Author: பூங்குழலி வீரன்

என்னை நாயென்று கூப்பிடுங்கள்

மலேசிய நவீன இலக்கிய உலகில் கவனத்திற்குரிய கவிஞர் ரேணுகா. மனதிற்கு உவப்பான பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதிகப்படியாக கவிதைகளை அரசியல் சார்ந்து; சமூக சூழல் சார்ந்து எழுதியிருக்கிறார். பொதுவாகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் படைப்புகளில் எழுதுவதற்குத் தயங்குகிற சூழலில் ரேணுகா துணிந்து எழுதியிருக்கிறார். வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார். “என்னை நாயென்று கூப்பிடுங்கள்”…

காற்றைப்போல், நான் எழுவேன் – மாயா ஏஞ்சலோ கவிதைகள்

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க, “ நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் தோற்றுவிடக் கூடாது”, என்பதைத்தான் எனது எழுத்துகள் சொல்கிறது.                                                                           -மாயா ஏஞ்சலோ-  மே 28, 2014 அன்று -மாயா ஏஞ்சலோவின் மரணம் நிகழ்ந்தது. அவரது மரணம்தான்…

சாவதும் ஒரு கலைதான் : சில்வியா பிளாத் கவிதைகள்

“மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்.” –  சில்வியா பிளாத் சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 – பிப்ரவரி 11, 1963), அமெரிக்கப் பெண் கவிஞர்; நாவல், சிறுகதை எழுத்தாளர். அவரின் கவிதைகள் பரவலாக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நுண் உணர்வுகளை அதற்கே…

எல்லைகளைக் கடந்த மொழியும் கவிதையும்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்

தமிழ்க்கவிதை இயக்கத்தில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வரவு புதிய பாணியிலான கவிதை உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகளோடு தமிழோடு தொடர்பற்ற சீன, ஆப்பிரிக்க, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்படுவதன் வழி புதிய வாழ்பவனுங்களைத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்வதோடு, பாசாங்கற்ற அக்கவிதை மொழியினைத் தமிழ்க்கவிதைகளும் தன்னுள்…

“மலாய் இலக்கியத்தின் ஆணி வேரே அரசியல் விழிப்புணர்வுதான்” அ.பாண்டியன்

கேள்வி : உங்களின் இலக்கிய ஆர்வம் எப்போதிருந்து தொடங்கியது? அ.பாண்டியன் : தனித்து, இலக்கிய ஆர்வம் என்று கூற முடியாது. ஆனால் வாசிக்கும் ஆர்வம் பதின்ம வயதில் துளிர்த்தது. அந்த வயதில் கிடைக்கும் எல்லாவகைக்  கதைகள் கட்டுரைகள்  போன்றவற்றை வாசிக்கத் துவங்கினேன். என்  தந்தை அப்போது திராவிடக் கழக அபிமானியாக இருந்தார். வீட்டில் நிறைய திராவிடக்…

காலம் தந்த கருப்பினக் கவிதைகள்

“மனித இனம் தோன்றிப் பெருக ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அடிமைப்படுத்த விழையும் போராட்டமும், அடிமைப்படுவதிலிருந்து விடுபட விழையும் போராட்டமும் ஒரு சேர நடந்துகொண்டுதான் இருக்கிறது. மனித இனம் இருக்கும்வரை இப்போராட்டமும் இருக்கும்” – எழுத்தாளர் இமையம் ஆப்பிரிக்கக் கவிதைகள் லூசி தெர்ரி (1730-1821)–இல் இருந்து தொடங்குகிறது. ஆனாலும் பிலிஸ் வீட்லீ (1753-1784) என்பவர் எழுதிய “Poems on…

தமிழ் நாவலுலகில் நிகழ்ந்த அதிசயம் – ‘எங் கதெ’

அபூர்வமாகத்தான் நம்மை ஒரு படைப்பு நிலைகுலையவைக்கும். அப்படி அண்மையில் என்னை ஆட்டிப்படைத்த ஒரு படைப்பு இமையம் எழுதிய – ‘எங் கதெ’ நாவல். அது ஓயாமல் என்னை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான  “கமலா” என்கிற 28 வயது கணவனை இழந்தப் பெண்ணுக்கும் படித்துவிட்டு வேலை தேடும்  விநாயகம் என்பவருக்குமிடையே ஏற்படும் அன்பு, அதனால் இருவருக்குமிடையே…

இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

பல காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை. நாவலில், காதல், அன்பு, ஏக்கம், கவலை, வறுமை என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் நெஞ்சைப் பிழியும் வலியும், துயரமும், வறுமையும் கதை முழுவதும் இருக்கிறது. மஜித்,…

காவி ஆடையிலிருந்து ஒரு புதுக் குரல்

இந்நூலிலுள்ள கட்டுரைகளை எச்சரிக்கை உணர்வுடன் வாசித்தேன். ஒரு நூலைப் படிக்கும் போது எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. சுவாமியின் காவி ஆடை அந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. நழுவும் தழுவல்கள், வாழ்க்கைக்கு வாழ்த்துகள், வீழ்வேன் என நினைத்தாயோ ஆகிய கட்டுரைகளில் மிகவும் முக்கியமான விசயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். குறிப்பாக அன்பு, உறவு பற்றிய…

இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும்…

பூங்குழலி வீரன் கவிதைகள்

  1. ஒரு தவித்த பொழுதில் தனித்திருக்கையில் என் காலத்தைத் தின்று தீர்ப்பதைப் போல் பிறந்தேவிட்டது என் கவிதை… எப்போதும் ஒரு வலியென அது வெடித்து வெளியேறும் ஒரு பஞ்சு விதை வெடிப்பதைப் போல… ஒரு மென்கோது கொண்ட முட்டை சட்டென கைத்தவறி விழுவதைப் போல… என் கவிதை ஒரு போதும் என்னைத் தவிர வேறொன்றைப்…

ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா – ம.மதிவண்ணன் கவிதைகள்

இருவருணாசிரமக் கோட்டையை நாய் போலக் காத்துக் கிடப்பதோடு பொச்சிக்காப்பு கொண்ட சாதிமானுக்கு அல்லக்கையாகவும் அன்னார் தம் இல்லத்தில் தாது புஷ்டி லேகியமாகவும் குல மகளிர் பொற்புக்குப் பூட்டருளியும் அருள் பாலிப்பான் எச்சிக்கலையும் எரப்பாளியுமான உன் கடவுள்…    – ம.மதிவண்ணன்   நான் அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தொகுப்பு ம. மதிவண்ணனின் ஏதிலியைத் தொடர்ந்து…

வருங்கால வரண்ட சமுதாயம்

1988-ஆம் ஆண்டு. ஏதோ வரலாற்று கட்டுரை என கடந்து போய் விடாதீர்கள். கொஞ்ச வருடங்களாக நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பழக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். அப்போது எனக்கு 4 வயது. அதற்கு முன்பான வாழ்க்கை ஒரு மங்கலான நிழற்படம் மாதிரிதான் நினைவில் இருக்கிறது. 4 வயதிற்குப் பிறகான நினைவுகள் மிகப் பசுமையாக இருக்கின்றன. அந்த…

இன்னும் இறந்து போகாத நீ… கவிதையும் கவித்துவமும்…

எப்படி எழுத வேண்டும் என்று நான் கூறவில்லை உங்கள் வரிகளில் எந்த விபரீதமும் நிகழ்வதில்லை வெற்று வெளிகளில் உலவும் மோனப் புத்தர்கள் உலகம் எக்கேடாவது போகட்டும் காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கிறேன் எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள் உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின் தொலைதூர எதிரொலி கூட கேட்கவில்லை வார்த்தைகளின் சப்தங்கள் அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன. எழுதுங்கள்…

கவிதையும் கவிதையல்லாததும் : அன்று போல் அன்று

தன்னைப் புரட்டிப் போட்ட வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்கு, அது தந்த இன்பத்தையும் வலியையும் சேர்த்தே அனுபவிப்பதற்குக் கவிஞனுக்கு இருக்கிற ஒரே வழி கவிதை எழுதுவது மட்டும்தான். அதன்வழிதான் அவன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். அதே வழியில்தான் அவன் மரணத்தை நோக்கியும் செல்கிறான். நாம் கடந்து வந்த வாழ்வில் கடந்து போன நிகழ்வுகள் ஏதோ ஒரு கணத்தில்…