கடிதம்/எதிர்வினை

கடிதம்- நவீன் செல்வங்கலை

நண்பரின் ‘வலி’ எமக்கு புரிகிறது… :) ஆழ்ந்து நோக்கியதன் விளைவாகத்தான் இக்கட்டுரை எழுந்திருக்கும் என நம்புகிறேன்.இந்நூலை நான் வாசித்ததில்லை. இருப்பினும் நண்பரின் இந்நூல் குறித்த பகிர்வினை வாசித்தப் பின்பு, ஒரு வேளை சீ. அருணின் கட்டுரைகள் வரலாறு குறித்த நுட்பமான பார்வை இல்லாதவரால் சான்றுகளாகக் கொள்ளப்பட்டால், எதிர் கால சந்ததியர்கள் பூனையை புலி எனக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆய்வுகள் வேறு, நம்பிக்கைகள் வேறு எனும் நிலைபாட்டினை முதலில் ஆய்வாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழி வழியாக முதலில் அறியவில்லை என்பது குற்றமாக இருந்த காலம் போய், சமிபக்காலமாக கள ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் சான்றுகளோடு பல ஆய்வாளர்கள், இதற்கு முன்பு நிறுவப்பட்ட கருத்துகளை தகர்த்து உண்மை சூழலை நிறுவியுள்ளனர் . இவற்றில் ஒன்றைக்கூடவா இவர் சான்றாகக் கொள்ளவில்லை?

வரலாற்றுக் குறிப்புகளை பதிவுச் செய்கையில் கால அளவீட்டு முறை என்பது தனியொரு பகுதியாகவே நிலைத்து நிற்கிறது. பல நூல்களில் ஒரே நிகழ்வானது பல்வேறு காலங்களில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டிருப்பது, ஆய்வாளர்களால் காலத்தை சரியான முறையில் கணக்கிட இயலாமல் போக்கினைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொறு ஆய்வாளனும் வரலாற்றை பதிவு செய்கையில் காலத்தை உய்த்துணர வேண்டும்.

உலகிலுள்ள தொன்மைச் சமுதாயங்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயம். தொன்மை மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயமும் அதன் படைப்பான தமிழ் மொழியும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. சமுதாய மாற்றமானது மொழியில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத பட்சத்தில் புதிய கருத்துகளும் பொருள்களும் உருவாகும். ஆனால் இம்மாற்றங்களின் கால நிலையையும், அதனால் எற்பட்ட விளைவுகளையும் ஆய்வாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதனை சீ. அருண் உள்ளார உணர்ந்திருந்தால் இந்நூலினை வெளியிடும் எண்ணமே அவருக்கு உதித்திருக்காது.

ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

tamilar_thadangalநான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின் மேல் திணிக்கப்பட்டுள்ள கதைகளின் மேல் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை. வரலாற்றுக்கும் வரலாற்றுக்கதைக்குமான வேறுபாடு தெரியாமல் இருப்பதென்பதே இன்றைய அடிப்படை கல்விச்சூழல் முதல் கல்லூரி வரை உள்ள மிகப்பெரிய சிக்கல்.

Continue reading

கவிதையும் குழப்பமும்

ஒரு கவிதை விளங்கிக்கொள்ளவதில் வாசகனின் வாசிப்பு அனுபவத்திற்கு சம்பந்தம் உண்டா? வாசிப்புத்தளத்தில் ஓரளவாவது இயங்கிகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களே விளக்கம்பெற ஒரு சிலரை நாட வேண்டியிருக்கும்போது சாதாரண வாசகனை குழப்பி விடுவதில் என்ன பயன்? – விஜயலட்சுமி

விஜயா,ஏற்கனவே நான் இதற்கு பதில் சொன்னேன். இன்னும் தெளிவாக பதில் சொல்ல முயல்கிறேன். ஒரு அன்பர் , ‘உன்னால் முடியாவிட்டால் மக்களுக்குப் புரியும்படி கவிதை எழுதமுடியவில்லை என ஒப்புக்கொள் .நான் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் ‘ என வேறு சொல்லியுள்ளதை பின்னூட்டத்தில் படித்திருக்கலாம். நிச்சயமாக என்னால் முடியவில்லை. எல்லாருக்கும் புரியும்படி எழுத தெரியவில்லை. ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து அவர் சொல்லித்தரட்டும்.

Continue reading

புனிதத்தைக் களங்கடிக்கும் கலை

விஜயா, நான் உலகின் மிக முக்கியமான இரு கலை  ஆளுமைகளை கொஞ்சம் அறிமுகம் செய்கிறேன். பின்னர் விரிவாகப் பேசலாம்.

எம்.எஃப்.உசைன் :
எம்.எஃப்.உசைன் (M F Husain) பற்றி கேள்வி பட்டிருக்கலாம்.  இந்தியாவின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞராக வர்ணிக்கப் படுகிறார் . உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன. ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது ஓவியங்களைக் காண : http://webneel.com/mf-husain-paintings-art-controversy-indian-artist

Continue reading

கவிதையில் உள்ளார்ந்த அர்த்தம்

படிமங்கள், குறியீடுகள் என்னவென்று விளங்காதபோது கவிதையின் உள்ளார்ந்த அர்த்தம் மறைந்து அக்கவிதை கொச்சை வார்த்தைகளால் ஆன, புனிதத்தை களங்கடிக்கும் குப்பையாக காட்சிபடுமே? – விஜயலட்சுமி

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’
Continue reading

பாமரனுக்கான கவிதை

வாசகனுக்கு குறிப்பாக பாமரனுக்கு நீங்கள் கூறும் படிமம், குறியீடு பற்றிய பிரக்ஞையே இல்லாதபோது அவர்கள் தங்கள் சிந்தனைக்குட்பட்டுதானே ஒரு கவிதையை வாசிப்பார்கள். அப்படியென்றால் உங்கள் கவிதை பாரமனை முழுமையாகச் சென்றடையாமல் பாதியிலேயே தேங்கி நிற்குமே?

விஜயா இலக்கியம் ஒரு கலை வடிவம். ஓவியம், இசை, சிற்பம், நடனம் போல இதுவும் ஒரு கலை வடிவம். மேற்சொன்ன கலை வடிவங்களுக்கு வெவ்வேறான மூலப்பொருள்கள் இருக்க இலக்கியத்துக்கு மொழியே மூலப்பொருள். அந்த மூலப்பொருள்தான் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் என பயன்பாட்டில் உள்ளன. இந்த மூலப்பொருள்தான் சக மனிதனுடனான உரையாடலுக்கு ஊடகமாக உள்ளது. எளிய மனிதனிலிருந்து அசாதாரண ஆளுமை கொண்ட மனிதர்கள் வரை மொழி பொது பயன்பாட்டில் உள்ளது.

எனவே எல்லோரும் அறிந்த மொழியில் ஒரு கலை உருவாக, அதை வாசிப்பு அறிமுகம் இல்லாத ஒருவன் அணுகும் போது பதற்றம் அடைகிறான். தான் வாழ்நாள் முழுக்கவும் பயன்படுத்திய ஒரு மொழி தனக்கு புரியாமல் இருப்பதில் கோபம் அடைகிறான். இந்தக் கோபத்தை நீங்கள் குறிப்பிடும் பாமரர்கள் அல்ல… பல்கலைக்கழக பேராசிரியர்களிடமே கண்டுள்ளேன் . இவர்கள் ஒரு நவீன ஓவியம் புரியாதது பற்றியோ, கர்நாடக இசையை ரசிக்க முடியாதது பற்றியோ, நவீன சிற்பங்கள் வடிவம் சிதைந்திருப்பதன் மர்மம் பற்றியோ, பரத அசைவுகளில் இருக்கும் புரியாத முத்திரைகள் பற்றியோ எவ்வித அசூயை உணர்வையும் அடைவதில்லை. காரணம் அவர்கள் அக்கலை குறித்த நுட்பங்கள் தங்களுக்குத் தெரியாது என அறிவர். அதை அறிய பயிற்சி தேவை என உணர்வர். ஆனால் இலக்கியம் என வந்துவிட்டால் மட்டும் இந்த சிந்தனை அவர்கள் யாருக்கும் எழுவதே இல்லை. காரணம் இலக்கியம் எனும் கலை மொழியோடு தொடர்பு பட்டிருக்கிறது.

எளிய மக்களுக்குப் புரியாத மேற்சொன்ன பிற கலைகள் குறித்து நாம் கவலை படுவதில்லை. வருத்தம் தெரிவிப்பதில்லை. ஆனால் இலக்கியம் எனும் கலை வடிவத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறோம். எம்.ஏ.நுஃமான் 1996 ல் எழுதிய ஒரு கட்டுரையில் தான் மேற்கொண்ட ஒரு ஆய்வைக் குறிப்பிட்டிருப்பார். மஹாகவியின் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி ‘ என்ற கவிதையை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து அதன் பொருளைக் கேட்டிருப்பார். மாணவர்கள் கூறிய பொருள்களை அந்தக் கட்டுரையில் கொடுத்திருப்பார். தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயிலும் அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்த வெவ்வேறு பொருளை கொடுத்திருப்பர். இத்தனைக்கும் எளிதாக அர்த்தம் கொள்ளக்கூடிய கவிதை அது.

விஜயா, உண்மையில் கவிதை சிலருக்குதான் புரியும்; சிலருக்குப் புரியாது என்பது முற்றிலும் தவறு . இன்னாருக்குப் புரியும் படி நான் எழுதப்போகிறேன் என்பது அபத்தம். பத்திரிகையில் தலைப்புச் செய்தியைக் கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் சூழலில், கவிதை எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்றோ பாமரனுக்கும் புரிய வேண்டும் என்றோ திட்டமிடுவதெல்லாம் நடவாத காரியம். நான் இங்கு கவிதை எளிய மனிதர்களுக்குப் புரியக்கூடாது என சொல்லவரவில்லை. ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பு சகல நிலைகளிலும் உள்ள மக்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சிதானே. அதைவிட அவனுக்கு வேறென்ன ஆனந்தம்.

ஆனால் அது வாசிப்புப் பயிற்சி மூலமே சாத்தியம் என்கிறேன். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் குறிப்பிடும் ‘பாமரர்களுக்கும்’ கவிதை சென்று சேறும். அதை அறிய படிமம், குறியீடெல்லாம் முக்கியமே இல்லை. கவிதையை உள்வாங்கும் மனம் மட்டுமே தேவை.

கவிதை புரியாதது ஏன்?

கருத்துகளையும் எண்ணவுணர்வுகளையும் சுருக்கமாக சொல்லும் மிகக் குறுகிய இலக்கிய வடிவமான கவிதை அனைவருக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம்தானே? – விஜயலட்சுமி

விஜயா, முதலில் உங்கள் கேள்விகளுக்கு நன்றி. ‘கடவுளின் மலம்’ கவிதை குறித்த சர்ச்சை எழுந்தபோது யாரும் நேரடியாகக் கேள்வி எழுப்பவில்லை. ஒரு நக்கல், சில வசைகள், உணர்ச்சிக் கொந்தளிப்பு என தொடர்ந்ததே தவிர யாரும் நேருக்கு நேராக எதிர்க்கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்குத் தெரியும் என்னிடம் பதில் உள்ளதென்று. அவர்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் நான் கூறும் பதிலைக் கடந்து விவாதிக்க அவர்களின் வாசிப்புப் பயிற்சி அதிகரிக்க வேண்டும் என்று.

Continue reading

நவரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான் (பீபல்சம்)

நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் கதையை அருவருப்பில்லாமல் வாசிக்க முடியவில்லை. எத்தனையோ நல்லவிசயம் இருக்க அருவருப்பு எதற்கு? திருக்குறளில் இல்லாத ஞானமா மற்ற நாட்டு தத்துவ ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள்? தமிழில் இல்லாததா? தொல்காப்பியத்தில் இல்லாததா? நீங்கள் எதையும் எழுதலாம் . ஆனால் அதை பிரசுரிக்கக் கட்டுப்பாடுகள் உண்டு என மறக்காதே. எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டனும் இப்படி புதைகுழி காட்டக்கூடாது. கவனம்!
Continue reading

படைப்பிலக்கியத்தின் வெற்றி

உங்கள் விளக்கத்துக்கு நன்றி நவீன். ஓரளவு தெளிவு பெற்றேன். ஆனாலும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. என்ன செய்யலாம் என இருக்கிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களும் தொடர்கின்றனவே. நாளிதல்களிலும்.  எதிரிகள் வண்டவாளங்களை நான் உங்களுக்குப் பட்டியல் இட்டிருந்தேன். தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கலாசாரம் குறித்து பேசுபவர்களின் படங்களைப் பார்த்தீர்களா?
santhalsanthal@gmail.com
Continue reading

இறுதியாக -தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 5

வணக்கம் ஐயா. தங்களின் விரிவான நான்கு பதில்களையும் படித்தேன். மிகுந்த விரிவான பதில்கள். எனக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. பொறுமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், உங்களையும் வல்லினத்தையும் தயாஜியையும் திட்டிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்ய முடியும்? என் அண்ணன் வழக்கறிஞர் என்பதால் அதில் உள்ள சில வரிகளை வைத்து வழக்குப் போடமுடியும் என்றார். இன்னும் ஒரு விளக்கம் மட்டும் கொடுத்தால் போதும். இந்தக் கதையைப் படிக்கும் போது எளிய வாசகம் குழம்ப மாட்டானா? அவன் இதை பின்பற்ற மாட்டானா? அப்புறம் கடவுள் என்பது எப்படி இருந்தாலும் கடவுள்தானே. அதை கடவுளாக பார்க்கிறோம். அதனால் அதில் ஆபாசம் இருக்குமா? இது என் தோழியின் கேள்வி. தங்கள் அக்கறைக்கு நன்றி. இனி தொடர்ந்து வல்லினத்தை வாசிப்பேன்.
durga6776@gmail.com

Continue reading