Author: பூங்குழலி வீரன்

விரலிடுக்கில் சிக்கும் வார்த்தைகள் – அ.வெண்ணிலாவின் கவிதைகள்

எல்லைகளற்று வரைமுறைகளற்று நீண்டு விரிந்திருக்கும் சிந்தனையையும் மனதையும் போல் கவிதையும் தனது சிறகை எல்லைகளற்று விரித்தபடியே இருக்கிறது. தனக்கான வெளியை கவிதையே கட்டமைக்கிறது. அந்த வெளியைத் தகர்த்து புது புது வெளிகளையும் தொடர்ந்து கட்டமைக்கும் பணியையும் கவிதை செய்கின்றது. வெறும் அழகியலையும் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் மேல்பூச்சுகளோடு பேசி வந்த கவிதைகள் இன்று கட்டுகள் உடைத்து தன்மொழியில்…

லூய் யோக் தோ சீனக்கவிதைகள்

தமிழில் : கி.இ.உதயகுமார் , பூங்குழலி வீரன் பிரியாவிடை ‘சி’ என் இருப்பு இங்குதான் என முடிவெடுத்திருக்கிறேன் நம்பிக்கைகள் மக்கிப்போகும் பொழுதுகளில் மீதி வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் தகுதியற்றுப் போகின்றன… புலப்படாத ஏக்கங்களின் மையமிது “பார்… தூரங்கள் மெதுவாக மறைந்து போகின்றன…” ஆனால் இந்தக் கிரகத்தை விட்டுச்செல்ல அடம் பிடிக்கிறேன் படிப்பது, எழுதுவது, இசையமைப்பது, வரைவது, நேரத்துடன்…

வெறி நாய்களுடன் விளையாடுதல் : குழந்தை மனமும் மனிதமும்

ம.நவீனின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பத்து ஆண்டுகளுக்கு மேல் நவீனின் கவிதைகளுடன் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தொடர்ந்து நான் கவிதைகளோடு பயணிப்பதற்கு நவீனும் நவீனுடைய கவிதைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நான் எப்போதும் உணர்ந்தே வந்திருக்கிறேன். அந்த வகையில் நவீனின் நட்புக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொண்டு இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்த…

வேராய் ஒளித்து வைக்கும் மொழி – கலாப்பிரியா கவிதைகள்

எப்போதுமே எனக்கு கலாப்பிரியாவின் கவிதைகளின் மேல் தனியானதொரு காதல் உண்டு. அவரது பரந்து விரிந்த கவிதைக்களமும் கவிதையும் கவித்துவமும் மிக அழகானது. மீண்டும் மீண்டும் சிலாகிக்க வைக்கும் தனியொரு சக்தி அவரது கவிதைகளுக்கு உண்டு. அவரது மொழி ஆளுமை அபாரமானது. ஓரிரு வார்த்தைகளை ஒன்று சேர்த்து புதியதொரு பொருளைக் கொடுக்கும் அதிசயத்தை அவரது கவிதைகள் நிகழ்த்திக்…

சொற்கள் அலையும் பெருநகரம் – யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

பல்வேறு கிளைச்சம்பவங்களுடன் நீண்டு விரியும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் எனது வாசிப்பு தளத்திற்குப் புதியவை. எப்போதும் மிக கவனமாக கையாளப்பட்ட சொற்ப வாக்கியங்களாலான கவிதைகளையே அதிகமான வாசித்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு யவனிகாவின் கவிதைகள் வியப்பளிக்கின்றன. தொடக்கத்தில் அதில் நுழைவதற்கான ஓர் அச்சத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், கவிதைக்குள் நுழைந்து விடுகிற பொழுது ஒவ்வொரு சொல்லும்…

வல்லினம் கலை இலக்கிய விழா 5

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) நிகழ்வை தொடர்ந்து செப்டம்பர்  15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் இம்முறை கலை இலக்கிய விழாவில் பங்கு கொண்டனர். நிகழ்வின் முதல் அங்கமாக நவீன்…

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) மற்றும் 5-வது கலை இலக்கிய விழாவிற்கான வேலைகள் இம்முறை கூடுதல் உற்சாகத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தந்திருந்தது. வல்லினம் குழுவின் மிக முக்கிய தொடர் நிகழ்வான இலக்கிய வகுப்போடு இம்முறை 5-வது கலை இலக்கிய விழாவும் சேர்ந்து கொண்டது கூடுதல் கனத்தைத் தந்திருந்தது. வழக்கம்போல பட்டறை…

குவர்னிகா: டாக்டர் சண்முகசிவா நேர்க்காணல் குறித்து…

குவர்னிகா தொகுப்பில் உள்ள டாக்டர் சண்முகசிவாவின் “மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று” நேர்காணல் குறித்து நீங்கள் பேச வேண்டும் என நவீன் கேட்டபோது சிறு மௌனத்தை மட்டுமே என்னால் பதிலாக தர முடிந்தது. நீங்கள் அவரது நேர்காணல் குறித்து எதுவும் பேசலாம் என மேலதிகமாக நவீன் சொன்ன பிறகு பேசுவதற்கான வார்த்தைகளுக்காக…

கவிதைகள் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து கொஞ்ச காலம் விடுபடச் செய்திருக்கிறது!

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. பூங்குழலி வீரன் அவர்களின்  ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பும் அதில் ஒன்று. அவருடனான சந்திப்பு… கேள்வி: வல்லினம் வெளியீடாக வரவிருக்கும் உங்கள் கவிதை நூல் பற்றி அறிமுகம் செய்யுங்கள். வல்லினம்…

நாவல்கள் குறித்த பகிர்வில் ஒரு புதிய பரிணாமம் – ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு

வல்லினம் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு எனும் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. இந்நூலின் முன்னுரையில் நவீன் பதிவு செய்திருக்கும் கருத்துடன் இக்கட்டுரையைத் தொடங்குவது இத்தொகுப்பு குறித்து சிறந்த அறிமுகத்தினை வாசகர்களுக்கு வழங்கும். “வாசிப்பின் புரிதல் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுவதுபோல் வாசிக்கும் நோக்கமும் வாசிப்பை எதிர்கொள்ளும் விதமும் அறிவின் முதிர்ச்சிக்கு…

நிகழ்வது நிமித்தமாக

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் பூங்குழலி வீரனின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பின் முன்னுரை கவிதை எனப்படுவது நிகழ்தல்; நிகழ்தல் வழி பிறக்கும் பதிவுகள். நிழல்படங்களைப் போல்தான் கவிதையும். ஒரு நினைவிற்காக பத்திரப்படுத்தி வைக்கும் நிழல்படங்களில் நம்மை மட்டும் பார்க்கின்றோம். கவிதைகளில் நம்மையும் நாம் உணர்ந்தவற்றையும் பார்க்கிறோம். என்னைக் கடந்த போன காலத்தைத்தான் நான் என்…

நானும் ரௌத்திரம் பழகுகின்றேன்.

அந்த நிகழ்விற்குப் போக வேண்டும் என்ற எந்தத் திட்டமும் எனக்கில்லை. நிகழ்விற்கு முதல் நாள் தானும் மணிமொழியும் நிகழ்விற்குப் போகவிருப்பதாக யோகி அழைத்திருந்தார். நாங்கள் மூவரும் இப்படியான பொது நிகழ்வுகளில் சந்தித்து நீண்ட நாள்களாகிறது. அதற்காகவே, இந்த “மலேசிய தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்” நூல் வெளீயிட்டு விழாவிற்குச் செல்லலாம் என முடிவெடுத்திருந்தேன். ஏற்கனவே, இந்த நூல்…

எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை! – வண்ணதாசன்

இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்… நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது –…

அடுத்த முறையாவது…

ஆளும் அரசாங்கத்தின் மீது நமக்கிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த நமக்கே நமக்கென கிடைத்த ஒரு சிறந்த களம் தேர்தலாகும். நம்மைப் பகடைக் காய்களாக்கி ஆட்டமாய் ஆடிய அரசியல்வாதிகளை இந்தக் களத்தில்தான் வேரறுக்க முடியும்… நமது ஓட்டுகளை அரிவாளாகக் கொண்டு இரத்தம் சிந்தாமல் இங்குதான் வெட்டி வீழ்த்துகின்ற பணியியை செய்ய வேண்டும். மீண்டும் முளைக்க விடாமல் வேரோடு களையெடுக்க…

தேர்தலில் யாருக்கு முதல் மதியாதை?

மலேசிய வரலாற்றில் இதுவரைக் காணக்கிடைக்காத அற்புத காட்சிகளோடு நாட்டின் 13-வது பொதுத்தேர்தல் களைக்கட்டியிருக்கிறது. நான் வாக்களிக்கப்போகும் இரண்டாவது தேர்தல் இது. எப்போதும் கட்டிக்கே (தேசிய முன்னணி) வாக்களிக்க வேண்டும் என்றிருந்த ஒரு தலைமுறையின் சத்தியத்தை உடைத்து நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவை கையில் வைத்திருக்கும் இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன். மிக அண்மையில் நான்…