தயாஜி; அழகுநிலா; அலையும் முதல் சுடர்!

தயாஜி, முதலில் உங்கள் கடிதம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் எதிர்ப்பார்ப்பது இத்தகைய உரையாடலைத்தான். ‘காவ்யா பதிப்பக’ வெளியீட்டில் வந்த க.நா.சு வின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டு; மதிப்பீடு செய்து தன் முடிவுகளை எந்தவித  மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைக்கிறார். வாசிக்க வாசிக்க அவர் விரிவான பார்வை ஆச்சரியம் தருகிறது. அவர் சிபாரிசு செய்துள்ள பல நூல்களை இன்னும் கண்ணால் கூட கண்டதில்லை என நினைக்கும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது. நான் அவரை மிக முக்கியமான வாசகராகப் பார்க்கிறேன். ஒரு தீவிரமான வாசகனால்தான் எந்தப்படைப்புக்குள்ளும் நுழைய முடிகிறது. அது குறித்த புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடிகிறது.

Continue reading

தயாஜி கடிதம் : அழகுநிலா சிறுகதைகள்

வணக்கம் நவீன். நாம் அதிகம் பேசியிருக்கிறோம். இன்னமும் பேசவிருக்கிறோம். இக்கடிதத்தை எழுதுவதற்கு காரணம் உண்டு. நாம் வல்லினம் குழுவில் நண்பர்களுடன் தொடர்ந்து செயலாற்றிவருகின்றோம். ஆரோக்கியமான முறையில் அதற்கான பலன்களை நான் கண்டிருகின்றேன்; உணர்ந்திருக்கின்றேன். ஆனால் சமீபத்தில் வல்லினம் குழு குறித்தும் உங்களை குறித்தும் சில அவதூறுகள் வந்தவண்ணம் உள்ளன. எல்லா அவதூறுகளுக்கும் நாம் பதில் கொடுத்திட அவசியமில்லை என்று நம்புகின்றேன். நாம் நமக்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாகத்தான் நமது உரையாடல்களை இப்படி பதிவு செய்ய நினைக்கிறேன்.

Continue reading

நெஞ்சுக்கொம்பு (சிறுகதை)

ஓலம்மா அலறல் அன்று வேறு மாதிரி ஒலித்தது. வழக்கமாக அது கழுத்தறுந்த ஆட்டின் கடைசி உயிர் வேட்கை போல உள்ளிருந்து வெளியே பிளிரி பின் அடங்கும். அம்மா அப்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் போட்டதைப் போட்டபடி குசினிக் கதவைப் பரபரப்புடன் திறப்பாள்.

குசினிக் கதவுக்கு மூன்று தாழ்ப்பாள்கள். அதை இணைப்பதற்கும் கழட்டுவதற்கும் விசேட உக்திகள் இருந்தன. தாழ்ப்பாளை போடும்போது கீழிறிருந்து தொடங்கி படிப்படியாக மேலேற வேண்டும். கழற்றும்போது நடுவில் தொடங்கி கீழே தொடர்ந்து முதல் தாழ்ப்பாளில் முடித்தால்தான் கதவு திறக்கும்.
அது கதவின் தவறு இல்லை.

Continue reading

கண்ணீரைப் பின்தொடர்தல்

சில நாள்களுக்கு முன் ஓர் அழைப்பு. சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் இருந்து மன்சூர் என்பவர் பேசினார். தன்னைத் தூக்குத் தண்டனைக் கைதி என அறிமுகம் செய்துக்கொண்டார். மின்னல் பண்பலையில் ‘வல்லினம்’ குறித்து இடம்பெற்ற எனது நேர்காணலை செவிமடுத்தப்பின் எண்களைக் குறிப்பெடுத்து அழைத்திருந்தார். ‘வல்லினத்தின் திட்டவட்டமான தூரம் என எதுவும் இல்லை; அது மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்களை உருவாக்க செயல்படுகிறது. புகழுக்கும் பணத்துக்குமான குறிக்கோளை அடைந்தவுடன் துடிப்பாக உருவாக்கப்படும் பல செயல்வடிவங்கள் தீர்ந்துபோய்விடுகின்றன. வல்லினத்தில் அது இல்லை’, என்று நான் பேசியதைக் கோடிட்டவர் “என்னைச் சந்திக்க முடியுமா?” என்றார்.

Continue reading

மாதங்கி சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (4)

mathangiஅண்மையில் ‘எங் கதெ’ என்ற இமையத்தின் நாவல் குறித்து நண்பர்கள் பலரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். நாவலின் உள்ளடகத்தில் எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும் என்னை வியக்க வைத்தது அவரது மொழி. மிகக் கடினமான உளவியல் இறுக்கங்களை ஒரு டால்பின் மீன் போல கடலில் சலனத்தை படரவிட்டு தாவித்தாவி கடந்துவிடுகிறார். அது இலக்கியத்திற்குத் தேவையான மொழி.

Continue reading

கடிதம் : கவிதையை வாசித்தல்…

வணக்கம் நவீன். நலமா?

தீபாவளி வாழ்த்துகள்.

இதற்கு முன் வல்லினத்திற்கு ஒரு கவிதை அனுப்பி அது குறித்து மெயிலில் உரையாடி இருக்கிறோம். அதன் பின் சிங்கை வரும் போது சந்திக்க நினைத்தேன், பணிச்சூழல் சந்திக்க வாய்க்கவில்லை.தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது உங்கள் பக்கம் வழி ஒரு பக்க உரையாடலை நிகழ்த்தி வருபவன்,

Continue reading

கமலாதேவி அரவிந்தன் படைப்புலகம் : இறுதி பாகம்

last nedகமலாதேவி அரவிந்தன் சிறுகதை தொகுப்புகள் மூன்றையும் வாசித்த அளவில் அதன் தன்மைகளை இவ்வாறு பட்டியலிடலாம்.

Continue reading

கமலாதேவி அரவிந்தன்: (பாகம் 2)

kamalamவணிக எழுத்தும் தீவிர எழுத்தும்

சிங்கப்பூரின் சமகால சிறுகதைகள் குறித்து எழுதத்தொடங்கியதிலிருந்து பல்வேறு விதமான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில, குறிப்பிட்ட படைப்பாளியின் மேல் தங்களுக்கு இருக்கும் சுய வெறுப்பின் காரணமாகத் தன்னையும் அந்த விமர்சனத்தின் பங்காளியாக இணைத்துக்கொள்ள முயல்பவை. பொதுவாக இதுபோன்ற குரல்களுக்கு நான் செவி கொடுப்பதில்லை. விமர்சனம் முன்முடிவுகளுடன் உருவாவதிலும் சுய வெறுப்பின் வசைகளுக்கான மாற்று வடிவாகவும் தனது அறிவுஜீவிதத்தைக் காட்டும் தளமாகவும் இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. விமர்சனம் என்பது தீர்ப்புகள் அல்ல. சக வாசகனுடன் விவாதிக்கும் ஒரு முறை. இந்த விவாதங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கியும் முரண்பட்டும் ஒரு சமூகத்தின் முன் திரட்டப்பட்ட கருத்துகளாக எப்போதும் இருக்கின்றன ; நிலைப்பதில்லை. இன்னொரு காலத்தில் இன்னொரு விமர்சகனால் அது மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு புதிய முறையில் ஒரு படைப்பு அணுகப்படலாம்.

Continue reading

கமலாதேவி அரவிந்தான் : சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (3)

kamaladevi_newஇலக்கியமும் வாசிப்பும்

பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.

Continue reading

ஷாநவாஸ் : சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (2)

மலேசியா – சிங்கப்பூரின் புனைவு எழுத்துக்கான தளம்

ஷாநவாஸ்

ஷாநவாஸ்

மலேசிய சிங்கப்பூர் சூழலில் பெரும்பாலான சிறுகதைகள் ஞாயிறு நாளிதழ்களில்தான் பிரசுரிக்கப்படுகின்றன. சில சமயங்களில் வானொலியிலும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இந்த இரு ஊடகங்களுக்கும் பொதுவான சில கட்டுபாடுகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட வாழ்வையும் மொழியையும் மட்டுமே இவ்விரு ஊடகங்களிலும் எழுதும் எழுத்தாளர்கள் கையாள வேண்டும். பொது புத்திக்கும் பொது நீதிக்கும் மாற்றான ஒரு குரல் எப்போதுமே ஆபத்தாகக் கருதப்பட்டு தணிகைச் செய்யப்படவும் முற்றாக நிராகரிக்கப்படவும் செய்கின்றன. போட்டிகளுக்கு அனுப்பப்படும் சிறுகதைகளுக்கும் இந்த நிலைதான். எனவே நீதி நெறிகளை சம்பவங்கள் மூலம் விரிவாக்கும் எழுத்துமுறையே இங்கு இலக்கியமாகிவிட்டது.

Continue reading