சாட்டை : ஒரு மீள் பார்வையில்…

சாட்டை திரைப்படம் குறித்து நண்பர்கள் பலரும் சொல்லியிருந்தனர். பார்ப்பதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். தாமதமாகத்தான் தொலைக்காட்சியில் தங்கத்திரையில் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்த்த உடனே படம் கவர்ந்தது. தங்கத்திரையில் அம்மாதம் முழுவதும் ஒரே படத்தை ஒளிபரப்புவார்கள் என்பதால் மீண்டும் சில முறை அப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்தடுத்த முறை பார்த்தப் பின்பே நான் அப்படத்தை ஓர் ஆசிரியராக மட்டுமே இருந்து பார்த்ததை அறிந்துகொண்டேன்.
Continue reading

Park Jae-sang

பணக்கா ரனாகப் பிறந்தால் வாழ்க்கை எவ்வளவு எளிது தெரியுமா? என்பது போன்ற புலம்பல்களைப் பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். என்னைக் கேட்டால் அது ஒருவகையில் கொடுமைதான்.
Continue reading

சூதாட்டம் ஆடும் காலம்: மேட்டுக்குடிகளின் குரல்

இலக்கிய இயக்கங்களும் பத்திரிகைகளும் எப்போதுமே சில முகமுடிகளைத் தயாரித்து வைத்துள்ளன. அவற்றிற்குத் தங்களைச் சுற்றிப் பலம் பொருந்திய ஆளுமைகள் இருப்பதாக எப்போதுமே பாவனை காட்டும் அவசியம் உள்ளது. தங்களுக்கு ஏற்றவராகவும் அனுசரித்துச் செல்லக் கூடியவராகவும் நடைமுறையில் இருக்கின்ற

உலக நாயகன் கமலும் உள்ளூர் நாயகன் சை.பீரும்…

நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல்.  ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத்  தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.

Continue reading

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மலேசியா வருகை

ஆதவன் தீட்சண்யா

நண்பர்களுக்கு…

19 மற்றும் 20 ஆம் திகதி வல்லினம் வகுப்பு 3 நடைபெரும். இந்நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் உரையும் / உரையாடலும் நடைபெறும்.  முற்றிலும் இலவசமாக நடைபெரும் இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம்.

Continue reading

இன்னொரு இனக்குழுவின் அடையாளம் பகடிக்கு உகந்ததல்ல….

 

 

ம.நவீன்

 

 

கேள்வி : ‘இலக்கிய ரௌடி’ என மாற்றுச் சிந்தனையுடையவர்களை அடையாளமிட்டு விளிப்பதாக நீங்கள் ஒருமுறை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியொரு அடையாளம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? அம்மாதிரியான ஓர் அடையாளத்தைக் கொடுத்தவர்களின் பிரச்சினை என்ன?

பதில் : நான் ‘லும்பன் பக்கங்கள்’ எனும் தலைப்பில் தொடர் எழுதியதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை முதலில் அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். ரௌடிகளும் அதில் அடக்கம்தான். சமூக நன்னெறிகளை இறுக்கப் பிடிப்பவர்கள் அந்த அடையாளத்தால் வருந்தலாம். எனக்கு என்ன கவலை. பின்நவீனத்துவம் இந்த உதிரி மனிதர்களின் வாழ்வையும் பேசுகிறது. ஆனால், ‘ரௌடி’ எனும் அடையாளத்தை வசைச்சொல்லாகப் பயன்படுத்துபவர்கள் மேல்தான் எனக்குக் கோபமே. ‘மீடியகர்’ எழுத்தாளர்களுக்கு மத்தியில் தனது கருத்தை சமரசமின்றி நிருபுபவன் ‘ரௌடி’ என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பல ஆண்டுகளாக கொட்டைப்போட்ட எழுத்தாளர்களாக இருந்தவர்களின் இலக்கியத் தரத்தையும் அரசியல் நிலைபாட்டையும் கேள்விக்குட்படுத்தும்போது பிரச்னையாகிறது. அவர்களிடம் அதற்கான பதில் இல்லை. கருத்துநிலையில் எதிர்வினையாற்ற வக்கற்றவர்கள் வசைப்பதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்…பாவம்.

Continue reading