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மாநாட்டை ஒட்டி ஏற்பாட்டுக்குழு இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தது.

Continue reading

க்யோரா 4: வண்ணங்களின் உலகம்

நியூசிலாந்துப் பயணம் உறுதியானபோது, நான் பார்க்க ஆசைப்படுவதாக தங்கவேலிடம் விரும்பிக்கேட்ட இடம் ஒரு தொடக்கப்பள்ளி. நான் செல்லும் நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளிக்குச் சென்று பார்த்திருக்கிறேன். அனுமதி கேட்டு அங்குள்ள பாட நூல்களை எடுத்து வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் மனம் தொடக்கப்பள்ளியில்தான் வடிவமைக்கப்படுகிறது. அதை ஒவ்வொரு நாடும் எவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகிறது, தன் குடிமக்களின் மனம் எவ்வாறு இயங்க வேண்டும் என ஓர் அரசு விரும்புகிறது என்பதை தொடக்கப்பள்ளிக்குச் செல்வதன் மூலம் அறியலாம்.

Continue reading

க்யோரா 3: மகத்துவமாகும் குற்றங்கள்

தங்கவேலுடன்

திட்டமிட்டபடி தங்கவேல் சரியாக காலை எட்டு மணிக்கு செல்வா வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நியூசிலாந்தில் நான் பார்த்தவரை பெரும்பாலும் நேர ஒழுங்கை கடைபிடிக்கின்றனர். அல்லது நான் சந்தித்தவர்கள் அப்படி இருந்தனரா என்று தெரியவில்லை. ஆனால் அக்குணம் எனக்கு உவப்பானது.

Continue reading

க்யோரா 2: குளிர் நிலம்

தங்கவேல் மற்றும் ரவீனுடன்

வெலிங்டன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது நண்பர் தங்கவேல் மற்றும் ரவீன் காத்திருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நியூசிலாந்து தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக சிறுகதைப் பயிலரங்கு ஒன்றை நடத்தியபோதே தங்கவேலுவை அறிவேன். திருநெல்வேலிக்காரர். நல்ல இலக்கிய வாசகர். அந்தப் பயிலரங்கில் ஆர்வமாகப் பங்கெடுத்தார். சிறந்த புனைவுகளைத் தேடி வாசிப்பவராக இருந்தார். நேரில் பார்த்தபோது இணையச் சந்திப்பில் பார்த்ததைவிட இளமையாகத் தெரிந்தார். அவர் கையில் என் பெயர் பொறித்த பலகை இருந்தது. அதில் ‘நியூசிலாந்து தங்கள் அன்புடன் வரவேற்கிறது’ எனும் வாசகம். ரவீன் நான் கலந்துகொள்ளும் தமிழ் விழாவை ஏற்பாடு செய்துள்ள தமிழ் சங்கத்தின் தலைவர்; மலேசியர்.

Continue reading

க்யோரா 1: காணாமல் போன கதை

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிட்னி விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் எனக்கு நடு இருக்கை எனத் தெரிந்தது. கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது சன்னல் ஓர இருக்கை கிடைத்தது. ஆனால் ரசிப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. மலேசியாவைக் கடக்கும்போது தொழுநோய் போன்ற செம்பனை திட்டுகள். சிங்கப்பூரில் இறங்கும்போது கட்டடக்காடுகள். சன்னல் ஓர இருக்கை கிடைப்பது பெரிதல்ல; அது எங்கு கிடைக்கிறது என்பதுதான் தலைவிதி.

Continue reading