பயணம்

இலங்கையில் ஏழு நாட்கள்…6

 

கருணாகரனுடன்

கோட்டையிலிருந்து மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடந்தோம். கோட்டைக்கு அருகில் விற்ற கொண்டை கடலையைச் சூடுபறக்க அம்மதியம் சாப்பிட்டது இனிமையான அனுபவம். கடலையை நம்மூர் போல காகிதத்தில் சுற்றிதான் கொடுக்கிறார்கள். ஆனால் அக்காகிதம் மாணவர்களின் நோட்டு புத்தகத்தினுடையவை. பல்வேறு பதார்த்தங்கள் இவ்வாறு நோட்டு புத்தகத்தின் காகிதத்தில் மடித்தே கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவை முகம் தெரியாத ஒரு மாணவனை கொண்டுவந்து நிறுத்தியது.  அனேகமான நேரங்களில் நான் ஒரு ஆசிரியர் மன நிலையில் இருப்பதில்லை, ஆனால் நோட்டு புத்தகங்களில் காணப்பட்ட மாணவர்களின் எழுத்துகளும் ஆசிரியரின் சிவப்பு மையும் அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டியது.
Continue reading

இலங்கையில் ஏழு நாட்கள்…5

 

கோணேஸ் , கர்ணன், சேனாவுடன்

மதிய உணவுக்குத் தங்கும் விடுதி வந்ததும் ஒரு பிரச்சனை எழுந்தது. ஏ.பஹாருடின் சொல்லிச்சென்ற உணவுவகைகள் தயாரிக்கப்படாமல் வேறு வகையான உணவுகள் இருந்தன. ‘எனக்கு என் வாக்குதான் முக்கியம்’ எனக்கூறிய பஹாருடின் உடனடியாகத் தங்கும்விடுதியை மாற்றினார். எங்கள் பேருந்து யாழ் டில்கோ ஹோட்டலுக்குச் சென்றது. முன்னதைவிட அதிக வசதி கொண்ட பெரிய தங்கும்விடுதி. பேருந்திலிருந்து பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது கர்ணன் அழைத்தார். டில்கோ ஹாட்டலுக்கு வழி கேட்டார். நான் மலேசியாவிலேயே வழி சொல்ல திணறுபவன். என் சமத்தை அவரிடம் சொல்ல அவகாசம் இல்லாததால் என் நினைவில் இருந்த யாழ் பொதுஅஞ்சலகத்தைக் குறிப்பிட்டு அதன் பின்புறம் என்றேன். நான் பெட்டியை அறைக்கு ஏற்றிக்கொண்டிருந்தபோது யோ.கர்ணன் சக நண்பர்களுடன் வந்திருந்தார். சட்டென யோ.கர்ணன் முன்னமே பழக்கமானவராகத் தோன்றினார். தொலைபேசியிலும் முகநூலிலும் மட்டுமே பேசிய ஒருவர் அவ்வாறு தோன்றுவது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஷோபா சக்தி அப்படித் தோன்றியுள்ளார். இலங்கையர்கள் முகம் அவ்வாறானதுதான் போல.

Continue reading

இலங்கையில் ஏழு நாட்கள்…4

மறுநாள் காலையிலேயே கிழம்பினோம். தங்கும் விடுதியில் பசியாறை. ஏ.பஹாருடின் அன்று இரண்டு கோயில்களுக்கு எங்களை அழைத்துப் போகப் போவதாகச் சொன்னார். ஒன்று நாக பூசனி அம்மன் கோயில் மற்றது ஒரு சிவன் கோயில். நயினா தீவில் இருக்கும் நாக பூசனி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்பவே அரை நாள் பிடிக்கும் என்பதால் சிவன் கோயிலுக்குப் போகும் திட்டத்திலிருந்து நானும் மணிமொழியும் விலகிக் கொண்டோம். அன்று மதியத்துக்குப் பிறகு இலக்கிய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.
Continue reading

இலங்கையில் ஏழு நாட்கள்…3

 

அ.யேசுராசாவுடன்...

ஏசுராசா என்றவுடன் என் நினைவுகள் வேகமாகச் செயல்படத்தொடங்கின. இலங்கை – ஏசுராசா என மனதில் எழுந்த குறிப்புகள் அவர் எனக்கு ஏதோ ஒருவகையில் அறிமுகமாகியிருந்தது  நினைவுக்கு வந்தது. ஆனால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. எனக்கு ஏசுராசாவைத் தெரியும். பெரிய சண்டைகாரர். யார் என்னவென்று பார்க்காமல் சண்டித்தனம் எல்லாம் செய்வார் என நினைவு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது. கொஞ்ச நேரம் மௌனமாகி வங்கியருகே நின்றிருந்தபோதுதான் எனக்கு தெரிந்த ஏசுராசா யார் என நினைவுக்கு வந்தது. அவர் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ நாவலில் வரும் ஏசுராசன்.  அந்த நாவலிலேயே இப்படி ஒரு வரி வரும். ‘குஞ்சன் வயலில் ஊருப்பட்ட ஏசுராசன்கள் இருந்தபடியால் அவர்கள் வில்லங்கம் ஏசுராசன், காற்றாற்ற ஏசுராசன், நான்தான் ஏசுராசன் என அழைக்கப்பட்டனர்’
Continue reading

இலங்கையில் ஏழு நாட்கள்…2

அநுராதபுரத்திலிருந்து காலையிலேயே யாழ்பாணம் கிழம்பினோம். நீண்ட பயணம். நான்கு மணி நேரம் என நினைவு. வவுனியா, புளியங்குளத்தைத்தாண்டி கிளிநொச்சியை அடைந்தபோது பேருந்து இராணுவத்தினரால் நிறுத்தி பரிசோதிக்கப்பட்டது. எங்களது சுற்றுப்பயணப் பேருந்து என்பதால் கடப்பிதழை மட்டும் சோதனைக்கு அனுப்பினார்கள். நான் சில நண்பர்களுடன் கீழே இறங்கினேன். பொட்டல் நிலம். ஆங்காங்கு இராவணுத்தினர் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். உள்ளூர்வாசிகள் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு தரவாகச் சோதிக்கப்பட்டனர். சுமையுந்துகளின் பின்பக்கம் உயர்த்தப்பட்டுச் சோதிக்கப்பட்டன. அருகில் இருந்த கழிவறைக்குச் சென்றேன். கால்வைக்க இடம் இல்லை.

Continue reading

இலங்கையில் ஏழு நாட்கள்…1

இலங்கையிலிருந்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அப்பயணம் குறித்து எழுத பலமுறை தொடங்கியும் முடிக்க முடியாமல் அழித்தபடி இருக்கிறேன். ஒருவகையில் இது ஒரு நிறைவான பயணமா என்ற கேள்வி மனதில் எழுந்தபடி உள்ளது. பொதுவாகவே நான் திட்டமிடப்பட்ட பயணத்தளங்களுக்குச் செல்லும் பயணி அல்ல. சில நாடுகள் அவ்வாறு சுற்றுப்பயணிகளுக்கு முகம் காட்டும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. சட்டென நினைவுக்கு வருவது பாலித்தீவு. அத்தீவின் அனைத்துப்பகுதிகளுமே பயணிகளின் வசீகரப்பார்வையை உள்வாங்கிக்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவே அங்கிருந்த காலங்களில் தோன்றியது. அதனாலேயே அத்தீவு குறித்து எழுத ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் இலங்கை அப்படி அல்ல.

Continue reading

இலங்கை பயணம்; நண்பர்கள்; இலக்கியம்.

இலங்கைக்குச் செல்வதென முடிவானப்பின் சட்டென ஒரு நண்பர்கள் பட்டியல் மனதில் ஓடியது.

முதலில் தகவலைச் சொன்னது எம்.ஏ.நுஃமான் அவர்களிடம்தான். என் தந்தை போன்றவர். அவர் மலேசியாவில் இருந்த ஒருவருடத்தில் அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளேன். அதிகமான ஞாயிற்றுக்கிழமைகள் அவர் வீட்டில்தான். சதா சிந்திக்கத்தூண்டும் கேள்விகள் அவரிடமிருந்து  வந்துகொண்டே இருக்கும். ஒருவருடத்திற்குப் பின் அவர் இலங்கை திரும்புவது உறுதியானப்பின் அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு இறுக்கம் பரவியிருந்தது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…18

 

மிஷ்கினுடன் நான்...

நியூ புக் லென்ட் (New Book Land) பல சிற்றிதழ்கள் , ஆவணப்படங்கள், நூல்கள் என குவிந்திருக்கும் புத்தகக் கடை. முந்தயைப் பயணத்திலும் அங்குச் சென்றதுண்டு. வாசகனின் தேர்வுக்கேற்ப அந்தப் புத்தக ஊழியர்களும் புத்தகங்களை உடனுக்குடன் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள்.

என்னிடமும் சிவாவிடமும் சில ஆயிரங்கள் மீதம் இருந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு சிறுதொகையை மட்டும் வைத்துக்கொள்வதாக முடிவு செய்தோம். எங்கள் தேவைக்கு ஏற்ற புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மொத்தமாக எண்ணியபோது புத்தகங்கள் நூறுக்கும் மேற்பட்டு இருந்தன. விலை நாங்கள் வைத்திருந்த பணத்தைத் தாண்டியது. ஒரே தலைப்பில் இருவரும் வைத்திருந்த சில புத்தகங்களை எடுத்து எண்ணியபோது அனுப்பும் செலவுடன் சேர்த்து எட்டாயிரம் ரூபாய் ஆனது. ஆச்சரியமாக எங்களிடம் மொத்தமே அவ்வளவுதான் இருந்தது. பணத்தை கட்டினால் அடுத்து ஆட்டோ எடுக்கக் கூட மீதம் இருக்காது. புத்தகங்களை விடவும் மனமில்லை. அதன் நிர்வாகி சீனிவாசனிடம் 7500 ரூபாய் செலுத்திவிட்டு மீதப்பணத்தை நண்பர் பௌத்த அய்யனார் பெயரை அவர் அனுமதியுடன் அடகுவைத்தோம்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…17

அன்றைய காலை சுறுசுப்பாக விடிந்தது. தமிழகத்தில் நாங்கள் காணும் கடைசி காலை. அன்றைய முக்கிய நிகழ்வுகள் வசந்தகுமாரைக் காண்பதும் புத்தகங்கள் வாங்குவதும்தான். முன்தினமே வசந்தகுமாரிடம் சொல்லிவிட்டதால் காலையிலேயே புறப்பட்டோம்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…16

 

வண்ணநிலவனுடன்...

வண்ணநிலவன் எழுத்துகளை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் சண்முகசிவாவும் யுவராஜனும். அவரின் பல கதைகளை அவ்வப்போது நினைவு கூர்ந்து சொல்வார்கள். வண்ணநிலவனை வாசிக்கத்தொடங்கும் போதுதான் , சண்முகசிவா எழுத்தில் இருக்கும் வண்ணநிலவன் பாதிப்பு தெரிந்தது.
Continue reading