கட்டுரை/பத்தி

பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண ஆளுமை

“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்)

பிரபஞ்சன் 01ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில் அவர் காட்டிய நெருக்கம், இலக்கியத்தில் நேர்மை, சமரசமற்ற போக்கு, எளிமை என அனைத்துமே கலந்த நினைவுகள் உருவாக்கும் சமநிலையற்ற மனம், மிதமிஞ்சிய சொற்களால் அவரைப் போற்றத் துடிக்கும். இலக்கியவாதி கொண்டாடப்பட வேண்டியவன்தான். அதுவும் கடைசிக் காலம் வரை இலக்கியத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் போன்ற ஆளுமைகள், இளம் தலைமுறையினருக்கு என்றுமே நல்லுதாரணங்கள். ஆனால் ஓர் இலக்கிய வாசகனின் கவனம் இலக்கியவாதியின் மரணத்திற்குப் பின்பும் அவரது படைப்பில்தான் குவிந்திருக்கும். அதன் வழியாக மட்டுமே அவன் அவரது ஆளுமையைத் தனக்குள் சமநிலையுடன் கட்டமைப்பவனாக இருக்கிறான்.

Continue reading

கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

01இதுவும் மற்றுமொரு நாள்தான் எனும் தத்துவத்தையெல்லாம் நான் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சட்டை செய்வதே இல்லை. நான் இந்து புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என எதையும் கொண்டாடுபவன் அல்ல. எந்த மத, இன பண்டிகைகளையும் விரும்புவதும் இல்லை. ஆனால் வருடத்தின் முதல் திகதியை ஒரு பண்டிகையைப்போல அவ்வளவு மெல்ல ரசித்து நகர்த்துவேன். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்கலாம் என்றும் எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டது என்றும் இனி எல்லாம் நலமாக நடக்கும் என்றும் நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன். புதிய சட்டை போட்டுக்கொள்வேன். அது தோலை நீக்கி புதுத்தோலை போர்த்திக்கொண்டதுபோல தோன்றும். புதிய வருடத்தின் மற்றுமொரு உற்சாகம் கடந்து சென்ற வருடத்தை முழுக்க அலசிப்பார்ப்பதில் தொடங்கும். அநேகமாக அந்த நாள் முழுவதும் அவ்வாறு கடந்தவற்றை எண்ணி அவற்றை ஒரு கனவுபோல கடப்பதிலேயே முடியும். அக்கனவு புதிய வருடத்தை கொஞ்சம் கவனமாக நகர்த்திச் செல்ல உதவக்கூடியதாக மாறும்.

Continue reading

சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4

venugopal118.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.

சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர்  அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும்  மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும்  குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3

index18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: மீட்கப்படும் குழந்தமை – 2

20chrcjpava18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘சத்ரு’ சிறுகதை வாசிக்க : சத்ரு – பவா செல்லதுரை

கதைகளின் வழியே கதாசிரியனை அறிய  முயற்சிப்பது சுவாரசியமானது. பவா செல்லதுரையின் கதைகளை வாசிக்கும்போது கைகளை அகல விரித்து பேரன்களைக் கொஞ்ச அழைக்கும் ஒரு தாத்தாவின் சித்திரமே மறுபடி மறுபடி தோன்றுகிறது. தாத்தாக்கள் பேரன்களை எப்போதும் வெறுப்பதில்லை. வாஞ்சையை அவர்கள் மேல் தடவி தடவி ஈரமாக்குவதைவிட வேறெதுவும் தெரியாத தாத்தாக்களின் வசைகளைக்கூட பேரன்கள் விளையாட்டுகளாக மாற்றுகின்றனர். பவா சக மனிதனை நம்பி வாழ்பவர். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை நம்பி வாழ்பவர். அதுவே அவரைச் சுற்றி மனிதர்களை மொய்க்க வைக்கிறது. அவர் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை கொடுக்கவும் செய்கிறார்.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கண்களின் விடுதலை – 1

பவா கதை18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  வலி சிறுகதை வாசிக்க : வலி – பவா செல்லதுரை

ஒரு புனைவை மிகச்சிறந்தது எனச் சொல்லும்போது ஏன் அது அவ்வாறானது என நண்பர்கள் கேட்பதுண்டு. அப்புனைவு அவர்களுக்கு எந்த அனுபவத்தையும் கொடுத்திருக்காத பட்சத்தில் இந்தக் கேள்வியின் தொணி கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். உண்மையில் ஒரு கலை வடிவம் நம்மை ஈர்த்த தருணத்தை  அந்தரங்கமாக நாம் அதனுடன் உரையாடிய கணத்தை இன்னொரு வாசகரிடம் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா என நான் கேட்டுக்கொண்டதுண்டு. முடியாது. அவ்வாறு முடியுமென்றால் அவ்வுணர்வை ஒரு படைப்பாளி கட்டுரை வடிவில்கூட விளக்கமாக விளாவரியாக எழுதிவிடுவார்.

Continue reading

ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன்

00130-300x214வல்லினம் நூறு வீடியோ பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘ஒருவேளை ஆதி.இராஜகுமாரன் இல்லாமல் இருந்திருந்தால் வல்லினம் அச்சு இதழ் தொடர்ந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.’ அவ்வுதவியை அவர் நட்பு கருதி செய்யவில்லை. அடிப்படையில் அவர் தன்னை ஓர் தேர்ந்த இலக்கிய வாசகனாகவே வைத்திருந்தார். எனவே அவ்வாறான முயற்சிகளில் தன்னை இணைத்துக்கொள்வது அவருக்கு உவப்பாக இருந்தது.

Continue reading

சடக்கு வந்த வழி

sadakku-01ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே நிலை உள்ளதை அறிய முடிந்தது.

Continue reading

யாக்கை : கணேஷ் பாபு கடிதம்

யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின்Hand-in-the-Water-500x337 போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.

Continue reading

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

hqdefaultவண்ணங்களைப் பூசி விளையாடிய குழந்தை கைகளைக் கழுவாமல் தூர நின்று ஒழுங்கற்ற ஒழுங்கை ரசிக்கும்போது அதற்குள் ஏற்படும் பரவசம்தான் வருட இறுதியில் நின்றுகொண்டு திட்டுத் திட்டான அவ்வருட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படுகிறது. புதிய கார் வாங்குவது, புது வீடு வாங்குவது, திருமணம் செய்வது என இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூல் முழுக்க லட்சியக்குரல்கள் நிறைந்து கிடந்தபோது ஓர் எழுத்தாளனாக மட்டுமே வாழ்ந்து முடிக்க சித்தமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அர்த்தப்படும் கணங்கள் பொதுவெளியில் வியப்புக்கும் பின் நீடித்த நகைப்புக்குமாக மாறிவிடுகின்றன. அவ்வாறு சவர்க்கார பலூன் விடும் குழந்தையைப்போல எனக்குள் நுரைத்து நுரைத்து இவ்வருடம் மகிழ்ந்த நாட்கள் அதிகம்.

Continue reading