‘நாடு விட்டு நாடு’, ‘நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்’ போன்ற வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட படைப்புகளை மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்குக் கொடுத்தவர் முத்தம்மாள் பழனிசாமி. தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், ஓய்வு பெற்றப்பின்னரே எழுத்துத்துறையில் தீவிரம் காட்டியுள்ளார். ஆங்கிலம் , தமிழ் என இரண்டு மொழியிலும் இயங்கும் இவர் மிக அண்மையில் ‘சயாம் மரண இரயில்வே’ குறித்த கள ஆய்வில் இறங்கி அதன் பலனாக ஓர் நூலையும் பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 78 வயதிலும் இடையறாது இயங்கிகொண்டிருக்கும் முத்தம்மாள் அவர்களை நேர்காணல் செய்ய அணுகினோம். இந்த நேர்காணல் செம்பருத்தி இதழில் வெளியிடப்பட்டு இங்கு மறுபிரசுரம் காண்கிறது.
Continue reading

விஸ்கி மணியத்தின் சகாக்களும் சாமிவேலுவின் அடிவருடிகளும் காரணம் இல்லாமல் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சடங்கு பூர்வமான சர்ச்சைகள் போல, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை விமர்சிப்பதும் ஒரு குழு சார்ந்த அரசியலாக சில சமயங்களில் அதன் தலைவராலேயே வர்ணிக்கப்படும் ஆபத்து இந்தக் கட்டுரைக்கும் நிகழலாம். பல்வேறு சூழல்களில் எழுத்தாளர் சங்கத்தின் போக்கு குறித்து விமர்சித்ததின் பலனாக வரும் தொலைபேசி அழைப்புகளின் மூலம் காதில் இரத்தம் வழிந்ததுதான் மிச்சம். சுய புராணங்களும்… வெட்டிப் பேச்சுகளும்… அங்கலாய்ப்புகளும்… மிரட்டல்களும் வெளிபடுமே தவிர நிபுணத்துவத்தோடு அவர்கள் தரப்பு சார்ந்த தெளிவான விளக்கம் இதுவரையில் வெளிவந்தபாடில்லை. ஆச்சரியமாக நான் ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் எழுத்தாளர் சங்கத்தின் போக்கு குறித்து ஒரு நேர்காணலில் பதிவு செய்த எனது கருத்துகளுக்கு அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் பதிலுரைக்கும் விதமாக அதே ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் சில கருத்துகளை முன் வைத்திருந்தார். அதில் ஒரு ஆய்வாளனுக்கே உரிய சில புதிய கண்டுபிடிப்புகளின் வழி தன் அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர் எப்போதும் போல ‘எழுத்தாளர் சங்கத்தைக் குறை சொல்பவர்கள் சிறு கூட்டத்தினர்தான். அவர்கள் 6 அல்லது 7 பேர் மட்டுமே’ என கணக்கெடுப்பெல்லாம் செய்திருந்தார். தந்தை பெரியாருக்குப் பிறகு அதிகம் சிந்திக்கத்தூண்டும் கருத்துகளைக் கூறுபவர் இராஜேந்திரனாகத்தான் இருக்க வேண்டும். அந்த நேர்காணலில் அவர் முன் வைத்த கருத்திலிருந்து இந்தக் கட்டுரை:
