அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை (23.4.2017) மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேர்தல். நானும் அச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்தான். ராஜேந்திரன் தலைமையில் சடங்குகள் செய்ய மட்டுமே தகுதி உள்ளதாக மாறிவிட்ட அவ்வியக்கத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்து ஆண்டுகள் சில ஆகின்றன. இந்நிலையில் விரிவுரையாளர் மன்னார் மன்னன் அவர்களை ஒரு கண்துடைப்புக்காக ஒருதவணை தலைவராக நியமித்தக் கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே. பதவியைத் தக்க வைக்க ஆவல் இல்லாத; தன்னை மீறி புதியத்திட்டங்களை உருவாக்க முயலாத ஒருவரை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் பெ.ராஜேந்திரன். ஒருவர் இரு தவணைக்கு மேல் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்திய திருவிளையாடல் அது என அறிவுள்ளவர்கள் அறிவர்.
கடிதம்/எதிர்வினை
பெ.ராஜேந்திரன் : சொல்ல மறந்த கதை…
Dear Navin, Why are you always condemning Rajendran in your articles? He has done a lot of good thinks. He had helped many people. He has risen from the bottom to this level. He may have flaws but one should not always been criticized. We should always look at the both sides. Look in a broader view. He had helped you in many ways, personally too. You never talked about that. Hope you have not forgotten all the help he rendered to you. If you’re not thankful to people who have helped you then there is no point in being a writer. Don’t be an opportunist.
– Anbalagan.M
கடிதம்: நான் மணி மன்றத்தின் எதிரியல்ல!
நவீன். உன் அகப்பத்தில் நீயும் வல்லினம் குழுமத்தாரும் அடுக்கடுக்காய் சொன்ன பொய்களைப் பார்த்தேன். எழுத்துக்கூலியான உன் போன்றவர்கள் செய்யும் வேலை இது என நாங்கள் அறிவோம். காய்த்த மரம் கல்லடிப்படும். நாங்கள் காய்த்த மரம். மற்றவர்களைக் குறை சொல்லும் முன், நீ சமுதாயத்துக்கு என்ன செய்தாய்? ஆசிரியர் பணியில் இருக்கும் நீ, போதிப்பதால் மட்டும் சேவை செய்வதாகுமா? கவிதை எழுதுவது மட்டும் சமூக சேவையா? ஏன் உன்னால் மற்ற இயக்கங்கள் குறித்து பேச முடியவில்லை? பயமா? அவர்கள் நண்பர்கள் என்பதாலா? பொங்கல் கொண்டாடுவதில் உனக்கு என்ன தடை உள்ளது? பின் நவீனத்துவவாதிகள் நீயும் உன் வல்லினம் நண்பர்களும் என அறிவோம். உங்கள் கொள்கைகளை மலேசியத் தமிழர்கள் அனைவரும் பின் பற்ற வேண்டும் என நினைப்பது பேராசை. அவதூறும் பொய்யும் சொல்வதை நிறுத்து. மானியம் வாங்காமல் எப்படி அமைப்பை நடத்துவது? நீங்களெல்லாம் மானியம் வாங்குவதே இல்லையோ? மணிமன்றம் எதையுமே செய்யவில்லை என உன்னால் நிரூபிக்க இயலுமா? ஏன் மலாய்க்காரர்களின் இயக்கத்தில் உள்ளவர்கள் அரசியலில் இல்லையா? தமிழர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? ஏன் இந்த நண்டு வேலை?
விசுவாசி
மணிமன்றத்தின் வீழ்ச்சி!
அண்மையில் ஒரு புலனச் செய்தி வாசித்தேன். மொரீசியஸுக்கு மலேசியாவின் உள்ள ஓர் இலக்கிய அமைப்பு பயண ஏற்பாடு செய்கிறது. அங்கு சென்று ‘எழுத்தாளர் பயணிகள்’ சில குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டு சில மணி நேரம் பழக விடுவார்கள். பின்னர் நாடு திரும்பிய பின் ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் அவர்களிடம் புலனத்தில் தமிழில் உரையாட வேண்டும். இதன் மூலம் அங்குள்ள இளம் தலைமுறையினரின் தமிழை வளர்க்கலாம். இதை வாசிக்கும்போதே இதுபோன்ற அபரிமிதமான அறிவுஜீவிதத் திட்டத்தை மலேசியாவில் வாழும் ஒருவர் மட்டுமே உருவாக்க முடியும் என பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதாலும் புலனத் தகவல் சம்பந்தப்பட்டவரிடமிருந்து எனக்கு நேரடியாக வராததாலும் ஆறாவது மாதம் வரை காத்திருந்து யார் அந்த ‘ஆளுமை’ என்றும் 6000 ரிங்கிட் செலுத்தி இந்த உன்னதத் திட்டத்தில் பங்கெடுக்கும் சிந்தனையாளர்கள் யார் என்றும் தெரிந்துகொள்ளலாம்.
கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!
அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் கூறியது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை எப்படி அவ்வாறு கூற இயலும் என நமது அக்னிக் குஞ்சுகள் கொதித்து எழுந்தன.
மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மீதான அவதூறுக்கு முற்றுப்புள்ளி!
அண்மையில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தங்கள் அரவணைப்பில் வைத்து, அவர்களை மீள்உருவாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கும் அந்த அறவாரியத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பூச்சோங் முரளி போன்ற சிலரால் பரப்பப்பட்டது. சமூகத்தில் பல நல்ல செயல்திட்டங்களை உருவாக்கி முன்னெடுக்கும் வழக்கறிஞர் பசுபதி அவர்கள்மேல் கொண்ட தனிப்பட்ட காழ்ப்பால் பூச்சோங் முரளி பலமுறை இதுபோன்ற அவதூறுகளைப் பலகாலமாகப் பரப்பி வந்தது நாம் அறிந்ததே. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பரவிக்கொண்டிருந்த சூழலில் இது அவதூறு பரப்பும் நோக்கம் என்று உறுதியாக நம்ப தண்டிக்கப்பட்ட மாணவனின் தந்தையே சாட்சியாக நேர்காணல் வழங்கியுள்ளார்.
கடிதம்: தமிழ்ப்பள்ளி பற்றிய எனது அனுபவப் பகிர்வு!
70,80,90-ஆம் ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளியில் படித்தால் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெற முடியாது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. என் உறவினர் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தும், மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாததால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. 8 முறை ஜூலை தேர்வு எழுதியும் தேர்ச்சி அடையவில்லை. அதனால் என் அம்மாவுக்கும் என் உறவினருக்கும் இந்த எண்ணம் தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது. என் அம்மா நான் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காக தமிழ்ப்பள்ளியில் சேர்த்தார். என் உறவினர் மலாய்மொழிக்காகவே அவர் மகனை தேசிய பள்ளிக்கு அனுப்பினார். இருவருமே மலாய் மொழிக்கென்று எங்கள் இருவருக்கும் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ஊக்கம் கொடுத்தார்கள். என் உறவினருக்கு நான் தமிழ்ப்பள்ளி என்பதால் ரிமூஃ கிளாஸ் போவேன் என மிகவும் எதிர்ப்பார்த்தார். எஸ்.பி.எம் தேர்வு வந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்த நான் ஏ2 எடுத்தேன். மறு ஆண்டு எஸ்.பி.எம் எழுதிய என் தேசியப் பள்ளி தம்பிக்கு மலாய் மொழியில் 7டி கிடைத்தது. தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய மொழியில் புலமை இல்லாமல் போவதற்கும் சம்பந்தமே இல்லை என யார் வந்தாலும் சத்தியம் செய்வேன். தமிழ்ப்பள்ளி சேர்க்க பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் யாரும் இப்பொழுதெல்லாம் தமிழ்ப்பேசுவதில்லை. ஆங்கிலம் தான் வாழ்கிறது. பொதுவில் ஒரு கருத்தை எடுத்துரைக்க ஆங்கிலம் அவசியம். அதே போல, நமது இனம் பற்றிய அறிவை கூர்மையாக்கிக் கொள்ள தாய்மொழிக் கல்வி அவசியம். அதனை தமிழ்ப் பள்ளிகள் தான் தர முடியும்.
மோகனா
உதயசங்கரின் நேர்காணல்; எதிர்வினை
உதயசங்கர் எஸ்.பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து கூறிய அவதூறுகளுக்கு இன்னும் அவர் மன்னிப்பு எதுவும் கேட்காத சூழலில் தொடர்ந்து தனது முகநூலில் இப்பிரச்சனை குறித்து பேசுபவர்களை நக்கல் அடித்து வருகிறார். பொதுவாகவே உதயசங்கர் போன்ற அற்பமான அடையாளத்தேடிகளின் பாணி அது. இந்நிலையில் அவரது நேர்க்காணல் ஒன்றை வாரப்பத்திரிகை ஒன்று தன் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளது. நடப்பு சூழல் குறித்து உதயசங்கர் சொல்லும் பதில்கள் அனைத்துமே பசப்பலானவையாக உள்ளது. உதயசங்கர் பதில்களின் அடிப்படையில் இடைக்கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டியது நேர்காணல் செய்தவரின் பொறுப்பு. ஆனால், நேர்காணல் இன்னும் அச்சுக்கு வராத சூழலில் முகநூலில் அவர் பகிர்ந்திருந்த பதில்களைக் கொண்டு நாம் சில எதிர்க்கேள்விகளைக் கேட்கவேண்டியுள்ளது.
உதயசங்கர் எஸ்.பி … (கடிதங்கள்)
தமிழ்ப்பள்ளி குறித்த தங்கள் அக்கறை என்னை வெகுவாகக் கவர்ந்தது. கட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்தில் இருப்பதால் உடன்வர முடியவில்லை. ஆனால் மனதார வாழ்த்துகிறேன்.
உங்கள் நண்பன்
“திருட்டுத்தனத்தைப் போதிக்கும் தமிழ்ப்பள்ளிகள்” – உதயசங்கர் எஸ்.பி
நம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்குத் தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது.
