26.5.2017 – வெள்ளி
முதலில் நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று. நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில் ‘வைட் காப்பி’ உணவகங்களில் கிடைக்கிறது. நாஞ்சில் நாடன் சுவைத்துச் சாப்பிட்டார். இதற்கு முன் அ.மார்க்ஸை அவ்வுணவு கவர்ந்திருந்தது.