நான்கு வாழ்வும் வரலாறும்

‘நாடு விட்டு நா டு’ எனும் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய தன் வரலாற்று புத்தகம் குறித்து எழுதத்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். ஆயினும் அப்புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் ஒரு சுய வரலாறு எதற்காக எழுதப்பட வேண்டும் என்ற கேள்வி முன் வந்து நின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நாவலாகவும் சுயவரலாறாகவும் எழுதப்பட்ட சில பிரதிகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.

இதில் பாமாவின் ‘கருக்கு’ சுயவரலாற்று தொணியில் இயற்றப்பட்ட நாவலாக இருக்கிறது. முதல் வாசிப்பில் ‘கருக்கு’ ஒரு நாவலாக என் மனதில் பதிய சிரமமாக இருந்தது. தன் வரலாறு பாணியில் பின்னப்பட்ட அக்கதை புனைவின் சாத்தியங்களை நிராகரித்துவிட்டு ஒளிவு மறைவற்ற நிஜத்தின் உக்கிரத்துடன் என் முன் பேசுவதாக உணர்ந்தேன். கடந்த ஆண்டு அதை மறுவாசிப்பு செய்யும் போது அது பாமா என்ற ஒரு தனிமனிதரின் கதையாக மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்வில் எல்லா சூழல்களிலும் ஏற்படும் நிராகரிப்புகளை, ஏக்கங்களை, சுகதுக்கங்களை, தீண்டாமைகளை, பாசாங்கில்லாமல் பேசும் ஒரு முக்கியப் பிரதியாகத் தோன்றியது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…18

 

மிஷ்கினுடன் நான்...

நியூ புக் லென்ட் (New Book Land) பல சிற்றிதழ்கள் , ஆவணப்படங்கள், நூல்கள் என குவிந்திருக்கும் புத்தகக் கடை. முந்தயைப் பயணத்திலும் அங்குச் சென்றதுண்டு. வாசகனின் தேர்வுக்கேற்ப அந்தப் புத்தக ஊழியர்களும் புத்தகங்களை உடனுக்குடன் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள்.

என்னிடமும் சிவாவிடமும் சில ஆயிரங்கள் மீதம் இருந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு சிறுதொகையை மட்டும் வைத்துக்கொள்வதாக முடிவு செய்தோம். எங்கள் தேவைக்கு ஏற்ற புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மொத்தமாக எண்ணியபோது புத்தகங்கள் நூறுக்கும் மேற்பட்டு இருந்தன. விலை நாங்கள் வைத்திருந்த பணத்தைத் தாண்டியது. ஒரே தலைப்பில் இருவரும் வைத்திருந்த சில புத்தகங்களை எடுத்து எண்ணியபோது அனுப்பும் செலவுடன் சேர்த்து எட்டாயிரம் ரூபாய் ஆனது. ஆச்சரியமாக எங்களிடம் மொத்தமே அவ்வளவுதான் இருந்தது. பணத்தை கட்டினால் அடுத்து ஆட்டோ எடுக்கக் கூட மீதம் இருக்காது. புத்தகங்களை விடவும் மனமில்லை. அதன் நிர்வாகி சீனிவாசனிடம் 7500 ரூபாய் செலுத்திவிட்டு மீதப்பணத்தை நண்பர் பௌத்த அய்யனார் பெயரை அவர் அனுமதியுடன் அடகுவைத்தோம்.
Continue reading

சா. ஆ. அன்பானந்தன், அ. ரங்கசாமி மற்றும் மரவள்ளிக்கிழங்கு!

சின்ன வயதிலிருந்தே நான் மலேசியாவில் ஜப்பானியர் ஆட்சி குறித்த சுவாரசியமான சம்பவங்களை என் ஆத்தாவின் பேச்சின் வழிக் கேட்டதுண்டு. ஆத்தா என் அம்மாவின் அம்மா. அவர் நினைவில் ஜப்பானியர்கள் குறித்த சில சம்பவங்கள் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. அவர்கள் ‘குரா குரா’ எனும் ஓசையெழப் பேசுவார்கள் என்பது அதில் சுவாரசியமானது. ஆத்தா எப்போதும் ஜப்பானியர்களைக் கொஞ்சம் உயர்த்திதான் பேசுவார். அவரின் அப்பாவுக்கு ஓரளவு ஜப்பான் மொழி தெரிந்ததால் ஜப்பானியர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதன் பலனாக ஜப்பானியர்கள் காலத்தில் எல்லோருக்கும் கிடைத்த சுண்ணாம்பு அரிசி ஆத்தா குடும்பத்துக்கு வழங்கப்படாமல் நல்ல அரிசி கிடைத்திருகிறது. நல்ல அரிசி கிடைத்த நன்றி அவருக்கு இன்றுவரை உண்டு. மற்றபடி சயாம் மரண ரயில் குறித்தெல்லாம் அவர் கேள்விப்பட்டதோடு சரி.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…17

அன்றைய காலை சுறுசுப்பாக விடிந்தது. தமிழகத்தில் நாங்கள் காணும் கடைசி காலை. அன்றைய முக்கிய நிகழ்வுகள் வசந்தகுமாரைக் காண்பதும் புத்தகங்கள் வாங்குவதும்தான். முன்தினமே வசந்தகுமாரிடம் சொல்லிவிட்டதால் காலையிலேயே புறப்பட்டோம்.
Continue reading

குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே மற்றும் ஜி. நாகராஜனின் ஆணாதிக்கம்!

எனது பதினேழாவது வயதில் புத்தகக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது சம்பந்தமே இல்லாமல் ஒரு தடித்த புத்தகத்தினுள்ளிருந்து வந்து விழுந்தது ‘குறத்தி முடுக்கு’. அப்போது அப்புத்தகத்தின் பெயர் குறத்தி முடுக்கு என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அட்டை இரண்டாகக் கிழிந்து ‘குறத்தி மு’ என இருந்தது. முகப்பின் ஒரு பக்கம் பின் திரும்பியிருக்கும் ஓர் ஆணின் வரையப்பட்ட படம் மட்டும் தெரிந்தது. எழுத்தாளர் பெயர் இல்லை. கிழிபட்ட பகுதியில் தொலைந்திருக்கலாம். அப்புத்தகத்தை பொறுமையாக அமர்ந்து திறந்து பார்க்க இந்த அம்சங்கள் போதுமானதாக இருந்தன.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…16

 

வண்ணநிலவனுடன்...

வண்ணநிலவன் எழுத்துகளை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் சண்முகசிவாவும் யுவராஜனும். அவரின் பல கதைகளை அவ்வப்போது நினைவு கூர்ந்து சொல்வார்கள். வண்ணநிலவனை வாசிக்கத்தொடங்கும் போதுதான் , சண்முகசிவா எழுத்தில் இருக்கும் வண்ணநிலவன் பாதிப்பு தெரிந்தது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…15

 

அய்யனாருடன் சிவா...

பவுத்த அய்யனார் பாவண்ணனை எங்கோ விட்டுவரப்புறப்பட்டார். நானும் சிவாவும் அவருக்காகக் காத்திருந்தோம். நான் அவ்வப்போது அவர் கொடுத்துச்சென்ற புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வண்ணநிலவன் கவிதைகளில் அதிக நேரம் கண்கள் சென்றுக்கொண்டிருந்தது.
Continue reading

தியாக‌ங்க‌ளின் மேல் ஏறி நிற்கும் வெற்றிக‌ள்!

 

வாசிப்பு என‌க்கு உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன், த‌மிழ்வாண‌ன், சுஜாதா, பால‌குமார‌ன், ஜெய‌காந்த‌ன், சிவ‌ச‌ங்க‌ரி, வாஸ‌ந்தி, வைர‌முத்து போன்றோரின் நாவ‌ல்க‌ளைத் தொட‌ர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து. நான் ப‌ணியாற்றிய‌ நான்கு மாத‌க் கால‌த்தில் நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாவ‌ல்க‌ளை எந்த‌ப் ப‌ட‌ப‌ட‌ப்பும் இல்லாம‌ல் ப‌டித்து முடித்திருந்தேன். புத்த‌க‌க் க‌டை ந‌ஷ்ட‌த்தில் மூட‌ப்ப‌ட்ட‌தும் நூல்க‌ள் வாங்கும் வாய்ப்பு அச்சிற்றூரில் கிடைக்காம‌ல் போன‌து.

பின்னாளில் ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரியில் ப‌டித்த‌ மூன்று ஆண்டுக‌ளும் பெரும் வ‌ர‌ட்சி. க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌லுக்கான‌ நூல்க‌ள் ம‌ட்டும் அங்கு இருந்த‌ன‌வே த‌விர‌ நாவ‌ல்க‌ள் என்று பெரிதாக‌ எதுவும் இல்லை. நான் ப‌டித்து முடித்திருந்த‌ மு.வ‌ர‌த‌ராச‌ன், க‌ல்கி அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த‌ன‌ர். ர‌ம‌ணி ச‌ந்திர‌னை 3 புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்த‌தோடு அலுத்துவிட்ட‌து. என‌து அறைத்தோழ‌ர் ச‌ங்க‌ இல‌க்கிய‌த்திலும் த‌னித்த‌மிழிலும் ஈடுபாடு காட்டிய‌தால் வேறு வ‌ழியில்லாம‌ல் அ.கி.ப‌ர‌ந்தாம‌னின் ந‌ல்ல‌ த‌மிழ் எழுத‌ வேண்டுமா, திருக்குற‌ள், திரும‌ந்திர‌ம் என‌ வாசித்து அவ்வ‌ப்போது பேசிக்கொண்டிருப்பேன். என்னைக் காட்டிலும் என் அறைத்தோழ‌ர் திருவ‌ருட்பாவையும் திருக்குற‌ளையும் ம‌ன‌ன‌மாக‌ச் சொல்வ‌தில் தேறியிருந்தார்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…14

 

பாவண்ணனுடன்...

தி. நகர் பேருந்து நிலையத்தில் பௌத்த அய்யனாருடன் பாவண்ணனும் இருந்தார். தொடக்கத்தில் நான் பாவண்ணனை  பெயரளவில் அறிந்து வைத்திருந்த போது அவரை வாசிக்கத் தூண்டியவர் நண்பர் காளிதாஸ். கவிதை, சிறுகதை, கட்டுரைத்தொகுதிகள், குறுநாவல்கள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள், குழந்தைப்பாடல்கள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருப்பவர். மொழிபெயர்ப்பிற்காகச் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர். அவரை  ‘நேற்று வாழ்ந்தவர்கள்’, ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்ற இரு சிறுகதை தொகுதி மூலமாகவே அறிந்து வைத்திருந்தேன். ஒருசில கட்டுரைகளை வாசித்ததுண்டு. இத்தனைக் குறைவாக வாசிப்பின் மூலம் அறிந்த ஒருவருடன் நேரில் அமர்ந்து பேசுவது ஒருவகையான கூச்சத்தைக் கொடுத்தது.
Continue reading

ஊஞ்சல் 3

 

 

அருகருகே இருக்கும்
இரட்டை ஊஞ்சலில் ஒன்று
அசையாமல்
நான் ஆடும்போது
வெறித்துப் பார்க்கிறது
மற்றொன்றை
எனது ஏகாந்தத்தை நீ
பார்ப்பதுபோல.

Continue reading