அன்று காலை 10 மணிக்கு ஆதவன் தீட்சண்யாவை பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். இரவில் தாமதமாகப் படுத்தாலும் 7 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டிருந்தது. சிவா உறக்கத்தில் இருந்தார். வெளியில் லீனாவும் உறங்கிக் கொண்டிருந்தார். வாயில் கதவைத்திறந்தேன். முதல் ஆளாக வாயில் கதவைத் திறப்பதென்பது எனக்குப் பிடித்தமான செயல். ஏதோ அன்றைய வாழ்வை முதலாவதாகத் தொடங்கிவைப்பது போல ஓர் எண்ணம். முகத்தில் அடிக்கும் முதல் காற்று உற்சாகப்படுத்தக்கூடியது.
Continue reading





