வணிக எழுத்தும் தீவிர எழுத்தும்
சிங்கப்பூரின் சமகால சிறுகதைகள் குறித்து எழுதத்தொடங்கியதிலிருந்து பல்வேறு விதமான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில, குறிப்பிட்ட படைப்பாளியின் மேல் தங்களுக்கு இருக்கும் சுய வெறுப்பின் காரணமாகத் தன்னையும் அந்த விமர்சனத்தின் பங்காளியாக இணைத்துக்கொள்ள முயல்பவை. பொதுவாக இதுபோன்ற குரல்களுக்கு நான் செவி கொடுப்பதில்லை. விமர்சனம் முன்முடிவுகளுடன் உருவாவதிலும் சுய வெறுப்பின் வசைகளுக்கான மாற்று வடிவாகவும் தனது அறிவுஜீவிதத்தைக் காட்டும் தளமாகவும் இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. விமர்சனம் என்பது தீர்ப்புகள் அல்ல. சக வாசகனுடன் விவாதிக்கும் ஒரு முறை. இந்த விவாதங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கியும் முரண்பட்டும் ஒரு சமூகத்தின் முன் திரட்டப்பட்ட கருத்துகளாக எப்போதும் இருக்கின்றன ; நிலைப்பதில்லை. இன்னொரு காலத்தில் இன்னொரு விமர்சகனால் அது மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு புதிய முறையில் ஒரு படைப்பு அணுகப்படலாம்.
Continue reading →