நவீன் உங்களின் பணி ஆசிரியர் தொழில். புத்தக வாசிப்பு, போதனை,எழுத்து,மொழி ஆதிக்கம் என தொடர் தேடல், கற்றல் உங்களின் திறனை வளர்த்து இலக்கியத்தின் பால் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டே Continue reading
கடிதம்/எதிர்வினை
எழுத்தும் வாழ்வும் : கடிதம்
வணக்கம். பெருமிகு ரெங்கசாமி ஐயாவின் நூல்கள் தமிழகத்தில் கிடைக்குமா? எப்படிப்பெருவது?
விஷ்வணி, சென்னை Continue reading
எழுத்தும் வாழ்வும் : மா.சண்முகசிவா கடிதம்
அன்பு நவீன்,
ஐயா ரெங்கசாமியும் இளங்கோவனும் நேரெதிர் ஆளுமைகள். அந்த சந்திப்பு எவ்வளவு அழகாக இருந்திருக்கும். அன்பும் மரியாதையும் கூடி வந்த அந்த உறவில் வேறுபட்ட பார்வைகள் கூட நெகிழ்ந்து கலக்கும் தருணங்கள் இருந்திருக்கும் . அதை பதிவு செய்திருக்கலாம். Continue reading
எழுத்தும் வாழ்வும் : கடிதங்கள்
தொடர்ந்து எழுத்தும் வாழ்வும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டே வருகிறேன். என் மனதில் ஐயா ரெங்காசாமியும் உங்களையும் கடந்து ஐயா மருத்துவர் சண்முகசிவா முன்னிலையில் வந்து நிற்கிறார். உங்களை சுற்றி யார் யார் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இருக்க வேண்டியவர் உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்கிறார் ஒரு நல்ல வழிகாட்டியாக. Continue reading
எழுத்தும் வாழ்வும் : கடிதம்
தொடர்ந்து எனது புளோக் வைரஸ் தாக்குதலுக்குட்படுகிறது. கடிதங்கள் அனுப்ப முடியவில்லை என சில நண்பர்கள் கூறினர். சிலரது கடிதங்கள் வந்தாலும் என்னால் பிரசுரிக்க முடியவில்லை. எனவே உங்கள் கடிதங்கள்/ கருத்துகளை என் மின்னஞ்சலுக்கே அனுப்பலாம். valllinamm@gmail.com
thiranthe kidakkum dairy…. innum niraiya aachiriyanggalum marmangkalum irukkumo? padikka aaval thoondukirathu… Navin nerattai othukki ezthunggal…aduttavar diaryai paddikkakkoodathu enbar. aanaal intha diaryyil padikka vendiya niraiya anubavangkal ullana… so plz continue…
N.Puspa
நல்ல தொடக்கம் நண்பரே… அயராமல் எழுதுங்கள்!
ஜான்சன்
இது பெரியவரைப் பற்றியா உங்களைப்பற்றியா? எதுவாகிலும் நல்ல நடை
சிந்து
ஹி ஹி ஹி ஹி: சாருவுக்கு பதில்
சாரு நிவேதிதா எழுதியுள்ள (http://charuonline.com/blog/?p=1503) கட்டுரையில் குறிப்பிடும் மலேசியப் பொடியன் நான்தான். இரண்டு நாள்களுக்கு முன்புதான் கண்ணாடியில் கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறது என கவனித்துப் பார்த்தேன். சாரு பொடியன் என்றவுடம் மகிழ்ச்சி பிடிபடவில்லை.
கடிதம்- நவீன் செல்வங்கலை
ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!
நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின் மேல் திணிக்கப்பட்டுள்ள கதைகளின் மேல் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை. வரலாற்றுக்கும் வரலாற்றுக்கதைக்குமான வேறுபாடு தெரியாமல் இருப்பதென்பதே இன்றைய அடிப்படை கல்விச்சூழல் முதல் கல்லூரி வரை உள்ள மிகப்பெரிய சிக்கல்.
கவிதையும் குழப்பமும்
ஒரு கவிதை விளங்கிக்கொள்ளவதில் வாசகனின் வாசிப்பு அனுபவத்திற்கு சம்பந்தம் உண்டா? வாசிப்புத்தளத்தில் ஓரளவாவது இயங்கிகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களே விளக்கம்பெற ஒரு சிலரை நாட வேண்டியிருக்கும்போது சாதாரண வாசகனை குழப்பி விடுவதில் என்ன பயன்? – விஜயலட்சுமி
விஜயா,ஏற்கனவே நான் இதற்கு பதில் சொன்னேன். இன்னும் தெளிவாக பதில் சொல்ல முயல்கிறேன். ஒரு அன்பர் , ‘உன்னால் முடியாவிட்டால் மக்களுக்குப் புரியும்படி கவிதை எழுதமுடியவில்லை என ஒப்புக்கொள் .நான் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் ‘ என வேறு சொல்லியுள்ளதை பின்னூட்டத்தில் படித்திருக்கலாம். நிச்சயமாக என்னால் முடியவில்லை. எல்லாருக்கும் புரியும்படி எழுத தெரியவில்லை. ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து அவர் சொல்லித்தரட்டும்.
புனிதத்தைக் களங்கடிக்கும் கலை
விஜயா, நான் உலகின் மிக முக்கியமான இரு கலை ஆளுமைகளை கொஞ்சம் அறிமுகம் செய்கிறேன். பின்னர் விரிவாகப் பேசலாம்.
எம்.எஃப்.உசைன் :
எம்.எஃப்.உசைன் (M F Husain) பற்றி கேள்வி பட்டிருக்கலாம். இந்தியாவின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞராக வர்ணிக்கப் படுகிறார் . உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன. ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது ஓவியங்களைக் காண : http://webneel.com/mf-husain-paintings-art-controversy-indian-artist
நண்பரின் ‘வலி’ எமக்கு புரிகிறது…
ஆழ்ந்து நோக்கியதன் விளைவாகத்தான் இக்கட்டுரை எழுந்திருக்கும் என நம்புகிறேன்.இந்நூலை நான் வாசித்ததில்லை. இருப்பினும் நண்பரின் இந்நூல் குறித்த பகிர்வினை வாசித்தப் பின்பு, ஒரு வேளை சீ. அருணின் கட்டுரைகள் வரலாறு குறித்த நுட்பமான பார்வை இல்லாதவரால் சான்றுகளாகக் கொள்ளப்பட்டால், எதிர் கால சந்ததியர்கள் பூனையை புலி எனக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆய்வுகள் வேறு, நம்பிக்கைகள் வேறு எனும் நிலைபாட்டினை முதலில் ஆய்வாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழி வழியாக முதலில் அறியவில்லை என்பது குற்றமாக இருந்த காலம் போய், சமிபக்காலமாக கள ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் சான்றுகளோடு பல ஆய்வாளர்கள், இதற்கு முன்பு நிறுவப்பட்ட கருத்துகளை தகர்த்து உண்மை சூழலை நிறுவியுள்ளனர் . இவற்றில் ஒன்றைக்கூடவா இவர் சான்றாகக் கொள்ளவில்லை?
வரலாற்றுக் குறிப்புகளை பதிவுச் செய்கையில் கால அளவீட்டு முறை என்பது தனியொரு பகுதியாகவே நிலைத்து நிற்கிறது. பல நூல்களில் ஒரே நிகழ்வானது பல்வேறு காலங்களில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டிருப்பது, ஆய்வாளர்களால் காலத்தை சரியான முறையில் கணக்கிட இயலாமல் போக்கினைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொறு ஆய்வாளனும் வரலாற்றை பதிவு செய்கையில் காலத்தை உய்த்துணர வேண்டும்.
உலகிலுள்ள தொன்மைச் சமுதாயங்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயம். தொன்மை மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயமும் அதன் படைப்பான தமிழ் மொழியும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. சமுதாய மாற்றமானது மொழியில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத பட்சத்தில் புதிய கருத்துகளும் பொருள்களும் உருவாகும். ஆனால் இம்மாற்றங்களின் கால நிலையையும், அதனால் எற்பட்ட விளைவுகளையும் ஆய்வாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதனை சீ. அருண் உள்ளார உணர்ந்திருந்தால் இந்நூலினை வெளியிடும் எண்ணமே அவருக்கு உதித்திருக்காது.