மலேசியச் சூழலில் சமகாலத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து நான் எனது அபிப்பிராயங்களை அவ்வப்போது கூறியே வருகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை மட்டுமே பிடிவாதமாக மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கும் சூழலில், பிறர் படைப்புகள் குறித்து பேசுவதில் பகையைச் சம்பாதித்ததுதான் அதிகம் என்றாலும் எனக்கு அது முக்கியமான பணியாகவே தெரிகிறது. பொதுவாகவே மலேசியச் சூழலில் சமகாலப் படைப்புக் குறித்த எவ்வித உரையாடலும் நடப்பதில்லை. நூல் வெளியீடுகளில் ‘முகஸ்துதிக்கு’ நாகரீகமான பெயராக நூல் விமர்சனம் என்ற பகுதியை இணைத்துவிடுகிறார்கள். யார் மிக அதிகமாக ‘பட்டர்’ பூசுவார்கள் என்று கணக்கெடுப்பெல்லாம் எடுத்து, அதில் அதிகப் புள்ளிகள் பெறுபவரே நூல் விமர்சகராக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சிங்கப்பூர் இலக்கியப் பயணம்: பதிவு
ஆறு வருடத்திற்குப் பின் மீண்டும் சிங்கப்பூர். முழுக்க இலக்கியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பயணம். என்னுடன் அ.பாண்டியன் அவர் மனைவி, தயாஜி மற்றும் விஜயலட்சுமி உடன் வந்தனர்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார். அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின் நிகழ்ந்துள்ளது. நான் மலேசியாவைப் பிரதிநிதித்து நான்கு பேர் கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தேன். இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி தருவதாகப் பதில் வந்ததும் பாண்டியனை அணுகினேன். பாண்டியன் மலாய் இலக்கியம் குறித்து ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருப்பது அதற்கு முக்கிய காரணம்.
“எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.”
கேள்வி : சிறுகதையில் இருந்துதான் உங்கள் இலக்கியப் பயணம் தொடங்கியதாக அறிகிறேன். ஆனால் உங்களின் ஆறாவது நூலாகத்தான் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது, காரணம் என்ன?
ம.நவீன் : எனது சிறுகதைகள் குறித்த எவ்வித உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இல்லாதது ஒரு காரணம் என்றால் அவ்வுணர்வு ஏற்பட நான் தேடித்தேடி வாசித்த நல்ல சிறுகதைகள் மற்றுமொரு காரணம். இயல்பாகவே நமக்குள் இருக்கும் வாசகமனம் எப்போதுமே நம் படைப்புகளில் நுழைந்து ஒப்பீடு செய்வது இயல்பு. அவ்வொப்பீடு சிறு தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நம்பும் நல்ல வாசகர்கள் நமது படைப்பு குறித்து ஆக்ககரமான கருத்துகளைக் கூறி ஊக்கம் தருகையில் அத்தயக்கம் மெல்ல அகல்கிறது. அவ்வாறான ஊக்கம் எழுத்தாளர் இமையம் வழி கிடைத்தது.
சிங்கப்பூர் பயணமும் இரு இலக்கிய நிகழ்ச்சிகளும்
6.11.2015 மாலையில் வல்லினம் நண்பர்களுடன் சிங்கையில் இருப்பேன். Swissotel the Stamford தங்கும் விடுதியில் ஏற்பாட்டாளர்களால் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நிமிடத்தையும் விரையம் செய்யாமல் மலேசிய – சிங்கை நண்பர்களுடன் இந்தச் சிங்கை பயணத்தில் இருக்க விரும்புகிறேன்.
நவீன கவிதை வாசிப்பு : பகுதி 12
தமிழ் இலக்கியம் வாழும் நாடுகளில் சிங்கப்பூர் சற்று வித்தியாசமான பின்னணியைக் கொண்டது. சிங்கப்பூரை ஒரு ‘டிரான்ஸிஸ்ட் சிட்டி’ அதாவது பயணத்தின் இடையில் தங்கிச் செல்லும் ஒரு நகரம் எனச் சொல்லலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துப் போய்க் கொண்டிருக்கும் அந்த நகரத்தில் அவரவர் தங்களால் ஆன பங்களிப்பைச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குத் தருகின்றனர். அதேபோல சிங்கையில் பிறந்து அந்நாட்டு கலை இலக்கியத்தில் இயங்கும் தீவிரமான படைப்பாளர்களும் உள்ளனர். சிங்கப்பூரிலேயே பிறந்து அந்நாட்டிலேயே வளர்ந்து எழுதத் தொடங்கிய தலைமுறையினரில் இளங்கோவன், ரெ.பாண்டியன் இருவரையும் குறிப்பிடலாம்
நவீன கவிதை வாசிப்பு : பகுதி 11
மலேசியா போன்ற நாட்டில் வாழும் நமக்கு போர் என்பது ஒரு செய்தி மட்டுமே. ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றுவதன் மூலமாக நம்மால் சட்டென அவ்வுணர்வில் அழவும் விடுபடவும் முடிகின்றது. ஆனால் பல ஆண்டுகள் போரைச் சுமந்து நின்ற ஒரு நிலத்தில் வாழ்கின்ற கலைஞர்கள் மொழியும் அதன் வெளிபாடும் என்னவாக இருக்கும் என வாசிப்பதும் உள்வாங்குவதும் ஒரு வாசகனின் முக்கிய பரிணாமம். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய முக்கிய நிலமாக ஈழம் உள்ளது. தமிழகத்தைப் போலவே நீண்ட நெடிய இலக்கிய வரலாறு இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு இருந்தாலும் போர் அந்தத் தொடர்ச்சியை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது.
“நானும் ஒரு பின் தங்கிய மாணவன்தான்”
இந்த நூல் குறித்து பல்வேறு ஆளுமைகள் மத்தியில் நல்ல பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில் இந்நூல் குறித்து கொஞ்சம் விளக்குங்கள்?
ம.நவீன் : கலை வெளிப்பாட்டுக்கான மனம் படைத்த ஓர் ஆசிரியர் தனது அத்தனை கலைத்தன்மைகளையும் மூட்டைக்கட்டி ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு நடப்பு சூழலில் உள்ள கல்வித்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்போது ஏற்படும் கட்டுக்கடங்காத மன உளைச்சலில் தனது கடந்த கால பணியின் பசுமையை நினைத்துப்பார்ப்பதாக இந்த நூலை எண்ணிக்கொள்ளலாம்.
நவீன கவிதை வாசிப்பு : பகுதி 10
நவீன கவிதைகளின் வாசகர் என ஒருவர் தன்னைச் சொல்லிக்கொண்டால், நான் அவர் சில கவிஞர்களை வாசித்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதுண்டு. உண்மையில் தமிழ் இலக்கியத்தில் அதிகமாகக் கவிதைகள்தான் எழுதப்படுகின்றன. எளிய வடிவம் என நம்பி இலக்கியத்தில் நுழையும் பலர் கையாள நினைப்பது கவிதையாக உள்ளது. இவ்வாறான சிறுபிள்ளைதனமான முயற்சியில் ஒவ்வொருநாளும் பல கவிதை தொகுப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. ஒரு வாசகன் இவ்வாறு குவியும் அனைத்து கவிதை நூல்களையும் வாசித்து முடிப்பதென்பது சாத்தியமில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகத் தொன்மையான கவிதை மரபைக் கொண்ட தமிழ் மொழியில் ஒருவன் கவிதைகள் வழி தன்னை தனித்து அடையாளம் காட்டுவதை சாதனை என்றே சொல்வேன். அத்தகையச் சாதனைக்குறியவர் கவிஞர் கலாப்ரியா.
கழுகின் காணொளியும் நமது போலி தன்முனைப்பும்
நவீன கவிதை வாசிப்பு : பகுதி 9
நவீன கவிதைகள் போக்கில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தலித் கவிதைகள். தலித் என்பது மராட்டிய சொல். மராட்டியத்தில் உருவான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி தலித் இயக்கமென்று பெயர் சூட்டிக் கொண்டது. இதன் பாதிப்பு ‘தலித் இலக்கியத்தை’ உருவாக்கியது. தங்கள் ஒடுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைக் கண்டடைதல், போராட்டத்திற்காக தங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்தல், தங்கள் பண்பாட்டுச் சிக்கல்களை ஆராய்தல் ஆகியவை தலித் இலக்கியத்தின் அடிப்படை நோக்கங்கள் எனலாம். தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றவை வாசக வகைப்படுத்தல்களுக்கும் அல்லது திறனாய்வுக்கும் தேவைப்படுகின்றன. என்னளவில் முதலில் அவை கவிதைகள். ஆனால் அவற்றுக்கென்று தனித்தனி அழகியல் உள்ளது.





