கட்டுரை/பத்தி

சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4

venugopal118.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.

சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர்  அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும்  மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும்  குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3

index18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: மீட்கப்படும் குழந்தமை – 2

20chrcjpava18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘சத்ரு’ சிறுகதை வாசிக்க : சத்ரு – பவா செல்லதுரை

கதைகளின் வழியே கதாசிரியனை அறிய  முயற்சிப்பது சுவாரசியமானது. பவா செல்லதுரையின் கதைகளை வாசிக்கும்போது கைகளை அகல விரித்து பேரன்களைக் கொஞ்ச அழைக்கும் ஒரு தாத்தாவின் சித்திரமே மறுபடி மறுபடி தோன்றுகிறது. தாத்தாக்கள் பேரன்களை எப்போதும் வெறுப்பதில்லை. வாஞ்சையை அவர்கள் மேல் தடவி தடவி ஈரமாக்குவதைவிட வேறெதுவும் தெரியாத தாத்தாக்களின் வசைகளைக்கூட பேரன்கள் விளையாட்டுகளாக மாற்றுகின்றனர். பவா சக மனிதனை நம்பி வாழ்பவர். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை நம்பி வாழ்பவர். அதுவே அவரைச் சுற்றி மனிதர்களை மொய்க்க வைக்கிறது. அவர் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை கொடுக்கவும் செய்கிறார்.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கண்களின் விடுதலை – 1

பவா கதை18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  வலி சிறுகதை வாசிக்க : வலி – பவா செல்லதுரை

ஒரு புனைவை மிகச்சிறந்தது எனச் சொல்லும்போது ஏன் அது அவ்வாறானது என நண்பர்கள் கேட்பதுண்டு. அப்புனைவு அவர்களுக்கு எந்த அனுபவத்தையும் கொடுத்திருக்காத பட்சத்தில் இந்தக் கேள்வியின் தொணி கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். உண்மையில் ஒரு கலை வடிவம் நம்மை ஈர்த்த தருணத்தை  அந்தரங்கமாக நாம் அதனுடன் உரையாடிய கணத்தை இன்னொரு வாசகரிடம் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா என நான் கேட்டுக்கொண்டதுண்டு. முடியாது. அவ்வாறு முடியுமென்றால் அவ்வுணர்வை ஒரு படைப்பாளி கட்டுரை வடிவில்கூட விளக்கமாக விளாவரியாக எழுதிவிடுவார்.

Continue reading

ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன்

00130-300x214வல்லினம் நூறு வீடியோ பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘ஒருவேளை ஆதி.இராஜகுமாரன் இல்லாமல் இருந்திருந்தால் வல்லினம் அச்சு இதழ் தொடர்ந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.’ அவ்வுதவியை அவர் நட்பு கருதி செய்யவில்லை. அடிப்படையில் அவர் தன்னை ஓர் தேர்ந்த இலக்கிய வாசகனாகவே வைத்திருந்தார். எனவே அவ்வாறான முயற்சிகளில் தன்னை இணைத்துக்கொள்வது அவருக்கு உவப்பாக இருந்தது.

Continue reading

சடக்கு வந்த வழி

sadakku-01ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே நிலை உள்ளதை அறிய முடிந்தது.

Continue reading

யாக்கை : கணேஷ் பாபு கடிதம்

யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின்Hand-in-the-Water-500x337 போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.

Continue reading

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

hqdefaultவண்ணங்களைப் பூசி விளையாடிய குழந்தை கைகளைக் கழுவாமல் தூர நின்று ஒழுங்கற்ற ஒழுங்கை ரசிக்கும்போது அதற்குள் ஏற்படும் பரவசம்தான் வருட இறுதியில் நின்றுகொண்டு திட்டுத் திட்டான அவ்வருட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படுகிறது. புதிய கார் வாங்குவது, புது வீடு வாங்குவது, திருமணம் செய்வது என இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூல் முழுக்க லட்சியக்குரல்கள் நிறைந்து கிடந்தபோது ஓர் எழுத்தாளனாக மட்டுமே வாழ்ந்து முடிக்க சித்தமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அர்த்தப்படும் கணங்கள் பொதுவெளியில் வியப்புக்கும் பின் நீடித்த நகைப்புக்குமாக மாறிவிடுகின்றன. அவ்வாறு சவர்க்கார பலூன் விடும் குழந்தையைப்போல எனக்குள் நுரைத்து நுரைத்து இவ்வருடம் மகிழ்ந்த நாட்கள் அதிகம்.

Continue reading

நாரின் மணம் 3: களவெனும் கலை

p-alibblதிருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான்.

Continue reading

நாரின் மணம் 2 : தோலிருக்க சொளா முழுங்கி

navinமாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு,  உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும்  குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம் பலரும் அறிந்திருக்கலாம். பள்ளிக்குச் சென்று நான் சுயமாக வாசிக்கத் தொடங்கிய அனேகமான தினங்களில் ஈசாப் என் உடன் இருந்தார். அழகிய படங்களுடன் அவரது கதைகள் வீட்டில் இருக்கும். அவர் ஓர் அடிமை என்பதோ அவர் கதைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோ எனக்கு அப்போது தெரியாது. அவரது கதைகள் மூலம் அப்போதே விலங்குகளின் மேல்  இயல்பாக ஓர் ஈடுபாடு வந்தது எனக்கு.

Continue reading