Category: மொழிப்பெயர்ப்பு

பிடிப்பு

தசைப்பிடிப்பு. அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அவன் தன்னால் நீண்ட தூரம் நீந்த முடியும் என்றுதான் எண்ணியிருந்தான். கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும்போதே அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்குகிறது. முதலில் அவன் அது வயிற்றுவலி என்று நினைத்தான் – தொடர்ந்து நீந்தினால் நீங்கிவிடலாம். ஆனால், வயிறு தொடர்ந்து இறுக, அவன் நீந்துவதை நிறுத்தி,…

அந்த விபத்து

சின்வுவா புத்தகக் கடைக்கு எதிரில், சாலைக்கு மறுபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்த சாலைப் பராமரிப்பு வேலையிடத்தில் விசுக்கென புகுந்த காற்றொன்று குப்பைகளைச் சுழற்றி வளைத்து அள்ளி எடுத்துக்கொண்டு போய் எங்கும் இறைக்கின்றது. அதன்  புழுதிப் படலம் அடங்கிக்கொண்டிருக்க, டெஸ்ஹெங் அவின்யுவிலிருந்த வானொலி பழுது பார்க்கும் கடையிலிருந்த வானொலியிலிருந்து நான்காவது ஒலிக்கூறு (beep) கேட்டதைத் தொடர்ந்து, இப்போது பிற்பகல் மணி…

மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

[2006ஆம் ஆண்டு Nou Hach மாநாட்டில் எழுத்தாளர் கே.எஸ். மணியம்  வழங்கிய சொற்பொழிவு] வணக்கம்! சக எழுத்தாளர்களிடமும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமும் பேசுவதற்கான இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேசப்போவதில் உங்களுக்குத் தேவையான சில கருத்துகள் இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக, மலேசியாவின் இலக்கியம் குறித்த காட்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த…

“அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

90களில் கே.எஸ்.மணியம் அவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல்  அவரது புனைவுலகம் மட்டுமல்லாது கருத்துலகையும் வாசகனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக, அரசியல் அவதானிப்புகளை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது. தமிழ் வாசகர்களுக்காக மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நேர்காணல் வழி அவரது புனைவுலகை மேலும் ஆழமாக உணர முடியும்…

ஒரு கற்பனையின் வழித்தடம் : கே.எஸ். மணியத்துடன் ஓர் உரையாடல்

கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்தும்  மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்களுடைய மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி  பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும்…

புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

கிழவன் மரணத்தை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அமைதியைக் கனவுகள் வந்து தொல்லைபடுத்தி குலைத்தன. அவற்றுள் சில கொடுங்கனவுகளின் கூர்மையான எல்லைவரை கொண்டுபோய் தூக்கத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தன. அவனது சிந்தனையைச் சிதைத்துகொண்டேயிருந்த கனவுகள் அவனை விரக்தியாலும் எரிச்சாலாலும் முணுமுணுக்க வைத்தன. “எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் இருந்தாதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” அவன் அப்போது சன்னல்வழி…

அந்தக் கோயில்

நாங்கள் தத்தளிப்பு மிகுந்த பரவசத்திலிருந்தோம். தேனிலவுடன் வரும் எதிர்ப்பார்ப்பு, விடலைக்காதல், மென்மை, வெம்மை ஆகியவற்றுடன் நெகிழ்ந்திருந்தோம். அரை மாதமே விடுமுறை என்றாலும் வங்வங்கும் நானும் பயணத்தைப் பலமுறை திட்டமிட்டிருந்தோம்; பத்து நாட்கள் திருமண விடுப்பு,மேலும் ஒரு வார கூடுதல் வேலை விடுப்பு. திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எங்களுக்கு அதைவிடவும் வேறெதுவும் அத்தனை…

மாயமான் – கே.எஸ்.மணியம்

சில வருடங்களுக்கு முன்,  பாசீர் பஞ்சாங்கின் புறநகர்ப்பகுதியில், தாமான் பஹாகியா புதிய வீடமைப்பு திட்டம் உருவானபின் அதுவரையிலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடங்களைப் பெயர்த்தெடுக்க வேண்டியதாகியது. அத்திட்டத்தில் உருவான நவீன, தனித்த, ஆடம்பர இரட்டைமாடி வீட்டு வரிசைகளின் குடியிருப்பைக் கடந்து, காடும் அதை ஒட்டிய மலை முகடுகளுக்கும் நெருக்கமான, ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள்…

இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கரிட் (Etger Keret) சிறுகதைகள்

உன்னுடையவன் – Your Man என்னைவிட்டு பிரியப்போவதாக எபிகாயில் கூறியபோது நான் அதிர்ச்சியில் இருந்தேன். வாடகை வண்டி அவளுடைய இடத்தில் தான் வண்டியை நிறுத்திவிட்டிருந்தது. அவள் காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த நடைபாதையில் நின்றவாறு இதற்குமேல் என்னைத் தேடி வர வேண்டாம் என்றாள், இதைப்பற்றி தொடர்ந்து பேசவும் விரும்பவில்லை என்றாள். இதெல்லாம்விட மிக முக்கியமாக என்னிடமிருந்து எந்த…

Etger Keret: மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

இஸ்ரேலிய எழுத்தாளர் Etger Keret (1967) சமகால உலக இலக்கியத்தில் முக்கியமான சிறுகதையாசிரியா்களில் ஒருவர். Pipelines (צינורות, Tzinorot, 1992), அவரது படைப்பில் வெளியான இம்முதல் சிறுகதை நூல் மிகக் கடுமையான புறக்கணிப்புக்கு உட்பட்டது. ராணுவத்தில் தன்னுடன் பணிபுரிந்த நண்பனின் மரணத்திற்குப் பிறகு எழுத வந்த அவரது இரண்டாவது நூல் Missing Kissinger  (געגועיי לקיסינג’ר, Ga’agu’ai…

பலி

செல்வி வெளியில் வராமலிருந்தது நளினிக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கமாக தூரத்தில் கார் வரும் சத்தம் கேட்டதுமே பரபரக்க வெளியில் வந்துவிடுவாள். காரிலிந்து வெடுக்கென கைப்பையை இழுத்து, அனைவரையும் முந்திக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைவது ஒரு வழிகாட்டியின் தோரணையை ஒத்திருக்கும். செல்விக்கு பதிலாக இன்று பணிப்பெண் அவசரகதியில் வெளிபட்டு நின்றாள், முகத்தில் கவலை ஊசலாடியது.  “என்னாச்சி? ஏதும்…

க்ளிங் க்ளிங் பெண்

அந்த மாலை, வாசற்படியில் அமர்ந்தபடி வெளிநோக்கி செம்மண் சாலையையும் திரும்பி அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சுமதி அந்த முடிவுக்கு வந்திருந்தாள். அவள் அம்மாவைப்போல் இருக்கப் போவதில்லை. ஒருபோதும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள போவதில்லை. அம்மாவைப்போல் கணவனின் வருகையை எதிர்பார்த்து முட்டாள்தனமாகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; அவன் தன்னிடம் திரும்பி வந்துவிடுவான், குடும்பத்துடன் சேர்ந்துவிடுவான் என்று நம்பி…

நீ ஏன் மற்ற விலங்குகளைச் செதுக்கக் கூடாது? (ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை)

ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமான அந்த மருத்துவமனை நுலைவாயிலின் நேர் எதிர் அமர்ந்து அவன் மர சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறான். வேலைபாடுகள் முடிந்த ஒரு சில சிற்பங்கள் மட்டும் அவனைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ஓவியன் ஒருவனின் முழுமைப்பெற்ற ஓவியங்கள் மருத்துவமனை வேலிகள் நெடுக சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அடர்த்தியான அச்சிறுநகரத்தில் கார்களின் பேரிரைச்சல்,…

குடியேறிகள்

நண்பர்களுடன் சீன டீயை குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கடையை விட்டு வெளியேறினான். அவனது கால்கள் நிலைகொள்ளவில்லை. நடைபாதைகளில் கடந்து பழகிய கட்டடங்கள் அவனை நோக்கி சுழன்று வந்தன. அருகில், குப்பைக் குவியலை கிழறிக் கொண்டிருந்த காகமொன்று பேரிரைச்சலுடன் அதன் கூட்டை நோக்கி பறந்தது. அவன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, கிருஷ்ணன் தனக்குள் பேசிக்கொண்டான். நாங்கள் ஒருவருக்கொருவர்…

பிறக்கவிருப்பவள்

வனம் என்னை அழைத்தது ஆயிரம் பூக்களின் நறுமணங்களுடன்   எனது குருதிநாளங்களில் இப்பொழுதுமுண்டு யட்சிகளினுடையதைப்போன்ற அருவிகளின் பெருஞ்சிரிப்பு   எனது இளமையை இவ்வனங்களுக்கும் எனது இதயத்தை அநாதரவாகித் துயருறுவோரின் வேதனைகளுக்கும் கையளித்தேன்   எனது கால்களில் இப்பொழுதுமுண்டு குன்றுகளில் ஓடித்திரிந்த கொலுசுகள் அணிந்திராத சிறுபருவம் எனது தலைக்குள் ஓடைகளில் குதித்தாடிய காதலற்ற இளம்பருவம்   இந்த…