லீகாட்

லீகாட்: ஓர் இளம் மனத்தின் இருண்ட பாதையும் தேடலும்

ம. நவீன் எழுதிய ‘லீகாட்’ என்ற உள்ளூர் தமிழ் நாவலை வாசித்து முடித்தேன். இந்நாவல் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைக் கதையாக மட்டும் அமைந்துவிடாமல், இளையோர் குற்றச்செயல்கள், சக மாணவர்களின் அழுத்தம், உடல் மற்றும் மனரீதியான வன்முறை, தனிமை, பாலுணர்வு, தாழ்வு மனப்பான்மை, அங்கீகாரத்திற்கான ஏக்கம் போன்ற பல்வேறு உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசுகிறது.

Continue reading

லீகாட்: சமூக கருப்பு வெள்ளை இருமை அல்லாத எண்ணற்ற சாம்பல் நிறங்களின் தொகுப்பு – கி. இளம்பூரணன்

தமிழ் நவீன இலக்கியத்தில் இளம்பருவ மனவியல், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை ஆழமாகப் பதிவு செய்யும் படைப்புகள் மிகக் குறைவு. அந்த வகையில், ‘லீகாட்’ நாவல் வெறும் வளரிளம் பருவக் கதையாக இல்லாமல், ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொள்ள மேற்கொள்ளும் அகப்பயணத்தின் ஆவணமாக அமைகிறது. குறிப்பாக இடைநிலைப் பள்ளி மாணவன் ஒருவன் தனது விடலைப் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல், சமூக, உடலியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகளை மிகுந்த யதார்த்தத்துடன் பதிவு செய்கிறது.

Continue reading

லீகாட்: இரண்டு முரணுணர்வுகளின் வலைப்பின்னல் – சாலினி

இந்த மண்ணில் பிறப்பெடுத்து வாழும் எந்த உயிரும் இந்த உலகில் வாழத் தகுதியுடையதே. ஒருவனின் செயல்களைக் கொண்டு, ஒருவன் வாழத் தகுதியற்றவன் என்று நம்மால் தீர்ப்பளித்துவிட இயலாது.  அவ்வாறு இந்த மண்ணில் ஜனனம் கொண்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவனாகவும், ஒழுக்கமற்றவன் என அழைக்கப்படுபவனாகவும் உருமாறும் ஒருவனின் அகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பை புனைவுகள் நமக்கு அளிக்கின்றன. அவ்வகையில், ‘லீகாட்’ நாவலும் அப்படிப்பட்ட ஓர் ஆணின் அகத்தை, அவன் அகத்தில் தேங்கிக் கொண்டிருக்கும் இருளை, உளவியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Continue reading