மலேசிய இலக்கியம்

மலேசியத் தமிழ் சிறுகதை வரலாறும் புதிய அலைகளும்

முன்னுரை

பாலபாஸ்கரன்

மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.

Continue reading

இலட்சியப் பயணம்: சென்று சேராத முன்னோடி

ஐ.இளவழகு

2005இல் நவீன இலக்கிய வாசிப்புக்குள் நான் நுழையும்போது லட்சியவாத எழுத்துகளின் மேல் நண்பர்கள் வட்டத்தில் பெரும் பரிகாசம் இருந்தது. அதன் நாயகர்களாக இருந்த நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்கள் பல்கலைக்கழகத் தரப்பில் கவனப்படுத்தப்பட, நவீன இலக்கியவாதிகள் குழு அவ்விருவரும் பொருட்படுத்தத் தேவையற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே உரையாடல்களை நிகழ்த்தினர். இன்னும் சொல்லப்போனால் ‘லட்சியம்’ என்ற வார்த்தைகூட அப்போதெல்லாம் கேலி செய்யப்பட்ட நினைவு உண்டு. அவ்வகையில் அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் உருவான படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புகளையும் நவீன இலக்கியத்தை முன்னெடுத்தவர்கள் கவனப்படுத்தவில்லை.

Continue reading

துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ

கா.பெருமாள்

2016இல் கீழவளவு மலையில் சமண படுகைகளைக் கண்டுவிட்டு இறங்க முயன்றபோது  ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட பாதைகள் சரிந்துசெல்வதைக் கண்டேன். எந்த வழியில் ஏறிவந்தேன் என்று கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன். என்னை அழைத்துச்சென்ற நண்பர் அன்புவேந்தனும் இறங்கும் வழியைக் கணிக்கச் சிரமப்பட்டார். ஏறிவரும்போது அந்தச் சிக்கல் இல்லை. உச்சி மட்டுமே கவனத்தில் இருந்தது. சிறுகதை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசம் என மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சியைப் பார்ப்பதையும் உச்சியில் இருந்து பல்வேறு திசைகளில் பிரிந்து செல்லும் வழிதடங்களைப் பார்ப்பதையும் சொல்லலாம். சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துகொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.

Continue reading

செம்மண்ணும் நீலமலர்களும்: முதல் சுடர்

மலேசிய நாவல்களை வாசிக்கும்போது பெரும்பாலானவை ஏற்படுத்தும் சலிப்புக்குக் காரணம் அதன் அடிப்படை சாரமாக மறுபடி மறுபடி வரக்கூடிய இரண்டு அம்சங்கள்தான். முதலாவது படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ள நீதியுணர்வு சார்ந்த கோபம். இரண்டாவது மானுட உறவுகள் சார்ந்த குழப்பம்.

Continue reading

சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2019/10/100-00-0001-448-5_b.jpgஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.

Continue reading

சுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம்

மகரந்த வெளி

sunil-2‘மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார்.  அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றிருந்தால் இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. பெயர்களைப் பட்டியலிடுகையில் விடுபடல்கள் சாத்தியம் என்றாலும் ஈழ இலக்கியத்தில் எஸ்.பொவின் பெயர் விடுபடல் கூடாது என்றே எண்ணிக்கொண்டேன்.

Continue reading

மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

01pic-269x300மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில் எழுந்த குரல் சண்முகசிவாவினுடையது.

Continue reading

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம்

1மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்ட நகர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது. ஆனால், ரெ.கார்த்திகேசு முன்னின்று உருவாக்கிய இவ்விதழ்கள் குறித்து ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் எளிய வாக்கியங்களோடு கடந்துபோவதுதான் ஆச்சரியம். ‘மணிமன்றம்’ அல்லது ‘முத்தமிழ் படிப்பகம்’ போன்ற பிரமாண்டமான தொடர் முயற்சிகளில் மொழி சார்ந்த அக்கறைகளுக்கும் ‘கதை வகுப்பு’, ‘ரசனை வகுப்பு’ போன்ற சிறுகதை புனைவுக்கான அடிப்படை முன்னெடுப்புகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு என்றாலும் இவற்றிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு பரிச்சார்த்தமான முயற்சிகளுக்கு என்றே தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ சிறு குழுவில் உள்ளவர்களின் எளிய முயற்சிதான் எனினும் அதுவே நவீன இலக்கியத்தின் பாணி என யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை.

Continue reading

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

jeevaரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை மட்டுமே சொல்ல முடிவதைப் பார்க்கிறேன். தொடக்கத்தில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர்களால் மொழிவழியாகக் கற்பனைசெய்ய முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவர்களால் சொற்களில் இருந்து ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. சொற்கள் வழியாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே செய்தனர். தெரிந்துகொண்டதைத் தகவல்களாகச் சேமித்து ஓரிரு வாக்கியங்களில் கூறினர். அதையே விமர்சனமாகவும் நம்பினர். கடைசிவரை அவர்களால் ஒரு சிறுகதையினுள் நுழைந்து அதன் நுட்பத்தை தரிசிக்கவே முடியாது.

Continue reading

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!

டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”

‘புயலிலே ஒரு தோணி’யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள். அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். “கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை – அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு – அது அறிவுக்கு வரம்பு.”
Continue reading