கட்டுரை/பத்தி

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?

Tamil-2ndary-school-MPS-300x180மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல கட்சிக்காரர்கள் தத்தம் அரசியல் நடத்தவும் இத்தளங்கள் பயன்பட்டன என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இவ்விரண்டு தளங்கள் குறித்தும் அவ்வப்போது சில சீண்டல்கள் வருவதும், அந்தச் சீண்டல்களுக்கு அவ்வப்போது எதிர்வினையாற்றி சமூகம் சட்டென அடங்குவது மீண்டும் சீண்டப்படும்போது எகிறி குதிப்பது என்றே காலம் கழிகிறது.

Continue reading

2016 – சில புதிய தொடக்கங்கள்…

rkஇவ்வருடம் மலேசியாவில் கலை, இலக்கியத்தை மையமிட்டு பல்வேறு ஆக்ககரமான முன்னெடுப்புகள் ஆங்காங்கு நடக்கின்றன என்பதில் மகிழ்ச்சி. அவை மலேசிய இலக்கியத்தின் வெற்று இடங்களை நிரப்புவது கூடுதல் மகிழ்ச்சி. பொதுவாக இங்கு போலச்செய்வதிலேயே சக்திகள் விரயமாகின்றன. ஆனால், முன்னெடுக்கவேண்டியப்பகுதிகள் சீண்டுவார் இன்றி கிடக்கின்றன. புதியதைக் கண்டடையவும் அவசியமானவற்றை முன்னெடுக்கவும் கூடுதல் உழைப்பு தேவைப்படுவது காரணமாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒரு முன்னெடுப்பின் வழியில் செல்வதில் ஊடக கவனத்தை அடையலாம் என்பதாலும் ஒரே மாதிரியான செயல்கள் தொடர்ந்து நடைப்பெறுவதுண்டு.  எப்படி இருப்பினும் மலேசியா போன்று பொருளியல் தேவை அதிகரித்துவரும் நாட்டில் இன்னமும் வாசகர் பரப்பு இருக்க எல்லோரும் அவரவரால் இயன்ற பணிகளைச் செய்துக்கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வருடம் தொடக்கம் முதலே சில முயற்சிகள் உருவாகியிருப்பதை கவனப்படுத்த விரும்புகிறேன்.

Continue reading

சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது.

Continue reading

‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்

indexபொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால் இந்தப் புறத்தோற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஆராயப்படுவதில்லை.

Continue reading

ஓஷோவும் அரியட்னா குடியர்ரெஸும்

landscape-1450670677-gettyimages-502140438ஓஷோவின் பிரபலமான ஒரு குட்டிக்கதை இன்று காலை நினைவுக்கு வந்தது.

ஒரு பெரும் பணக்காரன் தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் தங்கக்கட்டிகளாக மாற்றி ஒரு துறவியின் காலடியில் வைக்கிறான். துறவியிடம் அந்தத் தங்கங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு தான் இழந்திருக்கும் மகிழ்ச்சியை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்கிறான். துறவி சட்டென அந்த தங்கக்கட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்தத் துறவி போலியானவர் எனக் கருதிய பணக்காரரும் பின் தொடர்ந்து துரத்துகிறார். துறவி ஊர் முழுவதும் சுற்றி ஓடுகிறார்; மலை, நதிகளைக் கடந்து ஓடுகிறார். செல்வந்தரும் தன் வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணம் ஒரே நிமிடத்தில் கொள்ளைப்போனதினால் விடாமல் துரத்துகிறார். இறுதியில் துறவி எங்கு அமர்ந்தாரோ அங்கேயே வந்து அமர்கிறார். பணக்காரரும் மூச்சிரைக்கத் துறவியின் முன் நிற்கிறார். துறவி புன்னகையுடன் அவரிடம் அந்தத் தங்கக் கட்டிகளைத் தருகிறார். ‘இப்போது உனக்கு எப்படி இருக்கிறது,’ எனக் கேட்கிறார்.

Continue reading

சக்கரத்தில் ஒட்டிய பல்லி… (கவிதை குறித்த உரையாடல்)

(அண்மையில் பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ளத் தமிழ்ப்பள்ளிகள் மத்தியில் கவிதை தொடர்பான ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். கவிதை குறித்து பேச என்னை அழைத்திருந்தனர். அங்கு நான் பேசிய உரை இது. கொஞ்சம் செரிவு செய்து பதிவிடுகிறேன்.)

நண்பர்களே,
நவீன கவிதை குறித்து பேசுவதற்கு முன்பாக நான் உங்களிடம் இருக்கும் சில முன்முடிவுகளை களைத்துப்போட விரும்புகிறேன். அதன் மூலமே நீங்கள் என்னையும் கவிதை குறித்த என் கருத்துகளையும் எதிர்க்கொள்ள தயாராக முடியும் என நம்புகிறேன். காரணம் நாம் அனைவருமே நமது கடந்த காலங்களில் ‘கவிதை’ எனும் கலை வடிவம் குறித்து ஏதோ ஒரு வகையில் அறிந்து வைத்திருப்போம். நமது கல்லூரி காலங்களில் கவிதை நமக்கு அறிமுகமானவிதம் மிக அபத்தமானது.

Continue reading

கண்ணீரைப் பின்தொடர்தல்

சில நாள்களுக்கு முன் ஓர் அழைப்பு. சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் இருந்து மன்சூர் என்பவர் பேசினார். தன்னைத் தூக்குத் தண்டனைக் கைதி என அறிமுகம் செய்துக்கொண்டார். மின்னல் பண்பலையில் ‘வல்லினம்’ குறித்து இடம்பெற்ற எனது நேர்காணலை செவிமடுத்தப்பின் எண்களைக் குறிப்பெடுத்து அழைத்திருந்தார். ‘வல்லினத்தின் திட்டவட்டமான தூரம் என எதுவும் இல்லை; அது மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்களை உருவாக்க செயல்படுகிறது. புகழுக்கும் பணத்துக்குமான குறிக்கோளை அடைந்தவுடன் துடிப்பாக உருவாக்கப்படும் பல செயல்வடிவங்கள் தீர்ந்துபோய்விடுகின்றன. வல்லினத்தில் அது இல்லை’, என்று நான் பேசியதைக் கோடிட்டவர் “என்னைச் சந்திக்க முடியுமா?” என்றார்.

Continue reading

மாதங்கி சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (4)

mathangiஅண்மையில் ‘எங் கதெ’ என்ற இமையத்தின் நாவல் குறித்து நண்பர்கள் பலரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். நாவலின் உள்ளடகத்தில் எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும் என்னை வியக்க வைத்தது அவரது மொழி. மிகக் கடினமான உளவியல் இறுக்கங்களை ஒரு டால்பின் மீன் போல கடலில் சலனத்தை படரவிட்டு தாவித்தாவி கடந்துவிடுகிறார். அது இலக்கியத்திற்குத் தேவையான மொழி.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 12

லதா

லதா

தமிழ் இலக்கியம் வாழும் நாடுகளில் சிங்கப்பூர் சற்று வித்தியாசமான பின்னணியைக் கொண்டது. சிங்கப்பூரை ஒரு ‘டிரான்ஸிஸ்ட் சிட்டி’ அதாவது பயணத்தின் இடையில் தங்கிச் செல்லும் ஒரு நகரம் எனச் சொல்லலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துப் போய்க் கொண்டிருக்கும் அந்த நகரத்தில் அவரவர் தங்களால் ஆன பங்களிப்பைச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குத் தருகின்றனர். அதேபோல சிங்கையில் பிறந்து அந்நாட்டு கலை இலக்கியத்தில் இயங்கும் தீவிரமான படைப்பாளர்களும் உள்ளனர். சிங்கப்பூரிலேயே பிறந்து அந்நாட்டிலேயே வளர்ந்து எழுதத் தொடங்கிய தலைமுறையினரில் இளங்கோவன், ரெ.பாண்டியன் இருவரையும் குறிப்பிடலாம்

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 11

SONY DSC

கருணாகரன்

மலேசியா போன்ற நாட்டில் வாழும் நமக்கு போர் என்பது ஒரு செய்தி மட்டுமே. ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றுவதன் மூலமாக நம்மால் சட்டென அவ்வுணர்வில் அழவும் விடுபடவும் முடிகின்றது. ஆனால் பல ஆண்டுகள் போரைச் சுமந்து நின்ற ஒரு நிலத்தில் வாழ்கின்ற கலைஞர்கள் மொழியும் அதன் வெளிபாடும் என்னவாக இருக்கும் என வாசிப்பதும் உள்வாங்குவதும் ஒரு வாசகனின் முக்கிய பரிணாமம். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய முக்கிய நிலமாக ஈழம் உள்ளது. தமிழகத்தைப் போலவே நீண்ட நெடிய இலக்கிய வரலாறு இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு இருந்தாலும் போர் அந்தத் தொடர்ச்சியை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது.

Continue reading