கடிதம்/எதிர்வினை

கவிதையில் உள்ளார்ந்த அர்த்தம்

படிமங்கள், குறியீடுகள் என்னவென்று விளங்காதபோது கவிதையின் உள்ளார்ந்த அர்த்தம் மறைந்து அக்கவிதை கொச்சை வார்த்தைகளால் ஆன, புனிதத்தை களங்கடிக்கும் குப்பையாக காட்சிபடுமே? – விஜயலட்சுமி

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’
Continue reading

பாமரனுக்கான கவிதை

வாசகனுக்கு குறிப்பாக பாமரனுக்கு நீங்கள் கூறும் படிமம், குறியீடு பற்றிய பிரக்ஞையே இல்லாதபோது அவர்கள் தங்கள் சிந்தனைக்குட்பட்டுதானே ஒரு கவிதையை வாசிப்பார்கள். அப்படியென்றால் உங்கள் கவிதை பாரமனை முழுமையாகச் சென்றடையாமல் பாதியிலேயே தேங்கி நிற்குமே?

விஜயா இலக்கியம் ஒரு கலை வடிவம். ஓவியம், இசை, சிற்பம், நடனம் போல இதுவும் ஒரு கலை வடிவம். மேற்சொன்ன கலை வடிவங்களுக்கு வெவ்வேறான மூலப்பொருள்கள் இருக்க இலக்கியத்துக்கு மொழியே மூலப்பொருள். அந்த மூலப்பொருள்தான் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் என பயன்பாட்டில் உள்ளன. இந்த மூலப்பொருள்தான் சக மனிதனுடனான உரையாடலுக்கு ஊடகமாக உள்ளது. எளிய மனிதனிலிருந்து அசாதாரண ஆளுமை கொண்ட மனிதர்கள் வரை மொழி பொது பயன்பாட்டில் உள்ளது.

எனவே எல்லோரும் அறிந்த மொழியில் ஒரு கலை உருவாக, அதை வாசிப்பு அறிமுகம் இல்லாத ஒருவன் அணுகும் போது பதற்றம் அடைகிறான். தான் வாழ்நாள் முழுக்கவும் பயன்படுத்திய ஒரு மொழி தனக்கு புரியாமல் இருப்பதில் கோபம் அடைகிறான். இந்தக் கோபத்தை நீங்கள் குறிப்பிடும் பாமரர்கள் அல்ல… பல்கலைக்கழக பேராசிரியர்களிடமே கண்டுள்ளேன் . இவர்கள் ஒரு நவீன ஓவியம் புரியாதது பற்றியோ, கர்நாடக இசையை ரசிக்க முடியாதது பற்றியோ, நவீன சிற்பங்கள் வடிவம் சிதைந்திருப்பதன் மர்மம் பற்றியோ, பரத அசைவுகளில் இருக்கும் புரியாத முத்திரைகள் பற்றியோ எவ்வித அசூயை உணர்வையும் அடைவதில்லை. காரணம் அவர்கள் அக்கலை குறித்த நுட்பங்கள் தங்களுக்குத் தெரியாது என அறிவர். அதை அறிய பயிற்சி தேவை என உணர்வர். ஆனால் இலக்கியம் என வந்துவிட்டால் மட்டும் இந்த சிந்தனை அவர்கள் யாருக்கும் எழுவதே இல்லை. காரணம் இலக்கியம் எனும் கலை மொழியோடு தொடர்பு பட்டிருக்கிறது.

எளிய மக்களுக்குப் புரியாத மேற்சொன்ன பிற கலைகள் குறித்து நாம் கவலை படுவதில்லை. வருத்தம் தெரிவிப்பதில்லை. ஆனால் இலக்கியம் எனும் கலை வடிவத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறோம். எம்.ஏ.நுஃமான் 1996 ல் எழுதிய ஒரு கட்டுரையில் தான் மேற்கொண்ட ஒரு ஆய்வைக் குறிப்பிட்டிருப்பார். மஹாகவியின் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி ‘ என்ற கவிதையை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து அதன் பொருளைக் கேட்டிருப்பார். மாணவர்கள் கூறிய பொருள்களை அந்தக் கட்டுரையில் கொடுத்திருப்பார். தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயிலும் அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்த வெவ்வேறு பொருளை கொடுத்திருப்பர். இத்தனைக்கும் எளிதாக அர்த்தம் கொள்ளக்கூடிய கவிதை அது.

விஜயா, உண்மையில் கவிதை சிலருக்குதான் புரியும்; சிலருக்குப் புரியாது என்பது முற்றிலும் தவறு . இன்னாருக்குப் புரியும் படி நான் எழுதப்போகிறேன் என்பது அபத்தம். பத்திரிகையில் தலைப்புச் செய்தியைக் கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் சூழலில், கவிதை எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்றோ பாமரனுக்கும் புரிய வேண்டும் என்றோ திட்டமிடுவதெல்லாம் நடவாத காரியம். நான் இங்கு கவிதை எளிய மனிதர்களுக்குப் புரியக்கூடாது என சொல்லவரவில்லை. ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பு சகல நிலைகளிலும் உள்ள மக்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சிதானே. அதைவிட அவனுக்கு வேறென்ன ஆனந்தம்.

ஆனால் அது வாசிப்புப் பயிற்சி மூலமே சாத்தியம் என்கிறேன். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் குறிப்பிடும் ‘பாமரர்களுக்கும்’ கவிதை சென்று சேறும். அதை அறிய படிமம், குறியீடெல்லாம் முக்கியமே இல்லை. கவிதையை உள்வாங்கும் மனம் மட்டுமே தேவை.

கவிதை புரியாதது ஏன்?

கருத்துகளையும் எண்ணவுணர்வுகளையும் சுருக்கமாக சொல்லும் மிகக் குறுகிய இலக்கிய வடிவமான கவிதை அனைவருக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம்தானே? – விஜயலட்சுமி

விஜயா, முதலில் உங்கள் கேள்விகளுக்கு நன்றி. ‘கடவுளின் மலம்’ கவிதை குறித்த சர்ச்சை எழுந்தபோது யாரும் நேரடியாகக் கேள்வி எழுப்பவில்லை. ஒரு நக்கல், சில வசைகள், உணர்ச்சிக் கொந்தளிப்பு என தொடர்ந்ததே தவிர யாரும் நேருக்கு நேராக எதிர்க்கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்குத் தெரியும் என்னிடம் பதில் உள்ளதென்று. அவர்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் நான் கூறும் பதிலைக் கடந்து விவாதிக்க அவர்களின் வாசிப்புப் பயிற்சி அதிகரிக்க வேண்டும் என்று.

Continue reading

நவரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான் (பீபல்சம்)

நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் கதையை அருவருப்பில்லாமல் வாசிக்க முடியவில்லை. எத்தனையோ நல்லவிசயம் இருக்க அருவருப்பு எதற்கு? திருக்குறளில் இல்லாத ஞானமா மற்ற நாட்டு தத்துவ ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள்? தமிழில் இல்லாததா? தொல்காப்பியத்தில் இல்லாததா? நீங்கள் எதையும் எழுதலாம் . ஆனால் அதை பிரசுரிக்கக் கட்டுப்பாடுகள் உண்டு என மறக்காதே. எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டனும் இப்படி புதைகுழி காட்டக்கூடாது. கவனம்!
Continue reading

படைப்பிலக்கியத்தின் வெற்றி

உங்கள் விளக்கத்துக்கு நன்றி நவீன். ஓரளவு தெளிவு பெற்றேன். ஆனாலும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. என்ன செய்யலாம் என இருக்கிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களும் தொடர்கின்றனவே. நாளிதல்களிலும்.  எதிரிகள் வண்டவாளங்களை நான் உங்களுக்குப் பட்டியல் இட்டிருந்தேன். தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கலாசாரம் குறித்து பேசுபவர்களின் படங்களைப் பார்த்தீர்களா?
santhalsanthal@gmail.com
Continue reading

இறுதியாக -தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 5

வணக்கம் ஐயா. தங்களின் விரிவான நான்கு பதில்களையும் படித்தேன். மிகுந்த விரிவான பதில்கள். எனக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. பொறுமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், உங்களையும் வல்லினத்தையும் தயாஜியையும் திட்டிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்ய முடியும்? என் அண்ணன் வழக்கறிஞர் என்பதால் அதில் உள்ள சில வரிகளை வைத்து வழக்குப் போடமுடியும் என்றார். இன்னும் ஒரு விளக்கம் மட்டும் கொடுத்தால் போதும். இந்தக் கதையைப் படிக்கும் போது எளிய வாசகம் குழம்ப மாட்டானா? அவன் இதை பின்பற்ற மாட்டானா? அப்புறம் கடவுள் என்பது எப்படி இருந்தாலும் கடவுள்தானே. அதை கடவுளாக பார்க்கிறோம். அதனால் அதில் ஆபாசம் இருக்குமா? இது என் தோழியின் கேள்வி. தங்கள் அக்கறைக்கு நன்றி. இனி தொடர்ந்து வல்லினத்தை வாசிப்பேன்.
durga6776@gmail.com

Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 4

ஒழுக்கமானவர்கள் போல உங்களையும் வல்லினத்தாரையும் ஏசிக்கொண்டிருக்கும் சிலரின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் போல. என் தோழியிடம் முக நூலில் எப்படிப் பேசினார்கள் என இந்த ஒழுக்கச்சீலர்களின் உண்மை முகத்தை வல்லினத்தில் காட்டுகிறேன். (எல்லாவற்றையும் சேகரித்து அனுப்பினால் வல்லினம் பிரசுரிக்குமா?)அதேபோல எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். தயாஜியின் சிறுகதையில் காளி என்ற பெண் தெய்வத்தின் மீது காமம் கொள்வது போல உள்ளது. இது முறையா? நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன். கடவுளின் மேல் காமம் கொள்வதுதான் நவீன இலக்கியமா ? அல்லது பின் நவீன இலக்கியமா?

santhalsanthal@gmail.com
Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 3

தன் தாயையே காம நோக்கோடு பார்த்ததற்காக தன் தவறை உணர்ந்து தொடக்கத்திலேயே தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். அப்படி மன்னிப்பு கேட்கும் போது தான் எப்படி இந்த காரியத்தை செய்யத் துணிந்தேன் என்பதை அன்றைய நாளில் தான் பார்த்த புளூ பிலிமை காரணம் காட்டுகிறான். மனசாட்சியின் கோரப்பிடியில் சிக்கி, சித்திரவதை அனுபவிக்கும் அவன் தான் பார்த்த புளூ பிலிமில் கண்ட காட்சிகளை அணு அணுவாக ரசித்து தாயிடம் விளக்குவது ஏன்?

Continue reading

ஆதவன் தீட்சண்யாவின் கடிதம்

1.”ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)

2. “தாய், மகள், சகோதரி – எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்” என்கிற மனுஸ்மிருதியின் உத்தரவு அன்றிருந்த நிலைமையை விளக்கப் போதுமானது.

– பண்டைய அமைப்புமுறை: ஆரிய சமூகத்தின் நிலை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 7 பக்கம் 12 மற்றும் 389

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 2

நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘oedipus complex’ மற்றும் தாய் வழி சமூகத்தில் உள்ள உறவு முறை எப்படி நம் தமிழ் சமூகத்துடன் தொடர்பு கொள்வது? தமிழ் படைப்பாக இருக்கும் இதை படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் மேல் பகிர்ந்துள்ள கருத்தும் கோட்பாடுகளும் அந்த அந்த சமூக கட்டமைப்புகளில் காலகோலத்தோடு தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு தமிழ் வாசகனுக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளன் ஒரு சமூக மறுமலர்ச்சியாளனாக கண்டிப்பாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் அந்தச் சமூகத்தோடு / சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துகளை அல்லது சற்று அப்பாற்பட்ட கருத்துகளை வைக்கும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சற்று யோசிக்கலாம்.

Continue reading