பயணம்

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…5

காலையில் எழுந்தவுடன் லீனா பரபரப்பாக எங்களுக்குப் பசியாரை தயார் செய்து கொண்டிருந்தார். நம்ம ஊர் (மலேசியா) பாலப்பம் போல இருந்தது ஆனால் இனிப்பில்லை. அப்பத்திற்குப் பிரத்தியேகமாய் குழம்பு செய்திருந்தாலும் முன்னிரவு வைத்த மீன் குழம்பைக் கேட்டுவாங்கி சாப்பிட்டேன். சுவை கூடியிருந்தது. சமையல் என்பது ஒரு மாபெரும் கலை. கலையுணர்வு உள்ளவர்களால்தான் அதை புதுமை செய்ய முடிகிறது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…4

மீண்டும் வந்த போது இயக்குநர் ராம் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரின் உதவி இயக்குநர் செல்வம் இருந்தார். ஏதோ புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். இளைஞர் .24 அல்லது 25 வயதிருக்கும். சட்டம் படித்துள்ளார். ராமுடன்தான் தங்குகிறார். “எப்படிப் போகிறது வேலை ” என ஆரம்பித்தோம்.

Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…3

ஏ.வி.எம் வாயிலில் சிவா

எ.வி.எம்அருகில் சென்றவுடன் அதன் உலக உருண்டை சுழன்று கொண்டிருந்தது. பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த உருண்டை. இந்நிறுவனம் பற்றி கேள்விப்பட்டதுண்டு.  தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பாரம்பரியம் நிறைந்த தயாரிப்பு நிறுவனம் என்றும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ஆர். என ஐந்து முதல்வர்களை சம்பளம் தந்து வேலை வாங்கிய ஒரே நிறுவனம் என்பது அதில் முக்கியமானது.

உள்ளே நுழைந்தோம். இதற்கு முன் திரைப்படங்களில் கண்ட கட்டடங்கள் வல இடம் என இருந்தன. இயக்குநர் ராம் வழங்கிய எண்களுக்கு அழைத்த போது செட் அமைக்கும் குழுவில் இருந்த நண்பர் வெளிவந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.உள்ளே இதற்கு முன் திரைப்படங்களுக்காக அமைக்கப்பட்ட செட்டுகளைக் காட்டினார். சில திரைப்படங்கள் கண்முன் வந்து சென்றன.

Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…2

இயக்குநர் ராம் வீடு விருகம்பாக்கத்தில் இருந்தது. அவரிடம் தொலைப்பேசியின் மூலம் வழி கேட்டபடியே இடத்தை வந்தடைந்தோம். பயணம் நெடுகிலும் ‘கற்றது தமிழ்’ படத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தபடியே இருந்தன. நான் தமிழில் அதிகமுறை பார்த்த படம் அது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் தொடங்கும் கதை ஒட்டுமொத்தமாக சமூக , அரசியல் விமர்சனமாக மாறி அதன் தொனி உலகம் மொத்தத்துக்கும் ஒன்றென ஒலிக்கிறது. உலகமயமாக்கல் அதில் தொடங்கும் மனித ஏற்றத்தாழ்வு அதன் விளைவாய் வாழ்வியல் சவால்கள் என மிக ஆழமான விமர்சனங்களை முன்வைக்கும் படம். ஊடே காதல். ‘தமிழ் கற்றவனின் நிலை’ என்ற ஒற்றை பரிணாமத்தில் தமிழ் ரசிகர்களால் படம் புரிந்துகொள்ளப்பட்டது துரதிஷ்டம்.

Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…1

வரட்டுத்தனமான சமூகத்தின் மீது படிந்துள்ள துருவை அகற்ற உதவும் மாபெரும் சக்தியாகக் கலையை நான் கருதுகிறேன். பிரச்சார ரீதியாக மிகையுணர்ச்சியைத் தூண்டி ஒரு சவர்க்கார நுரை வெடிப்பது போல அர்த்தமற்ற வெற்று அதிர்ச்சிகளை உருவாக்கும் இன்றைய சூழலில் கலை, மன எழுச்சிக்கான சாத்தியங்களை உருவாக்கி சமூகம் நம்பியுள்ள மாயையை அசைத்து உடைத்து மீள் கட்டுமானம் செய்தபடியே உள்ளது. அவ்வகையில் சினிமா எனும் ஒரு கலை வெளிப்பாட்டின் நல்ல தொடக்கங்களை மலேசியாவில் ஏற்படுத்த எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. நான் திரைப்படங்கள் பார்த்தது குறைவு. அதுவும் தமிழல்லாத பிற படங்கள் 30க்கும் குறைவாகவே பார்த்திருப்பேன்.  சுடத்தெரியாதவனுக்கும் துப்பாக்கியின் சக்தி தெரிவது போல எனக்கு சினிமாவின் சக்தி தெரியும்.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 10

நாங்கள் பேசி முடித்தவுடன் கிளம்பி விடலாம் என முடிவெடுத்திருந்தோம். எங்களுக்குப் பின்னர் சை.பீர்முகம்மது பேசுவதாக கேள்விப்பட்டதால் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். அந்த நேரம் எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் குமரன் மேடையில் ஏறி பேசினார். அவர் பேச்சின் இறுதியில் ‘நவீன் கோரிக்கையை நான் அமுல்படுத்த இந்த மேடையில் உறுதி அளிக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டில் தமிழை மூல மொழியாகக் கொண்ட மாணவர்களை இணைக்கும் வண்ணம் சிறுகதை பட்டறை மற்றும் போட்டிக்கான ஏற்பாட்டினை மலாயா பல்கலைக்கழகத்திலேயே ஏற்பாடு செய்கிறேன்..வல்லினம் கேட்டுக்கொண்ட களம் அவர்களுக்கு அங்குக் கிடைக்கும்.’ என்றார்.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 9

 

மேடையில் ஏறியபோது கூட்டம் சோர்ந்திருந்தது. பொதுவாகவே மனிதனின் கவனமாகக் கேட்கும் திறன் 20 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். பள்ளியில் மாணவர்களிடம் போதிக்கும் போதும் இத்தன்மையைக் கண்டதுண்டு. பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் கவனம் பல்வேறு திசைகளுக்குச் சென்றுவிடும். அவர்கள் கவனம் தொடர்ந்து பாடத்தில் இருப்பதற்குதான் பீடிகை, பாடத்துணைப் பொருட்கள் போன்றவை உதவுகின்றனர்.

நேற்றிலிருந்து அமர்ந்து பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த பயிற்சி ஆசிரியர்களின் முகங்கள் சோர்ந்திருந்தனர். அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்களை அவர்கள் கரங்கள் புரட்டிக்கொண்டிருந்தன. எங்கள் அமர்வின் தொகுப்பாளர் திரு.வாசுதேவன் பேசத்தொடங்கியபோது கூட்டத்தை கவனித்தேன். முதல் பேச்சாளர் நான். நான் பேச வேண்டியது இளம் பயிற்சி ஆசிரியர்களுக்குத்தான் என மனதில் உறுதி செய்துக்கொண்டேன். தங்கள் மூளை நிறைய கருத்துகளைச் சுமந்து கொண்டிருக்கும் அறிஞர்களிடம் நான் சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. குறிப்பாக அதிகாரத்திடம் சமரசம் செய்துக்கொள்வது பற்றி.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 8

காலையில் கண்களைத் திறக்க முடியாத போதுதான் உடல் சோர்வை முழுமையாக உணர முடிந்தது. உடல் களைத்திருந்தாலும் மனம் தெம்பாக இருந்தது. நேற்றிலிருந்து போதுமான நேரம் வழங்கப்பட்டிருந்ததால் நிகழ்வில் என்ன பேச வேண்டும் என மனதில் பதிந்திருந்தது. ஓர் எழுத்தாளனுக்கு 10 நிமிடம் மேடையில் பேசுவது பெரிய விசயமா என்ன?

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 7

கொஞ்ச நேரத்தில் பாலமுருகனும் வெளியேறினார். நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாமல் எங்கள் உரைகளை மட்டும் கேட்க வந்த ஏ.தேவராஜனை அப்போதுதான் பார்த்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எல்லாம் இலக்கிய கூட்டங்கள் சடங்குகளாகிவிட்ட அவலம் குறித்துதான். பாலமுருகனுக்குத் திடீர் என ஏதோ தோன்றியிருக்க வேண்டும். “ஆச்சரியமாக வல்லினம், பறை, மௌனம் ஆசிரியர்கள் மூவரும் இங்கு இருக்கிறோம். இது ஒரு இதழாசிரியர் சந்திப்பு” என்றுக்கூறி சிரித்தார். பாலமுருகனுக்கு எல்லா சூழலிலும் சிரிக்கும் வரம் கிடைத்திருக்கிறது.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 6

அப்படி இப்படி என்று நிகழ்ச்சி தொடங்க 5.30 க்கு மேல் ஆகிவிட்டது. மண்டபத்தின் இறுதி இருக்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதில் கதைப்பதற்கும் மடிக்கணனிக்கு மின்சாரத் தொடர்பு கொடுப்பதற்கும் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சிவா, யுவராஜனை அழைத்துக்கொண்டு வந்தார். மூவரும் கணினியில் ஆழ்ந்தனர். நான் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் நிரம்பியிருந்தனர். எனக்கு என் கல்லூரி காலங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

Continue reading