கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி முன்மாதிரி என அடிக்கடி சொல்வதுண்டு. தந்தையின் மடியில் படுக்கலாம், கோபித்துக்கொள்ளலாம். திட்டலாம். ஆனால், முன்மாதிரி ஆளுமையைத் தள்ளி நின்று கவனித்தபடியே இருக்கவேண்டும். அவர்கள் செயல்களை கவனிப்பதன் மூலமே கற்றல் நடக்கும்.
கட்டுரை/பத்தி
கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை
நேற்றுப்போல் இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை வரலாம் என, ‘கறார்’ முகத்துடன் இருந்தேன். பின்னர் பெயரைக் ‘கலை இலக்கிய விழா’ என மாற்றி அமைத்தேன். ஆனால், கொண்டாட்டமும் குதூகலமும் இல்லாமல் இலக்கியமும் கலையும் உருவாகும் மனநிலை வாய்க்காது என அடுத்த வந்த சில வருடங்களிலேயே அறிந்துகொண்டேன்.
சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை
ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்.
ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும் அவ்வப்போது மாற்றியமைப்பார். பெரும்பாலும் அவர் சொல்லும் கதைகளில் நன்னெறிப்பண்புகள் இருக்காது. எல்லா பாத்திரங்களும் அதனதன் போக்கில் வரும் – போகும்.
இலக்கிய வட்டம் : ஒரு பார்வை
பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து, தட்டச்சு செய்யப்பட்டதை நகல் எடுத்து அடுத்த கூட்டத்தில் வழங்கி விவாதித்துள்ளனர்.
கச்சடா பேச்சு
கெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை. தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்று எப்படியும் அவர்கள் காதுகளுக்குள் புகுந்துவிடும் வல்லமையைக் கொண்டிருந்தன.
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?
மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல கட்சிக்காரர்கள் தத்தம் அரசியல் நடத்தவும் இத்தளங்கள் பயன்பட்டன என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இவ்விரண்டு தளங்கள் குறித்தும் அவ்வப்போது சில சீண்டல்கள் வருவதும், அந்தச் சீண்டல்களுக்கு அவ்வப்போது எதிர்வினையாற்றி சமூகம் சட்டென அடங்குவது மீண்டும் சீண்டப்படும்போது எகிறி குதிப்பது என்றே காலம் கழிகிறது.
2016 – சில புதிய தொடக்கங்கள்…
இவ்வருடம் மலேசியாவில் கலை, இலக்கியத்தை மையமிட்டு பல்வேறு ஆக்ககரமான முன்னெடுப்புகள் ஆங்காங்கு நடக்கின்றன என்பதில் மகிழ்ச்சி. அவை மலேசிய இலக்கியத்தின் வெற்று இடங்களை நிரப்புவது கூடுதல் மகிழ்ச்சி. பொதுவாக இங்கு போலச்செய்வதிலேயே சக்திகள் விரயமாகின்றன. ஆனால், முன்னெடுக்கவேண்டியப்பகுதிகள் சீண்டுவார் இன்றி கிடக்கின்றன. புதியதைக் கண்டடையவும் அவசியமானவற்றை முன்னெடுக்கவும் கூடுதல் உழைப்பு தேவைப்படுவது காரணமாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒரு முன்னெடுப்பின் வழியில் செல்வதில் ஊடக கவனத்தை அடையலாம் என்பதாலும் ஒரே மாதிரியான செயல்கள் தொடர்ந்து நடைப்பெறுவதுண்டு. எப்படி இருப்பினும் மலேசியா போன்று பொருளியல் தேவை அதிகரித்துவரும் நாட்டில் இன்னமும் வாசகர் பரப்பு இருக்க எல்லோரும் அவரவரால் இயன்ற பணிகளைச் செய்துக்கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வருடம் தொடக்கம் முதலே சில முயற்சிகள் உருவாகியிருப்பதை கவனப்படுத்த விரும்புகிறேன்.
சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்
தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது.
‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்
பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால் இந்தப் புறத்தோற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஆராயப்படுவதில்லை.
ஓஷோவும் அரியட்னா குடியர்ரெஸும்
ஓஷோவின் பிரபலமான ஒரு குட்டிக்கதை இன்று காலை நினைவுக்கு வந்தது.
ஒரு பெரும் பணக்காரன் தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் தங்கக்கட்டிகளாக மாற்றி ஒரு துறவியின் காலடியில் வைக்கிறான். துறவியிடம் அந்தத் தங்கங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு தான் இழந்திருக்கும் மகிழ்ச்சியை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்கிறான். துறவி சட்டென அந்த தங்கக்கட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்தத் துறவி போலியானவர் எனக் கருதிய பணக்காரரும் பின் தொடர்ந்து துரத்துகிறார். துறவி ஊர் முழுவதும் சுற்றி ஓடுகிறார்; மலை, நதிகளைக் கடந்து ஓடுகிறார். செல்வந்தரும் தன் வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணம் ஒரே நிமிடத்தில் கொள்ளைப்போனதினால் விடாமல் துரத்துகிறார். இறுதியில் துறவி எங்கு அமர்ந்தாரோ அங்கேயே வந்து அமர்கிறார். பணக்காரரும் மூச்சிரைக்கத் துறவியின் முன் நிற்கிறார். துறவி புன்னகையுடன் அவரிடம் அந்தத் தங்கக் கட்டிகளைத் தருகிறார். ‘இப்போது உனக்கு எப்படி இருக்கிறது,’ எனக் கேட்கிறார்.