‘ஜகாட்’ வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் சஞ்சை படைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாச்சாய்’. ‘ஜகாட்’ திரைப்படத்தில் வரும் சிறுவன், இளைஞனானப்பின் தேர்வு செய்யும் பாதை இருள் நிரம்பியதாக இருந்தால் அந்தப் பயணம் எவ்வாறு அமையும் எனும் அடிப்படையில் ‘மாச்சாய்’ இயக்கப்பட்டதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கான முகாந்திரம் இப்படத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, இப்படத்தில் வரும் சியாம் தனி கதாபாத்திரம். அவன் வாழ்க்கையின் சிக்கல்களும் முற்றிலும் வேறானவை.
Continue readingசினிமா
பறந்து போகலாம்

பெற்றோரின் வேலைச் சூழலால், வீட்டில் நாள் முழுவதும் பூட்டி வைக்கப்படும் அன்பு எனும் சிறுவன், தன்னைச் சாமர்த்தியமாக வீட்டிலிருந்து விடுவித்துக்கொண்டதோடு தன் பெற்றோருக்கும் இறக்கைகள் உள்ளன என நினைவுறுத்தி அவர்களையும் பறக்க வைக்கும் படம் ‘பறந்து போ’.
Continue readingபொன்னியின் செல்வன் திரைப்படம் என்னை ஏன் கவரவில்லை!

பொன்னியின் செல்வன் வரலாற்றின் துளிகளைக் கோர்த்து கல்கி எழுதிய தொடர்கதை. என் பதின்ம வயதில் உற்சாகத்தை ஊட்டிய நாவல். பாயா பெசாரில் இருந்த ‘வீரா நாவல்’ புத்தகக் கடையில் பதினேழு வயதில் வேலை செய்தபோது மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து முடித்த புனைவு அது. இதைச் சொல்லக் காரணம் பதினேழு வயது கொண்டவனுக்குக்கூட புரியும்படியாகத்தான் கல்கி அந்நாவலை எழுதியுள்ளார் என்பதுதான். என் அடுத்தகட்ட வாசிப்பு சுந்தரராமசாமியில் இருந்து தொடங்கியபோது ‘பொன்னியின் செல்வன்’ வணிக இலக்கிய வகையைச் (popular literature) சார்ந்தது எனப் புரிந்தது. காட்சி விவரணைகளற்று, கதாசிரியர் குறுக்கிட்டுப் பேசும் எளிய மொழியிலான நாவல். எனவே பொதுவாசகர்களுக்கு அது அனைத்தையும் எடுத்துக்கூறும் தன்மையில் புனையப்பட்டதை அறிந்துகொண்டேன். தொடர்கதை அம்சம்கொண்ட அந்த நாவலின் பல கூறுகளை வெவ்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் பின்னாட்களில் பார்த்துள்ளேன். இன்று எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும்போது எவ்வளவு கவனமில்லாமல் அணுகுவேனோ அதே மதிப்புடன்தான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலையும் இன்று வாசித்தால் அணுகக்கூடும்.
Continue readingபூச்சாண்டி: குட்டையில் சிந்திய ஒரு துளி நஞ்சு!

24.1.2022 – சன்வே வெலோசிட்டி பேரங்காடியில் ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. நண்பர் செல்வம் அழைத்ததால் திரையரங்கம் சென்றேன். அவர் அப்படத்தில் பணியாற்றியிருந்தார். இப்படத்தை ஜே. கே. விக்கி (விக்னேஸ்வரன் கலியபெருமாள்) இயக்கியுள்ளார். ஜே. கே. விக்கி திரை உலகில் மட்டுமல்லாமல் பொதுத்தளத்திலும் நன்கு அறியப்பட்டவர். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாயாவுக்குச் சோழர்கள் வருகை என தொடர்ந்து மேடைகளில் பேசி வருபவர்.
Continue readingஅகிராவின் கண்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில் நுழைய முடியாமல் கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில் மகத்தான படைப்புகளில் உழல்வதில் இருந்து மனம் விடுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.
Continue readingமெட்ரோ மாலை: தாவலை வேண்டும் கலை
சட்ட: விளையாட்டு ரௌடிகளும் விபரீத கலை முயற்சியும்
‘சட்ட’ திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வந்தது முதல், சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். மலேசியத் திரைப்படங்களைச் சில காலமாகவே தாமதித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவதுண்டு. திரையரங்கில் சென்று பார்க்கும்போது அவசியம் இல்லாமல் அது குறித்து ஏதும் கருத்து சொல்ல வேண்டி வரும் (வாயை மூடிக்கொண்டும் இருக்க முடியாது அல்லவா) அப்படி ஏதாவது மலேசியப்படத்தைப் பற்றி எதிர்மறையாக எழுதிவிட்டால் மலேசியாவில் திரைப்படத்துறை வளராமல் இருக்க என்னைப் போன்றவர்கள்தான் நண்டுகளாக இருந்து செயல்படுவதாக வசைகள் பறக்கும். எதற்கு வம்பு?!
பேரன்பு: யாரைக்காட்டிலும் பாப்பா ஆசீர்வதிக்கப்பட்டவள்
ராமின் திரைப்படங்களின் கதை என்பது வாழ்வில் நாம் கண்டுகொள்ளாமல் அல்லது கண்டுகொள்ள விரும்பாமல் அகலும் தருணங்களை கேள்விகளாக முன்னிறுத்துபவை. அந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடி ஆராய்வதே அவரது திரைக்கதை. திரைப்படத் தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றியும் அதைச் சார்ந்த இசை மற்றும் ஒளிப்பதிவின் பாங்கு பற்றியும் அறியாத நான் சினிமா எனும் கலை வடிவத்தின் மொழி என்னுள் கடத்தும் உணர்ச்சிகளையும் திரைக்கதை தன்னுள்ளே கொண்டுள்ள அரசியலுக்கும் உளவியலுக்கும் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பதையும் மட்டுமே கவனிக்கிறேன். தொடர்ந்து ராமின் திரைப்படங்களைப் பார்த்து வருபவனாக எனக்கு அவர் நேர்மையான இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எல்லா பந்தும் அடிப்பதற்கல்ல: M.S.Dhoni: Untold story
மலேசியாவில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றல்ல. ஆனால், சச்சின், தோனி போன்ற பெயர்கள் பலரும் அறிந்ததுதான். இன்று தொலைக்காட்சியில் M.S.Dhoni திரைப்படம் பார்த்தேன்.
வெற்றியடைந்தவர்களின் வாழ்வை வாசிப்பதிலும் திரைப்படமாகப் பார்ப்பதிலும் எனக்கு நிறையவே விருப்பம் உண்டு. அதில் வெளியில் தெரியாத அவ்வளவு தோல்விகளும் அவ்வளவு ரணங்களும் இருப்பதுதான் முக்கியக்காரணம். அவர்களின் தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் நமது நிகழ்கால ரணங்களை சாதாரணமாக்கிவிடும் வல்லமை உண்டு.
‘அப்பா’ : சப்பென்று போன சமையல்!
மலேசிய இலக்கியச் சூழலில் மு.வரதராசன் நாவல்கள் குறித்து விமர்சனம் வைக்கும்போது அதற்கு எதிர்வினையாக நம்முன் வீசப்படுவது அதில் உள்ளடங்கியுள்ள அறநெறி கருத்துகள்தான். கதைமாந்தர்கள் சில கொள்கைகளின் பிரதிநிதிகளாக உருவெடுத்து, வாசகர்கள் முன் வைக்கும் வாதங்கள்தான் அவற்றில் உரையாடல்களாக இருக்கும். மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைக்கருத்துகளும் அதில் உள்ளடங்கியுள்ளதாக வாதிடப்படும். எனவே அது மாபெரும் இலக்கியமாகப் போற்றப்படும்.

