Category: கட்டுரை

மலேசிய அனுபவம் : யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை

யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை. சமூகமே யாரையும் அப்படி ஆக்குகிறது. யாரொருவரும் அப்படி ஆவதற்கு இச்சமூக அமைப்பும் நாம் ஒவ்வொருவருமே காரணமாய் உள்ளோம். இன்றைய மலேசியத் தமிழ்ச் சமூகம் எதிர்க்கொண்டுள்ள மிகப் பெரிய சமூகச் சிக்கல்களில் ஒன்று இளைஞர் மத்தியில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். மலேசிய மக்கள் தொகையில் 7 சதம் தமிழர்கள் என்றால்,…

குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை… (பகுதி 2)

சென்ற மாதத்தின் தொடர்ச்சி… 1930-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரை இக்காலக்கட்டத்தில் நிறைய சிறுகதைகள் மேல்நாட்டுத் தாக்கத்தைக் கண்டித்து வந்தது எனலாம், வெள்ளையர்களால் பகடைக்காயாக உருவாக்கப்பட்டவர்களின் கதைகள், அடிமைகளாக வாழும் மலாய்க்காரர்களின் நிலை. மேல்நாட்டுப் பழக வழக்கங்களைப் பின்பற்றும் மலாய்க்காரர்களின் அவலநிலைப் முதலியன கருப்பொருளாக அச்சிறுகதைகள் கொண்டுள்ளன. 1930-ஆம் ஆண்டுகளின் சிறுகதை வளர்ச்சியில் ‘ராம்நாத்’…

பேசலாம் இஷ்டம்போல்…

சில செய்கைகளில் நமக்கு அடக்க முடியாத ஆர்வம் வருவதென்பது இயற்கையான ஒன்று. அது மனித இயல்பும் கூட. உதாரணத்திற்கு ரகசியம் என்று யாராவது போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றார்களேயானால் – அது என்னவாக இருக்கும்.? என்கிற ஆராய்ச்சியில் சில நொடிகள் நம் மனது ஈடுபடாமல் இருக்காது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. `எனக்கு நிறைய…

காசியில் நான்கு நாட்கள்

காசிக்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் எப்படியும் 12 – 18 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் செலவழிந்துவிடும். விமான பயண நேரத்தை டிக்கெட் வாங்கும் சமயத்தில் கணக்கிலெடுத்து அதற்கேற்றவாரு அதிக நேரம் பயணத்தில் செலவாகதவாறு நேரத்தை இன்னும் மிச்சப்படுத்தலாம். சென்னையில் இருந்து நேரடி விமானம் என்றால் 4 மணி நேரத்திற்கும் குறைவாக காசியை…

குவர்னிகா: டாக்டர் சண்முகசிவா நேர்க்காணல் குறித்து…

குவர்னிகா தொகுப்பில் உள்ள டாக்டர் சண்முகசிவாவின் “மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று” நேர்காணல் குறித்து நீங்கள் பேச வேண்டும் என நவீன் கேட்டபோது சிறு மௌனத்தை மட்டுமே என்னால் பதிலாக தர முடிந்தது. நீங்கள் அவரது நேர்காணல் குறித்து எதுவும் பேசலாம் என மேலதிகமாக நவீன் சொன்ன பிறகு பேசுவதற்கான வார்த்தைகளுக்காக…

குவர்னிகா: மலேசியக் கவிதைகள் ஒரு பார்வை

தமிழ் இலக்கியத்தின் தொன்மத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக உடனே அதன் நீண்ட நெடிய 2000 வருடக் கவிதை தொடர்பை அடையாளப்படுத்துவது தமிழ் இலக்கியச் சூழலின் கட்டாய / அபாயப் பணியாகிவிட்டது. ஆயிரம்கால பெருமையைப் பேசியே கவிதை நகர்ச்சியைச் சாகடித்துவிட்டோமோ என்றுகூட தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து சமக்காலக் கவிதைகளைப் பற்றி பேசத் துவங்கும் ஒருவன் தனது விமர்சனத்தைக்…

குவர்னிகா: மலேசியாவின் மூன்று சிறுகதைகள் ஒரு பார்வை!

உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மொத்த குரலையும் ஒலிக்கச்செய்யும் இலக்கிய முயற்சி குவர்னிக்கா இலக்கியச் சந்திப்பின் வழி நீண்ட காலமாக செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்டி இந்த இலக்கிய முயற்சி    41-வது முறையாக மீண்டும் யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு தன் சந்திப்பு தொடரை நிகழ்த்தியது. அச்சந்திப்பில் வெளியீடு கண்ட குவர்னிக்கா இலக்கிய…

குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை…

மலேசியாவில் மலாய் சிறுகதை இலக்கியத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆரம்பக்கால மலாய் இலக்கிய போக்கினைக் கண்ணுறுவது முக்கியமாகும். மலேசியாவின் சுதந்திரத்திற்கும் ஒரு வகையில் மலேசிய மலாய் இலக்கியம் பங்கையாற்றியிருக்கிறது எனில் மிகையில்லை. மலேசியாவில் தேசிய இலக்கியம் என்பதும் மலாய் இலக்கியம் என்பதும் ஒன்றுதான் என்ற நிலை இருந்துதான் வருகிறது. சீனமொழியும், தமிழ்மொழியும் மலேசியாவில் வழக்கத்தில் உள்ள மொழியாக…

50ஆம் ஆண்டு பொன்விழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணம்: ஓர் ஆய்வுக்கு முன்பான ஆயத்தங்கள்!

கட்டுரைக்குச் செல்லும் முன் வல்லினம் இணையதளத்தில் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக வெளிவந்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளதை வாசியுங்கள். பணம், புகழ், சொத்து, சுகம் அனைத்திலும் உயர்ந்து நிர்க்கும் வைரமுத்து அவர்களின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நூலை இங்கே அறிமுகம் செய்துவைத்து இலட்சக் கணக்கில் பணம் திரட்டிக் கொடுத்தது அவசியம்தானா? – இலக்கியக்குரிசில்  மா.இராமையா மலேசிய தமிழ்…

எலி பொறியில் எழுத்தாளர் சங்கம்

பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ஏன் ஓடி ஒளியவா? நூறு எலிகள் பூனையின் கழுத்தை கடித்துக் குதறுவோம்… – காசி ஆனந்தன் படித்ததும் கொஞ்சம் பதட்டம் வந்தது. யோசிக்கத் தோன்றியது. நேரம் எடுக்க நினைத்தேன். பதட்டம் குறைந்தது. இப்போது எழுத தொடங்குகிறேன். பதட்டமின்றி எழுதுகிறேன். ஆனால், ஒரு மாத கால இடைவேளிவிட்டு பதில் எழுதுவதற்கு…

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திடீர் முடிவு – ஒரு தனி நபர் தாக்குதல்

தினக்குரல் நாளிதழில் (15.8.2013) மலேசிய எழுத்தாளர் சங்க சார்பாக அதன் செயலாளர் திரு. குணநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை கண்ணுற்றேன். பலரும் அச்செய்தியை வாசித்து வருத்தமுற்றிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தயாஜிமேல் ஆத்திரமும் பட்டிருக்கலாம். இச்செய்தி பற்றி எனது கருத்தைக் கூறுவதற்கு முன் அதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளுதல் நலம். 1. எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் காலாண்டு…

ஒரு மசாலா அறிக்கைக்கு பதில்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு சிறுகதை தேர்வு நிறுத்தப்படுகிறது என்ற எழுத்தாளர் சங்க செயலாளர் குணநாதனின் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சுரண்டலுக்குப் பின்பான எல்லாவித பாதுகாப்பு அம்சங்களைவிடவும் கழிவிரக்கத்தைத் தேடிக்கொள்வது பொதுவாகவே நடப்பில் உள்ள தப்பிக்கும் சூழல்தான். எழுத்தாளர் சங்கம், குணநாதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. நான் ஆசிரியராக இருந்து வழிநடத்தும் வல்லினம்.கோம்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய மோசடி!

கடந்த 15.08.2013 ஆம் நாள் மக்கள் ஓசையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அறியாமைகள், இயலாமைகள் குறித்த அதன் செயலாளர் ஆ. குணநாதனின் அறிக்கையைப் படித்தோம். இத்தனைநாள் எழுத்தாளர்களின் காப்பிரைட் சட்டத்திட்டங்கள் குறித்து அறியாமல் இருந்தது சங்கத்தின் மிகப்பெரிய குற்றமாகும். 5 ஆண்டுகளாக வருடாந்திர சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு போடும் செயல்பாட்டில் தன்னை ஈடுப்படுத்தி வந்த…

ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது…

சுயகௌரவம் இழக்கும் எழுத்தாளர்கள்…

எனக்கு தமிழில் கெட்ட (கொச்சை) வார்த்தைகள் தெரியும். நான் பேசதான் மாட்டேன். நேரடியாக ஒருவர் மீது எனக்கு கோபம் வரும் போது, நான் பேசும் வசனம்இது. கோபம் மேலும் தலைக்குமேல் ஏறும் போது நான் பேசும் வசனம்தான் இது. என் கோபத்தை மேலும் அதிகப்படுத்தினால் பேசிவிடுவேன் மிகச்சிறந்த கொச்சையை. இப்படியான ஒரு கோபம்தான் எனக்கு ஏற்பட்டது…