கொஞ்ச நேரத்தில் பாலமுருகனும் வெளியேறினார். நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாமல் எங்கள் உரைகளை மட்டும் கேட்க வந்த ஏ.தேவராஜனை அப்போதுதான் பார்த்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எல்லாம் இலக்கிய கூட்டங்கள் சடங்குகளாகிவிட்ட அவலம் குறித்துதான். பாலமுருகனுக்குத் திடீர் என ஏதோ தோன்றியிருக்க வேண்டும். “ஆச்சரியமாக வல்லினம், பறை, மௌனம் ஆசிரியர்கள் மூவரும் இங்கு இருக்கிறோம். இது ஒரு இதழாசிரியர் சந்திப்பு” என்றுக்கூறி சிரித்தார். பாலமுருகனுக்கு எல்லா சூழலிலும் சிரிக்கும் வரம் கிடைத்திருக்கிறது.
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 6
அப்படி இப்படி என்று நிகழ்ச்சி தொடங்க 5.30 க்கு மேல் ஆகிவிட்டது. மண்டபத்தின் இறுதி இருக்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதில் கதைப்பதற்கும் மடிக்கணனிக்கு மின்சாரத் தொடர்பு கொடுப்பதற்கும் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சிவா, யுவராஜனை அழைத்துக்கொண்டு வந்தார். மூவரும் கணினியில் ஆழ்ந்தனர். நான் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் நிரம்பியிருந்தனர். எனக்கு என் கல்லூரி காலங்கள் ஞாபகத்திற்கு வந்தன.
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 5
காலை உணவாக மீகூன் காத்திருந்தது. பாலாவின் உறவினர் சுவையாகப் பிரட்டியிருந்தார். நிதானமாகக் கிளம்பினோம். அங்கிருந்து டேசாரு கடற்கரைக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இம்முறை சிவா மகிழுந்தைச் செலுத்தியது இன்னும் நிதானத்தைக் கொடுத்தது.
குரலற்றவர்களில் குரலாக … பறை
http://parai.vallinam.com.my/
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 4
விட்ட மழை தொடர்ந்தது. சாலையைப் பார்க்கச் சிரமமாக இருந்தது. தொலைவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிவது தெரிந்ததும் மகிழுந்தின் வேகத்தைக் குறைத்தேன். குறைக்க சிரமமாக இருந்தது . மழையில் வழவழப்பில் சக்கரங்கள் இழுத்துக்கொண்டுச் சென்று பின் மெதுவானது. முன்னே ஒரு ‘வியோஸ்’ ரக வண்டி பக்கத்து தடுப்பில் இடித்து நடுரோட்டில் தடுமாறி நின்று கொண்டிருந்தது. உதவ வழியில்லை. வேகத்தைச் சட்டென குறைப்பது ஆபத்து. பின்னால் வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இடிக்க நேரலாம். மகிழுந்தை தொடர்ந்து விட்டேன். பாலா வண்டியை நிறுத்துவது சிரமம்தானே என்றார் பரிதாபத்தோடு. சிவா ‘யார் சொன்னா முடியாதுன்னு…முடியும். அதுக்கு நவீன் ஜேம்ஸ் போண்டாக இருக்க வேண்டும் ‘ என்றார். நான் கண்களைக் கூர்மையாக்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். முன்பு பிரேக் பிடிக்க கொஞ்சம் தாமதித்திருந்தாலும் நடந்திருக்கும் அசம்பாவிதம் எனக்கு மட்டும்தானே தெரியும். வண்டியின் வேகமும் குறைந்திருந்தது.
முகிலனும் முருங்கைப் பூவும்
தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள். கல்வியும், நாகரீகமாகிவிட்ட வாழ்வியல் முறையும், எளிதாகிவிட்ட உலகத் தொடர்புகளும் எந்த வகையிலும் அவர்களிடம் மாற்றம் கொண்டுவரவில்லை. திராவிட கழகப் பிண்ணனியில் பெரியாரைத் தவிர்த்து அறிஞர் அண்ணா, கருணாநிதி, போன்றோருடைய அடுக்குமொழியும் அலங்காரமுமான பேச்சில் உணர்ச்சி தூண்டப்பட்டு கொதித்தெழுந்த பரம்பரையின் இரத்தத்தொடர்பு, நமது நாட்டிலும் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது.
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 3
இடையில் ஏற்பட்டிருந்த சாலை விபத்தால் சாலை நெரிசல் ஏற்பட்டிருந்தது. கண்களுக்கு எட்டியவரை வாகனங்கள். சில சமயம் கட்டுமரங்களைச் சுமந்து செல்லும் பெரிய கனவுந்துகளைக் கடக்கும் போது மெல்லிய பயம் ஏற்படவே செய்தது. அந்த மரங்களைத் தாங்கியுள்ள சங்கிலி அறுந்து மரங்கள் மகிழுந்தின் மேல் சரிந்தால்… நாங்களாகவே கற்பனை செய்து பயந்து கொண்டோம். கூட்டத்தோடு பயப்படுவது நன்றாகத்தான் இருந்தது.
மறக்கும் கலை!
சோம்பிக் கிடந்த வீட்டின் மூன்றாவது மாடியில் நூலகத்தை அமைத்தவுடன் சட்டென அப்பிரதேசம் முழுதும் உயிர் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தனித்திருப்பது கசகசப்பான மனதின் தன்மையைக் கொஞ்சமாவது அமைதி செய்ய உதவுகிறது.
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று – 2
வெளியில் மழை இருட்டிக்கொண்டிருந்தது. பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிவாவும் பாலாவும் சினிமா தொடர்பாகப் பேசத்தொடங்கியிருந்தனர். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு அவர்கள் பேச்சில் கலந்துகொள்ளும் அளவுக்கு சினிமா தொடர்பான பரிட்சயம் இல்லை. அவை பெரும்பாலும் ஜப்பான், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய திரைப்படங்கள் பற்றியவை.
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று!
26 & 27 பிப்ரவரி நடக்கவிருந்த மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டிற்கு வெள்ளிக்கிழமையே ஜொகூர் செல்வதாகத் திட்டம். பாலமுருகன் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே கோலாலம்பூர் வந்துவிட்டார். சிவாபெரியண்ணன் 3 மணிக்கு வேலையிலிருந்து திரும்புவதாகச் சொன்னார். அதற்குள் தயாஜியைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கதைக்கலாம் என நானும் பாலமுருகனும் திட்டமிட்டிருந்தோம்.