Life of Pi : இறுதி கையசைப்பு

 

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச்செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச்செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கையசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்ப்பார்க்கிறேன்
அவ்வளவு தானே
—  ஆத்மாநாம்
Continue reading

சிறுகதை : நொண்டி

இந்தக் கடலோரம் நடப்பது மட்டுமே சேதுவுக்கு அதிகம் பின் விளைவுகளை ஏற்படுத்தாது. திருமணமாகாத இந்த நாற்பதாவது வயதில் புதர்களுக்குள் முயங்கிக் கிடக்கும் இரு தேகங்களை நேர் காட்சியில் பார்ப்பதென்பதும் சூரிய குளியலுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் பிசுபிசுத்த பெண் உடல்களை கடப்பதென்பதும் அவரை தனது இரு காதலிகளையும் தொடர்புகொள்ளச் செய்யலாம். காதலிகள் அந்நேரத்தில் தனிமையில் இருந்தால் உரையாடல் மூலமாகவே உச்சத்தை அடைந்துவிடுவார். உடல் இருக்கும் நிலையில் நேரில் சந்திப்பது பெரும் அவமானத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை அவர்கள் தத்தம் கணவர்களோடு இருக்கும் பட்சத்தில் குறுந்தகவல்களில் அவர் பிறப்பை சந்தேகிக்கும் பொருட்டான வசைச்சொற்கள் நிறையும். இந்தக் கடற்கரையில் அத்தகைய காட்சிகளுக்கான வாய்ப்பெல்லாம் இல்லை. நொண்டியை மட்டும் ஏதாவது சுள்ளியை வீசி சமாளித்துவிட்டால் போதும். அது கௌவி விளையாடும் இடைவெளியில் நகர்ந்து விடலாம்.
Continue reading

சொறணையுள்ள ஒரு குரல் – க.பாக்கியம்

அன்புள்ள ம.நவீன்,

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மலாயா பல்கலைக் கழகப்  பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன் அவர்கள் என்னைத் தொலை பேசியில் தொடர்பு  கொண்டார்கள்.

Continue reading

சுரணையும் சோரமும்

இதை நான் படபடத்த மனதுடன்தான் எழுதுகிறேன். காரணம் இந்த உணர்வு ஒரு வருடமாகத் தேக்கிவைக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இந்த அசிங்கம் நிகழும்போது குரல் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

Continue reading

அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் – அ.மார்க்ஸ்

தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்

உண்மை அறியும் குழு அறிக்கை

தருமபுரி

நவம்பர், 15, 2012

Continue reading

ம. நவீனின் ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள் – மேமன்கவி

ம. நவீன் ! மலேசிய மண்ணிலிருந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. ‘வல்லினம்’ எனும் சிறுசஞ்சிகையின் ஆசிரியர். இன்று அவ்விதழ் இணையச் சஞ்சிகையாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
Continue reading

பறவைகள் மனிதனைப்பார்க்க விரும்புவதில்லை

பிரேசர் மலைக்குச் செல்வது உற்சாகம் தரக்கூடியது. ‘கெந்திங் மலை’ போன்று வருபவர்களின் பணத்தைக் கறக்கும் எவ்வித முன்திட்டங்களும் அங்கு இல்லை. ஒரு மணிகூண்டு. அதைச் சுற்றிலும் ஓரிரு கடைகள், கிளினிக், தபால் நிலையம் இவ்வளவுதான் பிரேசர் நகரம். எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து அலுக்கும் வரை காட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் பிரேசர் இந்நாட்டின் முக்கிய பறவைகளின் சரணாலயமாக இருப்பதைப் பலரும் அறிவதில்லை.
Continue reading