
எம்.குமாரன்
எல்லோர் போலவும் எழுத்தாளர் எம்.குமாரனின் மரணச்செய்தியும் எவ்வித விசேட ஓலங்களை எழுப்பாமல் குறுஞ்செய்தியில் வந்து சேர்ந்தது. முதலில் இயக்குநர் சஞ்சைதான் தகவல் அனுப்பினார். பின்னர் சை.பீர் முகம்மதுவிடமிருந்து சற்று விரிவான தகவலுடன் வந்தது. அதில் ‘பிரபல எழுத்தாளர் எம்.குமாரன்’ எனும் அடைமொழி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சந்துரு அவர் பணிபுரியும் நாளிதழிலிருந்து அழைத்து எம்.குமாரன் படம் கிடைக்குமா எனக் கேட்டார். இணையத்தில் சுத்தமாக இல்லை. மலேசியாவில் ‘பிரபலமான எழுத்தாளர்களின்’ நிலையை எண்ணி வருந்திக்கொண்டேன்.
எம்.குமாரன் இறுதியாகக் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வு ‘3-வது வல்லினம் கலை இலக்கிய விழா’வாகத்தான் இருக்க வேண்டும். இறுதியாக அவரைச் சந்தித்த போது மலேசிய இலக்கிய சூழல் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது முற்றிலும் மலேசிய இலக்கிய சூழல் குறித்த அதிருப்தியான மனநிலையில் இருந்தார். வல்லினத்தின் வருகை அவருக்கு உற்சாகம் தருவதாய் இருந்தது. இனி தான் எழுதினால் அது வல்லினத்துக்கு மட்டும்தான் என்றார்.
Continue reading →