நவீன் வணக்கம். இந்த மாத புது விசை இதழில் உங்களின் சிறுகதை ‘வண்டி’ படித்தேன். மிகவும் நுட்பமான தனித்துவம் கொண்ட கதை அது.உடனே ஆதவனிடம் பேசியபோது உங்கள் எழுத்துக்கள் பற்றி சொன்னார். உங்கள் கதை தன்னளவிலேயே எல்லாவிதமான கூறுகளையும் கொண்டு இயங்குகிறது.எழுதுகிறவனின் ஒரு சின்ன தொந்தரவோ, குழப்பமோ இல்லை.அதிகப்படியான எதுவுமில்லை.அத்தனை நேர்த்தி. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.மலேய அனுபவங்களை. இன்னும் பலவற்றை.
-அழகிய பெரியவன்.






