சினிமாவைத் தேடி சென்னை பயணம்…5

காலையில் எழுந்தவுடன் லீனா பரபரப்பாக எங்களுக்குப் பசியாரை தயார் செய்து கொண்டிருந்தார். நம்ம ஊர் (மலேசியா) பாலப்பம் போல இருந்தது ஆனால் இனிப்பில்லை. அப்பத்திற்குப் பிரத்தியேகமாய் குழம்பு செய்திருந்தாலும் முன்னிரவு வைத்த மீன் குழம்பைக் கேட்டுவாங்கி சாப்பிட்டேன். சுவை கூடியிருந்தது. சமையல் என்பது ஒரு மாபெரும் கலை. கலையுணர்வு உள்ளவர்களால்தான் அதை புதுமை செய்ய முடிகிறது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…4

மீண்டும் வந்த போது இயக்குநர் ராம் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரின் உதவி இயக்குநர் செல்வம் இருந்தார். ஏதோ புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். இளைஞர் .24 அல்லது 25 வயதிருக்கும். சட்டம் படித்துள்ளார். ராமுடன்தான் தங்குகிறார். “எப்படிப் போகிறது வேலை ” என ஆரம்பித்தோம்.

Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…3

ஏ.வி.எம் வாயிலில் சிவா

எ.வி.எம்அருகில் சென்றவுடன் அதன் உலக உருண்டை சுழன்று கொண்டிருந்தது. பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த உருண்டை. இந்நிறுவனம் பற்றி கேள்விப்பட்டதுண்டு.  தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பாரம்பரியம் நிறைந்த தயாரிப்பு நிறுவனம் என்றும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ஆர். என ஐந்து முதல்வர்களை சம்பளம் தந்து வேலை வாங்கிய ஒரே நிறுவனம் என்பது அதில் முக்கியமானது.

உள்ளே நுழைந்தோம். இதற்கு முன் திரைப்படங்களில் கண்ட கட்டடங்கள் வல இடம் என இருந்தன. இயக்குநர் ராம் வழங்கிய எண்களுக்கு அழைத்த போது செட் அமைக்கும் குழுவில் இருந்த நண்பர் வெளிவந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.உள்ளே இதற்கு முன் திரைப்படங்களுக்காக அமைக்கப்பட்ட செட்டுகளைக் காட்டினார். சில திரைப்படங்கள் கண்முன் வந்து சென்றன.

Continue reading

சிறுகதை : கூலி

அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் ‘நான்காவது பிலோர் 4-பி’ என்று பதறத்துடன் குறிப்பெடுத்ததை மீண்டும் ஒருதரம் நினைத்து சரி பார்த்துக்கொண்டான். நிச்சயம் அவ்வறை அழுகை சூழ்ந்து இருக்கும். அம்மாதான் அதிகம் அழுதிருப்பாள். அம்மாவுக்கு அழுவதற்குப் பெரிய காரணங்கள் வேண்டாம். சாதாரணமாக மேசையின் கால்கள் உடைந்துவிட்டாலே அம்மேசையை அப்பா வாங்குவதற்கு உழைத்த உழைப்பையும் பிடித்த சிக்கனத்தையும் சொல்லி அன்று முழுதும் அழுது தீர்த்துவிடுவாள். அண்ணனுக்கு விபத்து நடந்தது நிச்சயம் அவளை நிலைகுழைய வைத்திருக்கும். அப்பா வேலையை விட்டு ரிட்டாயரான பிறகு அவளின் முழு நம்பிக்கையும் அண்ணன்மீதுதான் இருந்தது.

Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…2

இயக்குநர் ராம் வீடு விருகம்பாக்கத்தில் இருந்தது. அவரிடம் தொலைப்பேசியின் மூலம் வழி கேட்டபடியே இடத்தை வந்தடைந்தோம். பயணம் நெடுகிலும் ‘கற்றது தமிழ்’ படத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தபடியே இருந்தன. நான் தமிழில் அதிகமுறை பார்த்த படம் அது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் தொடங்கும் கதை ஒட்டுமொத்தமாக சமூக , அரசியல் விமர்சனமாக மாறி அதன் தொனி உலகம் மொத்தத்துக்கும் ஒன்றென ஒலிக்கிறது. உலகமயமாக்கல் அதில் தொடங்கும் மனித ஏற்றத்தாழ்வு அதன் விளைவாய் வாழ்வியல் சவால்கள் என மிக ஆழமான விமர்சனங்களை முன்வைக்கும் படம். ஊடே காதல். ‘தமிழ் கற்றவனின் நிலை’ என்ற ஒற்றை பரிணாமத்தில் தமிழ் ரசிகர்களால் படம் புரிந்துகொள்ளப்பட்டது துரதிஷ்டம்.

Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…1

வரட்டுத்தனமான சமூகத்தின் மீது படிந்துள்ள துருவை அகற்ற உதவும் மாபெரும் சக்தியாகக் கலையை நான் கருதுகிறேன். பிரச்சார ரீதியாக மிகையுணர்ச்சியைத் தூண்டி ஒரு சவர்க்கார நுரை வெடிப்பது போல அர்த்தமற்ற வெற்று அதிர்ச்சிகளை உருவாக்கும் இன்றைய சூழலில் கலை, மன எழுச்சிக்கான சாத்தியங்களை உருவாக்கி சமூகம் நம்பியுள்ள மாயையை அசைத்து உடைத்து மீள் கட்டுமானம் செய்தபடியே உள்ளது. அவ்வகையில் சினிமா எனும் ஒரு கலை வெளிப்பாட்டின் நல்ல தொடக்கங்களை மலேசியாவில் ஏற்படுத்த எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. நான் திரைப்படங்கள் பார்த்தது குறைவு. அதுவும் தமிழல்லாத பிற படங்கள் 30க்கும் குறைவாகவே பார்த்திருப்பேன்.  சுடத்தெரியாதவனுக்கும் துப்பாக்கியின் சக்தி தெரிவது போல எனக்கு சினிமாவின் சக்தி தெரியும்.

Continue reading

வெளிறு இன்மை அரிது

எனக்கும் கவிதைக்குமான உறவைப்பற்றி பேசுவது… ஏன் நினைப்பதுகூட சங்கடமானது. மற்றவர்களின் சங்கடத்தைப் பற்றி படிப்பது சிலருக்குச் சுவாரசியமாக இருக்கும் என்பதால் மட்டுமே மெனக்கெட்டு கவிதையுடனான எனது மூன்று அனுபவங்களை எழுத விழைகிறேன். Continue reading

தமிழகப் பயணம்

நாளை 31.3.2011 தமிழகத்திற்குச் செல்கிறேன்.  உடன் நண்பர் சிவா. செல்லும் முக்கிய நோக்கம் இயக்குநர்களைச் சந்திப்பது என இப்போதைக்கு முடிவு செய்துள்ளோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் எழுத்தாளர்களையும் சந்திப்பதாகத் திட்டம். சுவாரசியத்தில் திட்டம் அப்படியே தலைகீழ் ஆகிவிடுமோ என அச்சமாக உள்ளது. 4.4.2011 திரும்பிவிடுவோம். அநேகமா நான் தனியனாய் திரும்பலாம். சிவா அங்கேயே தங்கிவிட இரண்டு விடயங்கள் காரணங்க இருக்கலாம் .

Continue reading

கனவு 1

பயமும் மகிழ்ச்சியும்
ஒரு சேர வருகிறது
யாராவது எழுப்பும் போது
வாழ்வை
கனவென்று
உணரப்போகும் நிமிடம் குறித்து.

Continue reading