அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் கூறியது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை எப்படி அவ்வாறு கூற இயலும் என நமது அக்னிக் குஞ்சுகள் கொதித்து எழுந்தன.
கடிதம்/எதிர்வினை
மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மீதான அவதூறுக்கு முற்றுப்புள்ளி!
அண்மையில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தங்கள் அரவணைப்பில் வைத்து, அவர்களை மீள்உருவாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கும் அந்த அறவாரியத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பூச்சோங் முரளி போன்ற சிலரால் பரப்பப்பட்டது. சமூகத்தில் பல நல்ல செயல்திட்டங்களை உருவாக்கி முன்னெடுக்கும் வழக்கறிஞர் பசுபதி அவர்கள்மேல் கொண்ட தனிப்பட்ட காழ்ப்பால் பூச்சோங் முரளி பலமுறை இதுபோன்ற அவதூறுகளைப் பலகாலமாகப் பரப்பி வந்தது நாம் அறிந்ததே. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பரவிக்கொண்டிருந்த சூழலில் இது அவதூறு பரப்பும் நோக்கம் என்று உறுதியாக நம்ப தண்டிக்கப்பட்ட மாணவனின் தந்தையே சாட்சியாக நேர்காணல் வழங்கியுள்ளார்.
கடிதம்: தமிழ்ப்பள்ளி பற்றிய எனது அனுபவப் பகிர்வு!
70,80,90-ஆம் ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளியில் படித்தால் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெற முடியாது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. என் உறவினர் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தும், மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாததால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. 8 முறை ஜூலை தேர்வு எழுதியும் தேர்ச்சி அடையவில்லை. அதனால் என் அம்மாவுக்கும் என் உறவினருக்கும் இந்த எண்ணம் தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது. என் அம்மா நான் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காக தமிழ்ப்பள்ளியில் சேர்த்தார். என் உறவினர் மலாய்மொழிக்காகவே அவர் மகனை தேசிய பள்ளிக்கு அனுப்பினார். இருவருமே மலாய் மொழிக்கென்று எங்கள் இருவருக்கும் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ஊக்கம் கொடுத்தார்கள். என் உறவினருக்கு நான் தமிழ்ப்பள்ளி என்பதால் ரிமூஃ கிளாஸ் போவேன் என மிகவும் எதிர்ப்பார்த்தார். எஸ்.பி.எம் தேர்வு வந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்த நான் ஏ2 எடுத்தேன். மறு ஆண்டு எஸ்.பி.எம் எழுதிய என் தேசியப் பள்ளி தம்பிக்கு மலாய் மொழியில் 7டி கிடைத்தது. தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய மொழியில் புலமை இல்லாமல் போவதற்கும் சம்பந்தமே இல்லை என யார் வந்தாலும் சத்தியம் செய்வேன். தமிழ்ப்பள்ளி சேர்க்க பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் யாரும் இப்பொழுதெல்லாம் தமிழ்ப்பேசுவதில்லை. ஆங்கிலம் தான் வாழ்கிறது. பொதுவில் ஒரு கருத்தை எடுத்துரைக்க ஆங்கிலம் அவசியம். அதே போல, நமது இனம் பற்றிய அறிவை கூர்மையாக்கிக் கொள்ள தாய்மொழிக் கல்வி அவசியம். அதனை தமிழ்ப் பள்ளிகள் தான் தர முடியும்.
மோகனா
உதயசங்கரின் நேர்காணல்; எதிர்வினை
உதயசங்கர் எஸ்.பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து கூறிய அவதூறுகளுக்கு இன்னும் அவர் மன்னிப்பு எதுவும் கேட்காத சூழலில் தொடர்ந்து தனது முகநூலில் இப்பிரச்சனை குறித்து பேசுபவர்களை நக்கல் அடித்து வருகிறார். பொதுவாகவே உதயசங்கர் போன்ற அற்பமான அடையாளத்தேடிகளின் பாணி அது. இந்நிலையில் அவரது நேர்க்காணல் ஒன்றை வாரப்பத்திரிகை ஒன்று தன் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளது. நடப்பு சூழல் குறித்து உதயசங்கர் சொல்லும் பதில்கள் அனைத்துமே பசப்பலானவையாக உள்ளது. உதயசங்கர் பதில்களின் அடிப்படையில் இடைக்கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டியது நேர்காணல் செய்தவரின் பொறுப்பு. ஆனால், நேர்காணல் இன்னும் அச்சுக்கு வராத சூழலில் முகநூலில் அவர் பகிர்ந்திருந்த பதில்களைக் கொண்டு நாம் சில எதிர்க்கேள்விகளைக் கேட்கவேண்டியுள்ளது.
உதயசங்கர் எஸ்.பி … (கடிதங்கள்)
தமிழ்ப்பள்ளி குறித்த தங்கள் அக்கறை என்னை வெகுவாகக் கவர்ந்தது. கட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்தில் இருப்பதால் உடன்வர முடியவில்லை. ஆனால் மனதார வாழ்த்துகிறேன்.
உங்கள் நண்பன்
“திருட்டுத்தனத்தைப் போதிக்கும் தமிழ்ப்பள்ளிகள்” – உதயசங்கர் எஸ்.பி
நம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்குத் தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது.
கடிதம் – கிருஷ்.ராமதாஸ்
‘காத்திருப்பதும் சுமப்பதும் காயப்படுவதும் இதழுக்காகத்தான் என்றால் எனக்கு அது சம்மதமாகவே இருந்தது.’
வணக்கம் நவீன். இணையத்தில் சிற்றிதழ் தேடித் தேடி, பித்துப்பிடித்து அலையும் கிருஷ்.ராமதாஸ், துபாய் (பெரம்பலூர், தமிழ்நாடு) எழுதுவது. நல்வாழ்த்துகள். நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல இணையத் தேடலின் போது ‘ஜெயமோகனுக்கு எதிர்வினை’ என்ற தலைப்பைப் பார்த்த உடன் உங்கள் இணையப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஏன் மேய்ந்து என்ற வார்த்தை? உண்மை அதுதான். நான் இலக்கியவாதி இல்லை. எழுத்தாளன் இல்லை. ஆனால் 1980களில் இருந்து சிற்றிதழ்களின் மீது அளவற்ற பிரியமும், வெறியும் கொண்டவன். எப்படி அவை என்னை ஈர்த்தன என்று இன்றளவும் விடை காண முயற்சிக்கிறேன்.
ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…
இரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் ‘சிற்றிதழ் என்பது…‘ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச்சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.
தயாஜி; அழகுநிலா; அலையும் முதல் சுடர்!
தயாஜி, முதலில் உங்கள் கடிதம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் எதிர்ப்பார்ப்பது இத்தகைய உரையாடலைத்தான். ‘காவ்யா பதிப்பக’ வெளியீட்டில் வந்த க.நா.சு வின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டு; மதிப்பீடு செய்து தன் முடிவுகளை எந்தவித மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைக்கிறார். வாசிக்க வாசிக்க அவர் விரிவான பார்வை ஆச்சரியம் தருகிறது. அவர் சிபாரிசு செய்துள்ள பல நூல்களை இன்னும் கண்ணால் கூட கண்டதில்லை என நினைக்கும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது. நான் அவரை மிக முக்கியமான வாசகராகப் பார்க்கிறேன். ஒரு தீவிரமான வாசகனால்தான் எந்தப்படைப்புக்குள்ளும் நுழைய முடிகிறது. அது குறித்த புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடிகிறது.
தயாஜி கடிதம் : அழகுநிலா சிறுகதைகள்
வணக்கம் நவீன். நாம் அதிகம் பேசியிருக்கிறோம். இன்னமும் பேசவிருக்கிறோம். இக்கடிதத்தை எழுதுவதற்கு காரணம் உண்டு. நாம் வல்லினம் குழுவில் நண்பர்களுடன் தொடர்ந்து செயலாற்றிவருகின்றோம். ஆரோக்கியமான முறையில் அதற்கான பலன்களை நான் கண்டிருகின்றேன்; உணர்ந்திருக்கின்றேன். ஆனால் சமீபத்தில் வல்லினம் குழு குறித்தும் உங்களை குறித்தும் சில அவதூறுகள் வந்தவண்ணம் உள்ளன. எல்லா அவதூறுகளுக்கும் நாம் பதில் கொடுத்திட அவசியமில்லை என்று நம்புகின்றேன். நாம் நமக்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாகத்தான் நமது உரையாடல்களை இப்படி பதிவு செய்ய நினைக்கிறேன்.