ஆஷா ; இனி…

ஆஷா

‘ஐஞ்சுகட்டை வௌக்கமாற ஒன்னா கட்டி
அதில ஒரு வௌக்கமாற அனல்ல காட்டி
மணல்ல சொருவி
ஒக்கால மண்ண வைச்சு
பெத்தவள பின்ன வைச்சு
நிக்க ஒன்றடி, நிமிர ரெண்றடி,
குனிய வைச்சு, மூன்றடி அடிப்பேன்’

Continue reading

தினக்குரலில் வெளிவந்த நேர்காணல்: என்னிடம் நன்றி உணர்ச்சி இல்லை !

இன்றைய இளைஞர்கள் எங்கு போய் கொண்டிருக்கிறார்கள்? இலக்கியம் என்பதில் அவர்களது ஈடுபாடு எவ்வாறு உள்ளது? அதனை உள் வாங்கிய இளம் படைப்பாளிகளின் இயக்கம் எவ்வகையில் இயங்குகின்றது? படைப்பதும் அதனை பாதுகாப்பதும், தன்னை சிறந்த படைப்பாளி என அடையாளப்படுத்திக் கொள்வதும் மாத்திரம்தான் ஒரு படைப்பாளியின் இலக்கியத்தின் உச்சமா? இவற்றுக்கெல்லாம் முரணான விடையாகிறார்…ம.நவீன் என்ற இளம் படைப்பாளி.

Continue reading

மாயாவின் கேள்விகள்

மாயா தொலைவில் உள்ள
மரத்தைதான் முதலில்
தன் இரு விரல்களால் பிடித்தாள்…
பின்னர் கட்டடம்…
ஓடும் நாய்…
இடைவெளிகளை அதிகப்படுத்தி அவளால்
அத்தனையையும் பிடித்துப்பார்க்க முடிந்தது
நட்சத்திரங்களையும் பிடிக்கலாம் இரவாகட்டும் என்றேன்
இரவானால் நட்சத்திரம் சிறிதாகிவிடுமா என்றாள்!

Continue reading

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!

டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”

‘புயலிலே ஒரு தோணி’யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள். அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். “கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை – அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு – அது அறிவுக்கு வரம்பு.”
Continue reading

மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை

முன் எச்சரிக்கை : எழுத்தாளர் சங்கத்தலைவர் தனது மகனின் இயக்குனராகும் ஆசையை  நிறைவேற்றவே தொடர்ந்து இயக்குநர்களை மலேசியாவுக்கு  ‘சங்க பணத்தில்’ அழைத்து வருகிறார் என இக்கட்டுரையைப் படிக்கும்  யாரேனும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. எப்படி கொஞ்சம் கூட வெட்கம் நியாயம் இல்லாமல் தனது மனைவியின் நூலுக்கு மாணிக்க வாசக புத்தக விருதை கொடுத்து அழகு பார்த்தாரோ அப்படியே தன் மகனையும் இயக்குநராக்கில் அழகு பார்க்க நினைக்கிறார் எனவும் கருத்துகள் எழலாம். எழுத்தாளர் சங்கம் ராஜேந்திரனின் குடும்ப சொத்தாகிவிட்டதாக வருத்தம் அடையலாம். இது போன்ற எந்த சேதாரத்துக்கும் இந்த எதிர்வினை பொறுப்பேற்காது.

Continue reading

வல்லினம் வகுப்புகள்

இன்று (14.04.2012) வல்லினம் குழுவினரின் சந்திப்பு கோலாலம்பூரில் நடைப்பெற்றது. நான் (நவீன்), சிவா பெரியண்ணன், பாலமுருகன், மணிமொழி, தயாஜி,யோகி, பூங்குழலி, சந்துரு, ராஜம் ரஞ்சனி, , நித்தியா, தினேஸ்வரி இவர்களோடு வல்லினம் இதழில் ஆலோசகர் மா.சண்முகசிவாவும் கலந்து கொண்டார். மலேசிய இளம் தலைமுறையினர் அடுத்தக்கட்டத்தை நோக்கி இலக்கியத்தையும், சிந்தனையையும் நகர்ந்த தேவையான பயிற்சிகள் வழங்க வேண்டியது பற்றி இன்றைய கலந்துரையாடல் அமைந்தது.

Continue reading