‘நாடு விட்டு நா
டு’ எனும் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய தன் வரலாற்று புத்தகம் குறித்து எழுதத்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். ஆயினும் அப்புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் ஒரு சுய வரலாறு எதற்காக எழுதப்பட வேண்டும் என்ற கேள்வி முன் வந்து நின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நாவலாகவும் சுயவரலாறாகவும் எழுதப்பட்ட சில பிரதிகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.
இதில் பாமாவின் ‘கருக்கு’ சுயவரலாற்று தொணியில் இயற்றப்பட்ட நாவலாக இருக்கிறது. முதல் வாசிப்பில் ‘கருக்கு’ ஒரு நாவலாக என் மனதில் பதிய சிரமமாக இருந்தது. தன் வரலாறு பாணியில் பின்னப்பட்ட அக்கதை புனைவின் சாத்தியங்களை நிராகரித்துவிட்டு ஒளிவு மறைவற்ற நிஜத்தின் உக்கிரத்துடன் என் முன் பேசுவதாக உணர்ந்தேன். கடந்த ஆண்டு அதை மறுவாசிப்பு செய்யும் போது அது பாமா என்ற ஒரு தனிமனிதரின் கதையாக மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்வில் எல்லா சூழல்களிலும் ஏற்படும் நிராகரிப்புகளை, ஏக்கங்களை, சுகதுக்கங்களை, தீண்டாமைகளை, பாசாங்கில்லாமல் பேசும் ஒரு முக்கியப் பிரதியாகத் தோன்றியது.
Continue reading




