நேற்று ‘ஜகாட்’ திரைப்படத்தின் சிறப்புப் திரையிடலுக்குப் போயிருந்தேன். இவ்வாறு நான் போகும் இரண்டாவது திரைப்படம் இது. முதல் படம் ‘வெண்ணிர இரவுகள்’. அதில் கதாநாயகி எழுதும் வலைப்பூவின் ‘குரங்கு – அணில்’ கதை தொடரை எழுதும் பணி எனது. ‘ஜகாட்’ திரைப்பட கதை உருவாக்கத்தில் நான் பங்கு பெற்றிருந்தேன். இயக்குனர் சஞ்சை கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படத்தின் கதையை ஒரு சிறுகதையாக எழுதியபோதே முழுமையாக அதன் அசல் தன்மையை உள்வாங்க முடிந்தது. அதன் அரசியல் எனக்கு உவப்பானதாக இருந்தது. இன்றோடு மூன்றாவது முறை அப்படத்தைப் பார்க்கிறேன். இது செறிவு செய்யப்பட்ட இறுதி வடிவம். முந்தைய இரண்டு வடிவங்களைக் காட்டிலும் கூடுதல் விறுவிறுப்பு இணைந்துள்ளது.
சினிமா
‘ஜகாட்’ திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்க வேண்டும்… 3
கல்விச்சூழலை விமர்சிப்பதாக இதுவரை தமிழில் சில படங்கள் வந்துள்ளன. இதில் ‘சாட்டை’ மற்றும் ‘தங்கமீன்’ திரைப்படங்கள் மீண்டும் ‘வெற்றி’ எனும் போதை குறித்தே பேசுகின்றன. கெட்டிக்காரன் என்பவன் ஏதோ ஒன்றில் வெற்றிப்பெறுபவன் எனும் பழைய சூத்திரத்தைப் புதிய அம்மியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கும் படங்கள் அவை. அமீர் கானின் ‘taare zameen par’ மற்றும் ‘3 idiots’ இரண்டும் முக்கியமான திரைப்படங்கள். மிக கவனமாகக் கல்விச்சூழலின் மீது விமர்சனத்தை வைப்பவை. அமீர் கான் போன்ற கலைஞர்களால்தான் அது சாத்தியமாகிறது. அதற்கு மிக முக்கியக்காரணம் அரசியல் தெளிவுதான்.
ஜகாட் : மலேசியாவின் முதல் தமிழ் லும்பன் திரைப்படம்! … 2
ஜகாட் திரைப்படம் குறித்து… 1
மலேசியத் தமிழ்த்திரைப்படங்கள் குறித்த எதிர்மறையான பார்வைகளே பெரும்பாலும் வருவதுண்டு. ஏதோ மலேசியக் கலைஞர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ரீதியில் பேசும் ரசிகர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக வரும். கலைஞர்களும் ‘உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு தாங்க… ஆதரவு தாங்க…’ என நேர்க்காணலில் கெஞ்சுவதைப் பார்க்கையில் இவ்வளவுதானா இந்தப்படைப்பாளியின் தரம் என வருத்தமாகவே இருக்கும். இதே நிலையைதான் நான் இலக்கிச்சூழலிலும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன். இவ்விடயத்தை இரண்டு விதமாக அணுக வேண்டியுள்ளது.
என் முதல் குறும்படம்
பிகே: உங்களைப் படைத்த கடவுளை நான் எதிர்க்கவில்லை; நீங்கள் படைத்த கடவுளைதான் நான் மறுக்கிறேன்
கடவுள் எனும் கருத்தாக்கம் குறித்த விமர்சனங்களோடு தமிழில் சில திரைப்படங்கள் வந்திருக்கவே செய்கின்றன. உடனடியாக எனக்கு இருவர் நினைவுக்கு வருகிறார்கள். முதலாமவர் வேலுபிரபாகரன். மற்றவர் கமலஹாசன்.
வேலுபிரபாகரன் ஆக்கங்கள் எவ்வித கலை உணர்வும் இல்லாதவர்கள் அல்லது எதுகுறித்தும் சிந்திக்காமல், உரத்து எதிர்ப்பதாலேயே அது புரட்சியாகிவிடும் என நம்புபவர்களுக்குத் தோதான திரைப்படங்களாக இருக்கும். அவை வெறும் கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டும் நம்புபவை. கமல் படங்கள் அப்படியல்ல. மேலோட்டமாகப் பார்க்கும் போது கலை போல தோன்றும். ஆனால், அவை ஆபத்தானவை. இஸ்லாமிய வெறுப்பை உமிழ்பவை. கடவுள் எனும் பிம்பத்தை எதிர்த்துக்கொண்டே மதச்சார்போடு அரசியல் பேசுபவை.
பொதுவாகவே நம்மிடம் இதுபோன்றவர்களின் குரல்களை வகுத்துப்பார்க்கும் பழக்கம் இருப்பதில்லை. மிக மேலோட்டமாக ஒரு கலைப்படைப்பை அணுகி ஒரு வகைமைக்குள் கொண்டுவர மெனக்கெடுகிறோம். புரட்சியாளர்களைக் காண்பதில் அத்தனை ஆர்வம் நமக்கு.
காவியத்தலைவன் : கலையின் காத்திரம்
நான் சினிமா விமர்சகன் இல்லை. இதை பலமுறை பல சூழலில் சொல்லியிருக்கிறேன். இதை இப்படி அழுத்தமாகச் சொல்லக்காரணம், அவ்வாறான போலி அடையாளம் எப்போதும் என்மீது விழக்கூடாது என்பதால்தான். சினிமா என்பது பல்வேறு கலைகளின் கூட்டு வடிவமைப்பு. இசை, ஒப்பனை, வசனம், ஒளி, ஒலி, பாடல், நடனம், நடிப்பு என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ள அதில் ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு சினிமா விமர்சனம் செய்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம். அல்லது நூறு படங்களுக்கு மேல் ஒருவன் பார்த்துவிட்டால் அவன் செய்யும் விமர்சனங்கள் நம்பகத்தன்மையானவை என்பதெல்லாம் வேடிக்கை.
வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!
இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும் அடிப்படையான தரம் இல்லாமல் அது குறித்து நான் ஒருவார்த்தைகூட பேசுவதில்லை. ஒருவேளை ஒரு குப்பை தேவைக்கு மீறி கொண்டாடப்பட்டால் இளம் ரசிகர்களின், வாசகர்களின் குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதை விமர்சிக்கலாம். அது குப்பை என சுட்டிக்காட்டலாம். அதேவேளையில் , மலேசியாவில் கலை முயற்சிகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது அது குறித்து மௌனமாக இருப்பதும் அதைவிட கேவலமானதுதான். நாம் அது குறித்து பேச வேண்டியுள்ளது. அதன் நகர்ச்சிக்கு நம்மாலானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.
தங்க மீன்கள் ; குளம் கானலாகிய கதை
திட்டமிடப்படாமல் பதிவாகும் நமது புகைப்படம் நமக்கு அத்தனை நெகிழ்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் சலிக்காமல் நாம் அதை பார்க்கிறோம். அதில் தெரிவது நாம் புரிந்து வைத்திருக்கும் நாம் அல்ல. சிரிப்பில், அழுகையில், மௌனத்தில் , கோபத்தில் நமது முகம் வேறொன்றாக இருக்கிறது. நாம் நமது வேறொரு முகத்தைப் பார்க்கிறோம். அதில் அவ்வளவு இஷ்டம் காட்டுகிறோம். அதில்தான் உண்மை நெருக்கமாக உள்ளது. அதிலும் பிரக்ஞையற்ற நமது குழந்தை பருவங்களின் புகைப் படங்கள் நமது பாதுகாப்பில் எப்போதும் இருக்கின்றன.
சாட்டை : ஒரு மீள் பார்வையில்…

சாட்டை திரைப்படம் குறித்து நண்பர்கள் பலரும் சொல்லியிருந்தனர். பார்ப்பதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். தாமதமாகத்தான் தொலைக்காட்சியில் தங்கத்திரையில் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்த்த உடனே படம் கவர்ந்தது. தங்கத்திரையில் அம்மாதம் முழுவதும் ஒரே படத்தை ஒளிபரப்புவார்கள் என்பதால் மீண்டும் சில முறை அப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்தடுத்த முறை பார்த்தப் பின்பே நான் அப்படத்தை ஓர் ஆசிரியராக மட்டுமே இருந்து பார்த்ததை அறிந்துகொண்டேன்.
Continue reading

