கட்டுரை/பத்தி

சிகண்டியின் நவயுகம் – கோ. புண்ணியவான்

என் அறியாப் பருவத்தில் நானும் திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவே எதிர்கொண்டேன். அவர்கள் பார்வையாளர்களைக் கவர பெண்வேடம் போட்டுக்கொள்கிறார்கள் என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணுவதற்கு ஒரு காரணம் இருந்தது. சின்னக் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சுயமாக அம்மாவுடைய பாவாடையை அணிந்துகொள்வதும் செருப்பைப் போட்டுக்கொள்வதும்  முகப்பூச்சிகளை பூசிக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். உளவியல் ரீதியாக, அவர்கள் தன் தாயை தனக்குள்ளே தகவமைத்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதையே சில விடலைப்பையன்களும் செய்துகொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பு அந்த எண்ணம் குறுகலானது என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது.

Continue reading

ஊழ்வினையின் பெருஞ் சீற்றம் – ஆசிர் லாவண்யா

கதாபாத்திரங்களை மிக நூதனமான முறையில் கையாண்ட பல நாவல்களில் சிகண்டிக்குத் தனி இடமுண்டு. வாசிப்பை இரு முறை மேற்கொண்டு, நாவலை அலசி பார்த்ததில் எழுத்தாளர் ம.நவீன், திருநங்கைகள் எனும் இணைப்புப் புள்ளிகளை வைத்து சத்தியத்தின் பெருஞ்சீற்றத்தினை முடுக்கி விட்டிருப்பது நாவலினுள் எழும் பேரிரச்சல் வழி புலப்படுகிறது.

Continue reading

மா. ஜானகிராமன் : பழைய காகிதங்களைப் பொறுக்கும் துறவி

மா. ஜானகிராமன் குறித்து நான் முதன்முறையாக கவிஞர் தேவராஜுலு வழிதான் அறிந்தேன். அது 2006. அப்போது ‘காதல்’ இலக்கிய இதழைத் தொடங்கியிருந்தோம். அது காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, திண்ணை அகப்பக்கம் என வாசிப்பு சுருங்கியிருந்த காலம். இவ்விதழ்கள் முன்னெடுத்த அன்றைய எழுத்தாளுமைகளை மட்டுமே அதிகம் வாசித்திருந்தேன். அப்போது எழுந்து வந்த பெண் கவிஞர்கள் ஏற்படுத்திய அலையால் நவீன கவிதைகளை வாசிப்பதும் உரையாடுவதுமே முன்னெடுப்பாக இருந்தது.

Continue reading

பூச்சாண்டி: குட்டையில் சிந்திய ஒரு துளி நஞ்சு!

24.1.2022 – சன்வே வெலோசிட்டி பேரங்காடியில் ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. நண்பர் செல்வம் அழைத்ததால் திரையரங்கம் சென்றேன். அவர் அப்படத்தில் பணியாற்றியிருந்தார். இப்படத்தை ஜே. கே. விக்கி (விக்னேஸ்வரன் கலியபெருமாள்) இயக்கியுள்ளார். ஜே. கே. விக்கி திரை உலகில் மட்டுமல்லாமல் பொதுத்தளத்திலும் நன்கு அறியப்பட்டவர். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாயாவுக்குச் சோழர்கள் வருகை என தொடர்ந்து மேடைகளில் பேசி வருபவர்.

Continue reading

2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

2021இன் தொடக்கம் லங்காவி தீவில்தான் விடிந்தது. லங்காவி வரி விலக்குத் தீவு. எனவே வெளிநாட்டினர் அதிகம் இருப்பர். அதனால் கொண்டாட்டங்களும் அதிகம் இருக்கும். நாங்கள் சென்றபோதும் கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. கொரோனா தொற்று தொடர்பான எச்சரிக்கை இருந்தாலும் யாரும் பெரிதாக அச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

Continue reading

பசுபதி சிதம்பரம்: சில சொற்கள்

இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.

Continue reading

நவீனத்துவம், பின் நவீனத்துவம்: எளிய அறிமுகம்

சீகன் பால்க்

(இக்கட்டுரை மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் புரிதலுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டது)

நவீனத்துவம் (Modernism)

1890 முதல் 1930 வரையிலான கால கட்டத்தை நவீனத்துவ காலகட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ் மக்ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். நவீனத்துவம் என்றால் புதுமை ஒன்று உருவாவது அல்ல. அதை ‘நவீனத்தன்மை’ என்று சொல்லலாம். அது எப்போதுமே நடப்பதுதான். மனிதனுக்கு சக்கரம் அறிமுகமான காலத்தில் இருந்து இன்றைக்குத் திறன்பேசி பயன்பாடு வரை இவ்வாறு புதுமைகள் (நவீனத்தன்மை) அறிமுகமாகி வருகின்றன. ‘நவீனத்துவம்’ என்பது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கிறது. இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை. அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.

Continue reading

மலேசியத் தமிழ் சிறுகதை வரலாறும் புதிய அலைகளும்

முன்னுரை

பாலபாஸ்கரன்

மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.

Continue reading

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வசிக்கும் நண்பர், எழுத்தாளர் செந்தில்குமாரிடம் இதுகுறித்துப் பேசியபோது சில ஆவணங்கள் ஜப்பானிய தேசிய நூலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பதாகவும் நூலக அனுமதி பெற்றே அவற்றைப் பெற முடியும் என்றும் சொன்னார். ஆனால் ஒருபோதும் ஒரு ஜப்பானியன் இந்த வரலாற்றை தனது இளம் தலைமுறைக்குக் கடத்துவதில்லை; வரலாற்றில் தங்களுக்கு இருக்கும் கோர முகத்தை அவர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை என அவர் வழியே அறிந்தேன்.

Continue reading

அகிராவின் கண்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில் நுழைய முடியாமல் கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில் மகத்தான படைப்புகளில் உழல்வதில் இருந்து மனம் விடுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.

Continue reading