
எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு, உங்கள் கதைகளை படித்த ஒரு வாசகனின் கடிதம். திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் வழியாகவே, வல்லினத்தில் நீங்கள் எழுதிய கதைகளை முன்னரே படித்திருக்கிறேன்.
Continue reading
எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு, உங்கள் கதைகளை படித்த ஒரு வாசகனின் கடிதம். திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் வழியாகவே, வல்லினத்தில் நீங்கள் எழுதிய கதைகளை முன்னரே படித்திருக்கிறேன்.
Continue reading
சிறுகதை: டிராகன்
இதுவரை நவீன், கழுகு, உச்சை, சியர்ஸ், ராசன், பூனியான் சிறுகதைகளை எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் ஒன்னொடு ஒன்று கலக்காதப் பாதரசம் போன்றது. யாதார்த்தம் நிறைந்த கதைக்களம். அதே சமயம் புதிர் அவிழா மர்ம முடிச்சுகள் சிக்கிக்கொண்டு இருக்கும் அது வாசகனின் வாசிப்புத்தன்மையையும் விரிவடையச்செய்து கொண்டே இருந்தது. நக்கல், நையாண்டி, பகடி வசனம், கருத்துத்தளவிவாதம், விலங்குகளின் சராசரி குணத்தைத் தவிர்த்து நுட்பமான செயல்பாங்கு, மானிட அனுபவமும், மானிட சிந்தனையும் ஒன்று திரண்ட சுவையுடன் நவீன இலக்கிய இலட்சணத்துடன் விளங்கின. இவைகள் ஒன்றை ஒன்றோடு கலப்பது சாத்தியமில்லை.
Continue reading
நவீன்,
பசியின் உக்கிரத்தில் விழுமியங்கள் கரைந்து போய் பின் தலை தூக்கி மீண்டும் பசியிடம் சரணடைவது இக்கதை. இறுதியில் இளங்கோ தனது தாயை பழைய வேலைக்கே செல்ல சொல்லுதல் இயலாத ஒருவனின் பாச வெளிப்பாடு. சூழலின் நெருக்கடியில் விழுமியங்கள் சரியும் போது அதனினும் உயர்ந்த உணர்வின் எழுச்சி அபாரமானது. இது இக்கதையில் சாத்தியமாகி உள்ளது. உண்மையில் இலக்கியம் இயங்க வேண்டிய விசேஷ தளம் இதுதான்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நவீன இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ‘இன்றைய உலக இலக்கியம் அறிமுகம்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். உலக இலக்கியப் படைப்புகளைச் சில கட்டமைப்புக்குள் வகைப்படுத்திக் கூறினார். அந்த வகையில், டிராகன் சிறுகதை இடப்பெயர்ச்சி சார்ந்த புனைவா (exodus writing) அல்லது புலம்பெயர்தலைச் சார்ந்த புனைவா (diaspora writing) ஒழுக்கச் சிக்கலை மையப் படுத்தும் புனைவா என கதையை வாசித்தவுடன் என்னை யோசிக்க வைத்தது.
Continue reading
டிரேகன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை இரு கோணத்திலிருந்து அணுகத் தோன்றுகிறது. உடற்குறையுள்ள மகனை ஈன்றதற்காக மனைவி மீது கோபம் கொள்வகிறார் இளங்கோவின் அப்பா. அந்தக் கோபத்தை அவன் தாயின் கற்பின் மீதான வெறுப்பாக ஐயமாக மாற்றிக் கொள்கிறார்.
Continue reading
இளங்கோவுக்குப் பசித்தது.
வயிற்றினுள் அமிலம் ஊற்றியதுபோல கொதித்துக் கொதித்து அடங்கியது. கொதிக்கும்போது கை கால்கள் நடுங்கின. அடங்கும்போது தலை வலித்தது. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட டிராகன் படத்தை சுருட்டி வைத்தான்.
அம்மா இன்னும் வரவில்லை.
Continue reading