Category: கட்டுரை

எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை! – வண்ணதாசன்

இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்… நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது –…

எஸ். ராமகிருஷ்ணனின் ‘எதிர்கோணம்’

நிறைவேறாத ஆசைகள் என்றுமே மனித மனங்களில் எங்கோ ஒரு மூலையில் தேங்கியே கிடக்கின்றன. ஆசையின் அளவு பெரிதாகவோ சில சமயம் சிறியதாகவோ இருக்கலாம். ஆனாலும் முட்டுக்கட்டைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்து அடைய இயலாமல் செய்து விட்ட சின்ன ஆசைகள் அவ்வப்போது மனதின் முன் தோன்றி படுத்தும் பாடு வாழ்க்கையைவிட கொடுமைக்குரியதாக இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகளைக்…

எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்!

மலேசிய மலாய் இலக்கிய வெளி மலாய் எழுத்தாளர்களால் மட்டுமே நிரப்பப்பட்டதல்ல. மலாய்க்காரர் அல்லாத பல எழுத்தாளர்களும் மலாய் மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் கவனிக்கத்தக்க படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். மலேசிய வாழ் இந்தியர்களும் மலாய் இலக்கிய ஈடுபாடு கொண்டு செயல் பட்டு வருகின்றனர். ஜோசப் செல்வம், என்.எஸ். மணியம், ஆ.நாகப்பன்,…

மரண பயத்துடன் தொடரும் பயணம்

மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்த போது ஒரு செங்குத்தான இடம். அங்கே மரக்கட்டையின் மேல் கால் வைத்துதான் கவனமாக இறங்க வேண்டும். நான் சரியாகதான் இடம் பார்த்து கால் வைத்தேன். அது மிகவும் செங்குத்தான இடம். இருந்தும் என் காலும் மரக்கிளையில் பதிந்திருந்த என் கையும் எப்படியோ நழுவிவிட்டன. எனக்கு முன்னாடி யாரும் இல்லை. பின்னாடிதான் சிலர்…

நமக்கான குரல்களை நசுக்கி எவ்வளவு தூரம் ஓடிடுவோம்

வானொலியில் அறிவிப்பாளராய் இருப்பதால் அவ்வபோது, அடையாளைப்படுத்துவும், நானும் இருக்கிறேன் என்பதை காட்டவும் சிலவற்றை செய்யவேண்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னால் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள் ; வழக்கமான கேள்விகளுடன். பொதுவாக இப்படி பேட்டி எடுக்க வருகின்றவர்களிடம் சிலவற்றை கவனிக்கலாம். நம்மை பேட்டி எடுக்க வந்து, நம்மை பற்றி நாம்மையே சொல்ல வைப்பார்கள். நாம் சொல்வதை கவனிக்காமல், அடுத்தடுத்த…

மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி

கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வார்கள். அந்த மாதிரிதான் பேராக் மாநிலத்திலும் நடந்தது. ஆட்சியில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும். அப்படித்தான் பேராக் மாநில மக்கள் நினைத்தனர். ஆனால், மாற்றம்தான் மாறிப் போய்விட்டது. மனுஷத் தலைகள் மாறவில்லை. அடுத்த வீட்டுக்காரன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகிப் போனது. இப்படியும் சொல்லலாம். புதுப்…

ஏமாளிகளின் தேசம்

13-வது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து விட்டாலும் அதன் தாக்கம் இன்னும் மலேசியர்களை முழுமையாக விட்டு அகலவில்லை. பல்வேறு வகையில் அரசியல் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மலேசிய ஜனநாயக ஆட்சி முறையை சீரமைத்து வெளிப்படையானதா மாற்ற வேண்டும் என்னும் இளையோர் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. மலேசிய அரசியலில் மறுமலர்ச்சி என்பது மிகவும்…

ஹிண்ட்ராப் : பல்லி இறந்துவிட்டது வால் மட்டும் துடிக்கிறது!

ஹிண்ட்ராப் குறித்த முதல் பேச்சு யார் மூலமாக என் காதுகளுக்கு வந்தது என நினைவில் இல்லை. அடிக்கடி நாளிதழ்களில் பிரசுரமாகும் முகம் மூலம் எனக்கு உதயகுமாரை மட்டும் அதற்கு முன்பே அறிமுகம் இருந்தது. ஆனால் ஹிண்ட்ராப் குறித்து முதலில் தவறான அபிப்பிராயம் ஏற்பட அதன் பெயரே காரணமாக அமைந்தது. அது ‘ஹிந்து’ என்ற வட்டத்துக்குள் சுற்றிக்கிடந்ததாகவே…

தறுதலை புத்தி என்பது யாதெனில்

இது கதை என்று நான் முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன். படித்து முடித்ததும் முதல் வாக்கியத்தின் சத்தியமின்மையை நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் அல்லது பாதிப்பை கொடுப்பதில் ஒருவர். இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படப்போகும் பிரச்சனைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல. என்னுடன் சுந்தர ராமசாமியும்தான் பொறுப்பு. அவரின் கட்டுரை ஒன்றில் புதுமை பித்தனை இப்படி குறிப்பிடுகின்றார்; “சுற்றிவரக்…

கழிவறைக் குறிப்புகள்

தலைப்பைப் பார்த்ததும் மூக்கைப் பிடித்துக்கொள்ளாதீர்கள். அருவருத்து முகஞ்சுழிக்கும்படி அப்படியொன்றும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை. எல்லாம் நம் இயற்கை உபாதையைப் பற்றித்தான் கொஞ்சம் சிந்திக்கப்போகிறேன். மனிதக் கழிவுகளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள அரசியலைக் கொஞ்சம் அலச எண்ணுகிறேன். நீங்கள் வேண்டுமானால் செண்டு அல்லது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு என்னோடு வாருங்கள். கழிவறைகளை நோக்கித் துணிவோடு பயணப்படுவோம். என் பால்யத்தின் நினைவுப்…

கோயில் ஓட்டமும், கோவக்கார குருவியும்

இன்னைக்கும் மீட்டிங்கா… கடவுளே… என்னாலா பேசப்போறாங்க… பேச்சு பேச்சு பேச்சு..அவர் பேசுவார், பேசுவார், இன்னும் பேசுவார்… அப்புறம், அப்புறமும் பேசுவார் !!! பேசியதையேப் பேசுவார், பேச்சைக் குறைக்க வேண்டியதைப் பற்றியும் நிறையப் பேசுவார். நாம் பேசவே வேண்டியதில்லை… பேசவும் ஒன்றும் இருக்காது; பேசினாலும் யாரும் கேட்கப்போவதில்லை..பேசித்தான் பாருங்களேன்… அப்புறம்… நீங்கள் பேசியதை நிராகரித்தோ அல்லது ஏற்பதுபோல்…

கந்தர்வனின் ‘பூவுக்கு கீழே’

முந்தைய நாள் பேருந்து பயணத்தின்போது கண்ணில் கண்ட பூச்செடியைத் தேடி விரைகின்றான். அச்செடியை வீட்டுக்கு எடுத்து வந்து நட்டு வைத்து அதன் ஒவ்வொரு நொடி நேர வளர்ச்சியையும் கண்டு பூரிக்கின்றான். இவனை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய் மனைவி, ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ என கேலி பேசுகின்றாள். இவனது செய்கையைக் கண்டு வியப்பவர்களுக்குப் பின்வரும் குறிப்புகள் உதவி…

ஐந்தடிக்கரனின் செய்தி

தமிழ்ப் பத்திரிகை நிருபரை ஐந்தடிக்காரன் என்று அழைப்பதில் மலாக்கா மாநில ம.இகா தலைவர் டத்தோ இரா பெருமாளுக்கு ( முன்னாள் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்) ஆனந்தம் தருகிறதென்றால் அவர் அப்படியே அழைப்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் கிடையாது. ஐந்தடிக்காரன் ( அஞ்சடிக்காரன்), கொடுக்கும் செய்தி எல்லாவற்றையும் பத்திரிகையில் எழுதி விடுவாயா? என்று ஒருமுறை அவர்…

அடுத்த முறையாவது…

ஆளும் அரசாங்கத்தின் மீது நமக்கிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த நமக்கே நமக்கென கிடைத்த ஒரு சிறந்த களம் தேர்தலாகும். நம்மைப் பகடைக் காய்களாக்கி ஆட்டமாய் ஆடிய அரசியல்வாதிகளை இந்தக் களத்தில்தான் வேரறுக்க முடியும்… நமது ஓட்டுகளை அரிவாளாகக் கொண்டு இரத்தம் சிந்தாமல் இங்குதான் வெட்டி வீழ்த்துகின்ற பணியியை செய்ய வேண்டும். மீண்டும் முளைக்க விடாமல் வேரோடு களையெடுக்க…

13-வது பொது தேர்தல் : ஒரு பார்வை

உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது. தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான சமாட் சைட் சொன்னது போல எந்தக்…